Monday, April 17, 2017

இன்னும் என்ன பிரச்னை ????



காமராஜர் பதவியில் இருந்த நேரம் சீனா இந்தியா இடையே போர் மூண்டது. இந்தியா படு தோல்வி. நேரு மிக வருத்தத்துடன் இருந்தார். அந்நேரம் காமராசரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து. காமராஜரிடம் புலம்பி தீர்த்து விட்டார். உடனே காமராஜர்
" இப்ப என்ன பிரச்னைங்கரேன் ??? "
அதற்க்கு நேரு " நம்ம கிட்ட போதுமான நவீன ஆயுதங்கள் இல்லாததினால் தான் இந்த தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்ப்பட்டது. நவீன ஆயுதங்கள் இருந்திருந்தால் நாம் ஜெயித்து இருக்கலாம்" என்றார்.
அதற்கு காமராஜர் " மத்த வேலையை நிறுத்திவிட்டு அந்த அமெரிக்ககாரன் கிட்ட நமக்குத் தேவையானதை வாங்குங்கரேன்"
வாங்கலாம் தான் ஆனால்.....என்று இழுத்தார் நேரு....
இன்னும் என்ன பிரச்னை ????
இல்ல !!!! அந்த வெப்பன்ஸ் இந்தியாவுக்கு அனுப்பணும் ணா அமெரிக்காவில ஏதாவது ஒரு பாங்க் நமக்கு பண உத்திரவாதம் எழுதி குடுக்கணும் ஆனா இந்தியாவை நம்பி எந்த பாங்கும் உத்திரவாதம் தர மாட்டேன்ங்கிறான்..." என்று வருத்தத்துடன் சொன்னார் நேரு.....
Image may contain: one or more people
உடனே காமராஜர் அவருடைய பாஷையில்
" அவன் கடை இங்க ஏதாவது இருக்காங்கிரேன்"
நேருவுக்கு ஒன்றும் புரியவில்லை. காமராஜர் மீண்டும் கேட்டார்
 " அட அவன் கடை இங்க ஏதாவது இருக்காங்கிரேன்"
நேரு புரிந்துகொண்டு உடனே
"இருக்கு.... அமெரிக்கன் ஏக்ஸ்பிரஸ் ன்னு ஒரு பாங்க் இங்க இயங்கிட்டு இருக்கு"
உடனே காமராஜர் "அதை உடனே இழுத்து மூட சொல்லுங்கரேன்"
நேரு திகைத்தார்... "அய்யோ அதை மூட சொன்னால் சர்வதேச பிரச்னை ஆகுமே"
உடனே காமராஜர் " அட என்னமோ ஆகட்டும். நமக்கு உதவாத அவன் கடை இங்க எதுக்குங்கரேன்???"
உடனே நேரு எதையும் யோசிக்காமல் அந்த bank க்கு உடனடியாக ஒரு அவசர உத்தரவு பிறப்பித்தார்
"எங்களுக்கு உதவி செய்யாத உங்கள் நாட்டு எந்த தொழிலும் இனி எங்கள் நாட்டில் வேண்டியதில்லை... உடனே இடத்தை காலி செய்யவும்"
வங்கி அதிகாரி திகைத்தார்... உடனடியாக அமெரிக்காவுக்கு தகவல் அனுப்பினர். அடுத்த சில மணி துளிகளில் அமெரிக்க வங்கிகள் போட்டி போட்டுக்கொண்டு உத்திரவாதம் தர தயார் ஆயினர்...
நாட்டை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், இது போல் பல idea க்கள் தானாகவே மனதில் தோன்றும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...