Monday, April 17, 2017

சந்தீப் சக்சேனா தேர்தல் ஆணையத்தில் துணை தேர்தல் அதிகாரியாக பணி புரிகிறார்.

தேர்தல் ஆணையத்தில் சசி, தினகரனுக்காக புரோக்கர் வேலை... மாஜி ஐஏஎஸ் அதிகாரி பவன் ரெய்னா சிக்குகிறார்!
இந்திய தேர்தல் ஆணையத்தில் சசிகலா, டிடிவி தினகரனுக்காக புரோக்கர் வேலை பார்த்ததாக தமிழக மாஜி ஐஏஎஸ் அதிகாரி பவன் ரெய்னா சிக்கியுள்ளார். தற்போது டெல்லி போலீசார் பவன் ரெய்னாவை விசாரிக்க முடிவு செய்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் பவன் ரெய்னா, சந்தீப் சக்சேனா. இதில் பவன் ரெய்னா ஓய்வு பெற்றுவிட்டார். சந்தீப் சக்சேனா தேர்தல் ஆணையத்தில் துணை தேர்தல் அதிகாரியாக பணி புரிகிறார்.

மெயின் புரோக்கர்
இவர்தான் சசிகலா, தினகரனின் டெல்லி லாபிக்கு மிக முக்கிய புரோக்கர். சசிகலா பொதுச்செயலராக நியமிக்கப்பட்டது மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பை பெற இந்த பவன் ரெய்னா மூலமே தினகரன் தரப்பு லஞ்சம் கொடுத்ததை டெல்லி போலீஸ் கண்டுபிடித்துள்ளது.
சிக்கும் சக்சேனா
இதையடுத்து டிடிவி தினகரனுக்கு புரோக்கர் வேலைபார்த்தது குறித்து பவன் ரெய்னாவிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். அதேபோல் தலைமை தேர்தல் ஆணையத்தில் பணிபுரியும் துணை தேர்தல் அதிகாரி ஐஏஎஸ் அதிகாரி சந்தீப் சக்சேனாவுக்கும் டெல்லி போலீஸ் குறி வைத்துள்ளதாம்.
விசாரணை தீவிரம்
சந்தீப் சக்சேனா, பவன் ரெய்னா இருவரும்தான் சசிகலா கோஷ்டிக்கான டெல்லி லாபியாம். தற்போது சுகேஷ் சந்திரா என்ற 2-ம் கட்ட புரோக்கர் சிக்கிய நிலையில் பவன் ரெய்னா மற்றும் சந்தீப் சக்சேனா இருவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

*ஜாமீனில் வெளிவரமுடியாத லஞ்ச ஊழல் தடுப்பு சட்டம் IPC Sec 170 and 120(b). Sec 8 of Prevention of Corruption Act. பிரிவுகளின் கீழ் T.T.V தினகரன் மீது வழக்கு பதிவு செய்தது டெல்லி போலீஸ்*
*சுகாஷ் - தினகரன் பேசியதற்கு ஆதாரம் உள்ளது - டெல்லி போலீஸ்!*
*வறுதெடுக்கும் தேசிய ஊடகங்கள்!*
*தினகரனை இன்றிரவே கைது செய்ய வாய்ப்பு!*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...