Sunday, April 23, 2017

#எஸ்_ஜானகி_என்னும்_அதிசயம்.

60 வருடங்கள் 17 மொழிகள் 48000 பாடல்கள் 4 தேசிய விருதுகள் 32 மாநில விருதுகள்
மைசூர் பல்கலைக்கழகத்தில் இருந்து கெளரவ முனைவர் பட்டம்
தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது என இசையில் தனக்கென்று ஒரு சகாப்தத்தை படைத்தவர்.
அவர் அண்மையில் இசை துறையில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறியது இசை ரசிகர்களை பெரிதும் வருத்தத்திற்கு உள்ளாக்கியது.
தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படும் இவர், வாழ்வில் ஓய்வெடுக்க விரும்புவதாகவும், இனி திரைப்படங்களிலும் சரி, மேடைகளிலும் சரி பாட போவதில்லை என சமீபத்தில் அறிவித்தார்.
மழலையாக இருக்கும் போதே பாட தொடங்கினார் ஜானகி
அவரின் முதல் மேடை நிகழ்ச்சியை 3 வயதில் பாடினார்.
தன் மாமாவின் அறிவுரைக்கு இணங்க 20 வயதில் சென்னைக்கு பாடுவதற்காக வந்த இவர், AVM ஸ்டுடியோவில் பாடகராக சேர்ந்தார்.
1957 ம் ஆண்டு விதியின் விளையாட்டு என்ற திரைப்படம் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் ஆனார்!!!
அன்று முதல் இன்று வரை, தென்னிந்திய மனங்களில் நீங்காத ஒரு இடத்தை பிடித்துள்ளார்!!!
செந்தூரப்பூவே
இஞ்சி இடுப்பழகி
ஊரு சனம் தூங்கிருச்சு
மச்சானை பாத்தீங்களா
போன்ற பாடல்களை கேட்க கேட்க காதில் தேன் வந்து பாய்வது போல் இருக்கும்.
பசுமையான பாடல்களுக்கு தன் மழலை குரலை கொடுத்து மேன்மை படுத்தியவர்.
இந்தியாவின் முதல் பெண் இசை அமைப்பாளர் என்ற பெருமையை கொண்டவர்.
இவரின் பாடல்களை திரையில் பார்க்கும் போது மட்டும் கதாநாயகியே பாட்டை பாடுவது போல தோன்றும்.
அவரின் பாடல்கள் இயற்கையான உணர்வுகளின் வெளிப்பாடு என்றே கூறலாம்.
குரலில்எந்த வித சிரமும் தெரியாமல், பாடலை அழைக்கின்ற இடத்திற்கெல்லாம் சென்று வருவார்.
காதல் கடிதம் தீட்டவே என்ற பாடலில், காதல் வழியும் என்றால்
 சின்ன தாயவள் பாடலில் தாய்மை தாலாட்டும்
சின்ன சின்ன பூவே பாடலில் மழலை குரல்
ஊரு சனம் தூங்கிருச்சு
இஞ்சி இடுப்பழகி
ராசாவே உன்னை நம்பி
போன்ற பாடல்களில்
கிராமத்து பெண்ணின் குரல்..
பொன்மேனி உருகுதே
போன்ற பாடல்களில் விரகத்தின் வெளிப்பாடு..
எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் பாடலில் குடிபோதையில் ஆடும் பெண்ணின் தொனி என்று, இசையின் பல பரிமாணங்களை குரல் வழியாகவே வெளிப்படுத்தியவர் ஜானகி!!
சிங்கார வேலனே தேவா போன்ற நுணுக்கங்களை கொண்ட பாடலை, தொழில் நுட்ப வளர்ச்சி பெரிதும் இல்லாத காலத்தில் எவ்வாறு ஜானகி பாடி முடித்தார் என்று, இசை உலகினர் இன்று வரை வியக்கின்றனர்.
அனைத்து மொழிகளிலும் மிகச் சரியான உச்சரிப்பை கொண்டவர் ஜானகி என்பது குறிப்பிடத்தக்கது!!
தனது இசை வாழ்க்கையின் தொடக்கத்தில் பாடிய சிங்கார வேலனே தேவா முதல் இப்பொழுது பாடிய அம்மா அம்மா வரை, தன் குரலால் மக்களை வசீகரிக்க முடிந்திருக்கிறது என்றால், அந்த பெருமை ஜானகியின் உழைப்பிற்கும், திறமைக்குமே போய் சேரும்!!
திரைப்பாடல்களுடன் பாரம்பரிய இசை சேர்த்து அமைப்பது என்பது இளையராஜாவிற்கு கைவந்த கலை!!
அவ்வாறு அவர் இசை அமைத்த பாடல்களை மிக சரியாக பாடுவது ஜானகி தான் என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
காற்றில் எந்தன் கீதம்
புத்தம் புது காலை
சுந்தரி நீயும்
போன்ற பாடல்கள்இதற்கு சான்று!!!
Image may contain: 1 person, flower
பாடலில் ஏதாவது ஒரு நொடியில் தவறு செய்தால் கூட, உணர்வு சரியாக கேட்பவருக்கு போய் சேராது என்பது போல், மிக கடினமான பாடல்களை, குரலில் சின்ன சிரமம் கூட தெரியாதவாறு பாடியுள்ளார் ஜானகி.
சங்கத்தில் பாடாத கவிதை
தென்றல் வந்து தீண்டும்போது
போன்ற பாடல்கள் இதற்கு சான்று!!!
ஜானகி முற்றிலும் வித்தியாசமான குரல்களில் பாடக்கூடியவர்.
போடா போடா பொக்க பாடலில் கிழவியின் குரல்(உதிரி பூக்கள்)
https://youtu.be/BpaHQVXD62g
மம்மி பேரு மாரி பாடலில் ஒரு ஆணின் குரலில் கூட பாடியுள்ளார்(நெஞ்சத்தை கிள்ளாதே)
(OMG)
https://youtu.be/pwbekjLgZWg
மேற்கத்திய இசையை தமிழ் திரை உலகிற்கு மிகச் சிறப்பாக கொண்டு வந்து சேர்த்த பாடகர்களில் ஜானகியும் ஒருவர்.
பாடவா உன் பாடலை
ஒரு பூங்காவனம்
இது ஒரு நிலாக்காலம்
ஓஹோ மேகம் வந்ததோ
போன்ற பல்லாயிரக்கணக்கான மேற்கத்திய பாணி பாடல்களை பாடியுள்ளார்!!!
ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்து,ஜானகி பாடிய, ஒட்டகத்த கட்டிக்கோ, கத்தாழங்காட்டு வழி, முதல்வனே போன்ற பாடல்கள் என்றும் இனிமையானவை. மார்கழி திங்களல்லவா பாடல் ஜானகிக்கு தமிழ் நாடு அரசின் மாநில விருதை பெற்று தந்தது.
பாடத் தொடங்கிய பிறகு, எந்த வித குரல் பயிற்சியும் செய்ததில்லை என்று கூறியுள்ளார் ஜானகி!!!
அவர் பாடும் போது உதடை தவிர, உடலின் வேறு எந்த பாகமும் அசையாது
மைக்கை பிடித்து ஒரு இடத்தில் நின்றால், நிகழ்ச்சி முடியும் வரை, அங்கேயே நின்று பாடுவார்.
உச்ச ஸ்தாயில் பாடினாலும் சரி, கீழ் ஸ்தாயில் பாடினாலும் சரி, எந்த வித அசைவும் தெரியாது!!
ஜானகியின் குரலை விட இனிமையான குரலை கற்பனை செய்து கூட பார்ப்பது கடினம் தான்!!!
எம் எஸ் விஸ்வநாதன், இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான், அனிருத் என நான்கு தலைமுறை இசை அமைப்பாளர்களுக்கு பாடியுள்ளார் ஜானகி.
பிலிம்பேர் 1997 ம் ஆண்டு ஜானகிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்து கெளரவபடுத்தியது.
2013 ம் ஆண்டு இந்திய அரசு கொடுத்த பத்ம பூஷன் விருதை, மிக தாமதமாக கொடுப்பதாக கூறி நிராகரித்தார்.
பத்து கல்பனகள் என்ற மலையாள படத்திற்காக அவர் பாடிய, அம்ம பூவினு என்ற பாடல் தான் அவர் கடைசியாக பாடிய பாடல்!
https://youtu.be/aLjsLqIwbT4
இனி பாடுவதில்லை என்று முடிவெடுத்தால் வருந்துவது ஒன்றுமில்லை,எத்தனை எத்தனை பாடல்களை பாடியுள்ளார் அவர், ஒவ்வொன்றையும் ஊன்றி கவனித்து, சிலாகிக்கவே நம் வாழ்நாள் போதாதே!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...