எந்த துறையில் இருப்பவர்களும் தங்கள் முன்னோடிகளை மதிக்கவேண்டும் என்பது பொதுவிதி. அப்படி மதிக்காதவர்கள் முன்னேற முடியாது. முன்னேறினாலும் நிலைத்திருக்க முடியாது. மாஸ்டர் தனராஜ், ஜி.கே வெங்கடேஷ், எம்.எஸ். விஸ்வநாதன், கே.வி. மகாதேவன் போன்ற இசைத்துறை முன்னோடிகளைப் பெரிதும் மதிப்பவர் இளையராஜா. ஆயிரம் படங்களுக்குமேல் இசையமைத்து, திரை உலகில் புகழ்பெற்று விளங்கும் எம்.எஸ். விஸ்வநாதனின் இசைக்குத்தான் ஒரு ரசிகர் என்று கூறுகிறவர் இளையராஜா. அப்படிப்பட்ட எம்.எஸ் விஸ்வநாதனுக்குச் சொந்தப்படம் எடுத்துப் பெரும் நட்டம் ஏற்பட்டு வீடு கடனில் மூழ்கிப்போகும் நிலை ஏற்பட்டது. அதைப்பற்றிக் கேள்விப்பட்ட இளையராஜா, ஒரு பெருந்தொகையை எம்.எஸ்விக்கு அனுப்பி வீட்டை மீட்க உதவினாராம். பின்னர் எம்.எஸ்.வியின் சொந்தப்படம் ஒன்றுக்கு இசையமைத்துக் கொடுத்தும் உதவினார் இளையராஜா. இதனால் மனம் நெகிழ்ந்து போன எம்.எஸ்.வி. குரு ஸ்தானத்திலிருந்து இறங்கி வந்து சீடர் நிலையிலிருந்த இளையராஜாவோடு சேர்ந்து ஏவி.எம்.மின் மெல்லத்திறந்தது கதவு" படத்துக்குக் கூட்டாக இசையமைத்தார். அது மட்டுமா? 1986 தீபாவளிக்கு ஏகப்பட்ட படங்களில் பணியாற்றி நேரமில்லாமல் அவதிப்பட்ட இளையராஜாவுக்கு உதவ, தன் கௌரவத்தைப் பற்றிச் சற்றும் கவலைப்படாமல் ‘விடிஞ்சா கல்யாணம்’ என்ற படத்தின் பின்னணி இசையையும் (ரீகார்டிங்) செய்து கொடுத்தார். அந்தப்படத்தின் இசையை அமைத்தவர் இளையராஜா. பின்னணி இசையையும் அவர் தான் அமைத்திருக்க வேண்டும். அவருக்கோ நேரமில்லை. படமோ தீபாவளிக்கு வெளிவந்ததாக வேண்டும். அந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக, ராஜாவை மீட்பதற்காகவே, குரு விஸ்வநாதன், சீடருக்கும் சீடராக மாறி பின்னணி இசையை அமைத்துக் கொடுத்தார். தன் பெயர் போட வேண்டாம். ஊதியமும் வேண்டாம்" என்றார் எம்எஸ்வி. ஆனால், பெரும் தொகை ஒன்றை வாங்கிக் கொடுத்ததோடு, பின்னணி இசையமைத்துக் கொடுத்த எம்.எஸ்.விக்கு நன்றி" என்று தனியாக ஒரு டைட்டில் கார்டும் போட ஏற்பாடு செய்தார் இளையராஜா.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
விரைவில் அமைச்சர் ஆகிறார்கள் திவாகரன்.....?? இளவரசியின் மகன் விவேக்..?? ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிறார். TTV தினகரன் மத்திய அரசில் ப...
No comments:
Post a Comment