Tuesday, April 11, 2017

நிலம் கையகபடுத்துதல் சட்டம், மக்களைச் சுரண்டி ஏய்க்கும் மோசடி சட்டமா?

நிலம் கையகபடுத்துதல் சட்டம் என்பது மக்களைச் சுரண்டி ஏய்க்கு ம் மோசடி சட்டமா?
நிலம்செல்வத்தின் தாய், உழைப் பு அதன் தந்தை” என்று வில்லிய ம் பெட்டி என்ற பொருளியல் அறி ஞர் சொன்னதை காரல்மார்க்ஸ் தனது நூல் ஒன்றில் மேற்கோள் காட்டியிருப்பார். அதாவது இயற் கையின் கொடையான நிலமும், மனிதனின் உழைப்பும்சேரும் போது தான் உற்பத்தி செய்யப்பட்ட
செல்வம் பிறக்கிறது. ஆகவே செல்வத்தின் முக்கியமான கண்ணாக நிலம் திகழ்வதை அறியலாம்.
ஏழை மக்களிடம் இருக்கின்ற சிறு, குறு நிலத்தையும் கையகப்படுத்தி தனியார் நிறு வனங்களுக்கு தாரைவார்த்துக் கொடுக்க வேண்டியே கையகப்படுத்தப்படுகிறது. மே லும், அந்நிறுவனங்களின் தொழில்வளமை க்காக அரசே ‘பொதுநோக்கத்திற்கு வேண் டி’ என்ற அடிப்படையில் பெருமளவி ளான நிலங்களை கையகப்படுத்தி பெரும்பான் மை மக்களை நாடோடிகளாக மாற்றுகிற து. எனவே, உண்மையில் பொது நோ க்கத்திற்காக அரசு நிலத்தைக் கைய கப்படுத்தினாலும், அதுபெரும்பாலும் தனியார் நிறுவனங்களின்கொள்ளை இலாபவெறிக்கு உரம் சேர்ப்பதற்கா கவே செய்யப்படுகிறது. ஆக மொத்த த்தில், நிலம் கையகப்படுத்துதல் என் பதும், அதற்காக இழப்பீடு தருதல் என் பதும் மக்களைப் பொறுத்த வரையி ல் மிகக் கொடூரமான முறையில் அவர்களின் வாழ்வாதாரத் தைப் பறித்து உயிர்வாழும் உரிமையை யே பறிக்கி ன்ற செயல்பாடாகும்.
தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தி யாவின் பல்வேறு பகுதிகளில் ஏ தாவதொரு காரணத்தைச் சொல் லி விவசாய நிலங்களைக்கைய கப்படுத்துவது இப்பொழுது சர்வ சாதாரணமாக நடந்துவருகிறது. விளை நிலங்களை வலுக் கட்டா யமாகப் பிடுங்கி, அவற்றின்மேல் கொண்டுவரப்பட்டுள்ள விரை வுச் சாலைகள், மேம்பாலங்கள், தகவல்-தொழில் நுட்பப்பூங்கா க்கள், சிறப்புப்பொருளாதார மண்டலங்கள், சுரங்கங்கள், புதிய வேலியிடப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்புகள் போன்ற வற்றால் நிலத்தை இழந்த விவ சாயிகளுக்கு எந்தப் பலனும் கிட்டவில்லை என்பது தான் உண்மை!
அணுசக்தி சட்டம் 1962, தேசிய நெடுஞ் சாலைகள் சட்டம் 1956, சிற ப்பு பொருளாதார மண்டல சட்டம் 2005 போன்ற 16 சட்டங்க ளை இந்தப் புதிய மசோதா தன் வரையரை யிலிருந்து ஒதுக்கி வைக்கிறது. எனவே, சிற ப்புப் பொருளாதார மண்டலச் சட்டத்தின் கீழ் நிலம் அபகரிக்கப்படுவதுமுன்போலவே தொ டரும். இதனால் அணுசக்தித் திட்டங்களுக் காகவும், சிறப்புப்பொருளாதார மண்டலங்க ளுக்காகவும், நெடுஞ்சாலைகளுக்காகவும், தங்களுடைய நிலம் முறையற்று கைப்பற்ற ப்படுவதை எதிர்த்துப் போராடிவரும் மக்களு க்கு எந்தப் பாதுகாப்பும் கிடைக்காது.
ஏன் இந்த எரிவாயுக்குழாய் திட்டத்தை யே எடுத்துக்கொள்ளுங்கள். இத்திட்ட ம் தொழிற்சாலைகளுக்கு எரிவாயு விநியோகிப்பதற்காகப் போடப்படுகிற து.  இத்திட்டத்தால் பலனடையப் போ வது பெரும்பாலும் தனியார் முதலாளி கள்தான். நெடுஞ்சாலைகளில் குழாய் களைப் பதிப்பதைத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மறுக்க முடி யுமென்றால், தமது விளைநிலங்களில் குழாய்கள் பதிப்பதை விவ சாயிகள் மறுக்கக் கூடாதா? ஆனால், இந்த உரிமை விவசாயிகளுக்கு அநி யாயமான முறையில் மறுக்கப்படுகிற து. மாறாக, பொது நோக்கத்திற்காகக் கொண்டு வரப்படும் வளர்ச்சித் திட்டங் களுக்கு விவசாயிகள் தங்கள் நிலங்க ளை விட்டுத்தரவேண்டும் எனக் கட்டா யப்படுத்தப்படுகிறார்கள். மறுத்துப்போராடினால், காவல், வழக் கு, சிறை போன்ற அடக்குமுறைகளை க் கட்ட விழ்த்துவிட்டு, விளைநிலங்க ளை வலுக்கட்டாயமாக அபகரித்துக்கொள்கிறது அரசு.
அரசியலமைப்புச்சட்டத்தில் முன்னதாக வரையறுக்கப்பட்டகுறிப்பு:

a) முன்னதாக, அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 31(2)-ன்படி அரசு தனியார் நிலத்தை கையகப்படுத்த முனைந்தால், அதற்கு தனியே சட்ட ம் இயற்ற வேண்டும் என்றும் கை யகப்படுத்துவது பொது நோக்கத்தி ற்காக இருத்தல் அவசியம் என்றும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வரையறுக்கப்பட்டது.
b) அதன்பிறகு அரசியலமைப்புச் சட்டத்தின் 25-ஆவது திருத்தம் 1971-ல் இழப்பீடு என்ற சொல்லாடலை நீக்கி “ஒரு தொகை” வழங்கப்பட வே ண்டும் என்று வரையறுத்தது. மேலும் அப்படி வழங்கப்படும் தொகை குறை வாக இருந்தாலும், அதை எந்த நீதி மன்றத்திலும் முறையிட முடியாததா க திருத்தம் செய்யப்பட்டது.
c) அதன்பின், 1978-ல் செய்யப்பட்ட 44-வது திருத்தம் அரசியல் அமை ப்புச் சட்டத்தின் பிரிவுகள் 31(2)மற்றும் 19(1)(க) போன்றவற்றை நீக்கி விட்டு, அரசு பொது நலனுக்காக கையகப்படுத்தும் நிலங்களுக்கு நில உரிமையாளருக்கு இழப்பீடு தர வேண்டிய அவசியம் இல்லை என் று திருத்தப்பட்டது.
வளர்ச்சி திட்டங்கள்:
a) அனைத்து துறைகளின் வளர்ச்சி க்கும் மின்சாரம் ஆதாரமாகத் திகழ் கிறது. மின் துறையில் மட்டும் ரூ.7.14 லட்சம் கோடி மதிப்பில் 136 திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அடுத்தபடியாக உருக் கு துறையில் 25 திட்டங்கள் (ரூ.3.36 லட்சம் கோடி) நிறைவேற்றப் பட முடியாத நிலையில் உள்ளன.
b) எண்ணெய் மற்றும் எரிவாயு துறை யில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விரி வாக்க திட்டங்களின் மதிப்பு ரூ.2.08 லட்சம் கோடியாகும். இதில், கெய்ர ன் இந்தியா (ரூ.28,000 கோடி) மற்று ம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ரூ.29,777 கோடி) ஆகிய நிறுவனங் களின் திட்டங் களும் அடங்கும்.
c) கடந்த 2005–06–ஆம் நிதி ஆண்டில் உருக்குத் துறையில் ஆர் செ லர் மிட்டல் மற்றும் போஸ்கோ ஆகிய நிறுவனங்கள் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக முதலீடுசெய்ய திட்டமிட்டிரு ந்தன. நிலம் கையகப்படுத்துதலில் ஏற்ப ட்ட பிரச்சினையால் மேற்கண்ட திட்டங் கள் நிறைவேற்றப்படவில்லை. இந்த தி ட்டங்களையும் சேர்த்தால் நிறுத்தி வை க்கப்பட்ட திட்டங்கள் மதிப்பு மேலும் உயரும்.
d) இவ்வாறு திட்டங்கள் முடங்குவதால் நாட்டின் உற்பத்தி துறையில் பாதிப்பு ஏற்பட்டு பொருளாதார வளர் ச்சி குறையும். சென்ற நிதி ஆண்டில் உற்பத்தி துறையில் 1 சதவீதம் மட்டுமே வளர்ச்சி ஏற்பட்டது. இத ன் காரணமாக அந்த நிதி ஆண்டி ல் 10 ஆண்டுகளில் இல்லாத அள விற்கு பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறைந்தது.
e) உற்பத்தி துறையின் பின்னடை வால் வெளிநாடுகளிலிருந்து கி டைக்கும் ஆர்டர்களுக்கான பொ ருள்களை உரிய நேரத்தில் டெலி வரி செய்யமுடியாது. இதன் கார ணமாக ஏற்றுமதி குறையும். சென்ற நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 8,800 கோடி டாலராக உய ர்ந்துள்ள நிலையில், மத்திய அரசுக்கு இது சவாலாக உள்ளது.
இவ்வாறாக அனுமதி பெறுவதில் ஏற்படு ம் காலதாமதம், நிலம் கையகப்படுத்து தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான 319 தொழில்து றை திட்டங்கள் முடங்கியுள்ளன. பிரதம மந்தி ரியின் திட்ட கண்காணிப்புகுழு வெளியிட்டுள்ள புள்ளி விவரம் வா யிலாக இது தெரிய வந்துள் ளது. இதனால் அதிக இலாப ம் ஈட்ட முடியவில்லையே என்று மத்தியில் ஆள்பவர்க ள் மிகவும் வருத்தத்தில் உள் ளார்களாம்.  
நந்திகிராம், சிங்கூர் டாடா நானோ தொழிற்சாலை, ஒரிசா பாஸ்கோ தொழிற் சாலை, ரிலையன்ஸ் நிறுவனம் அமைக்கவிருந்த சிறப்புப் பொரு ளாதார மண்டலம் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங் கள்:
a) மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் டாடாவின் நானோ தொழிற் சாலை க்காக சுமார் 1000 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதி ல் சுமார் 400 ஏக்கர் நிலம் விவசா யிகளின் எதிர்ப்பை மீறி கையகப்ப டுத்தப்பட்டது. திரிணாமுல் காங்கிர ஸ் தலைவர் மம்தா நடத்தியபோரா ட்டம் காரணமாக நானோ தொழி ற்சாலை குஜராத்துக்கு மாறியது . உண்மையில் டாடாவிடம் இப் போதும் அந்த 900+ ஏக்கர் நிலம் அப்படியேதான்உள்ளது காரணம் அந்நிலங்களுக்கு இன்றுவர குத் தகை செலுத்தியுள்ளது டாடா நிறுவனம். எதிர்காலத்தில்வேறு திட்டங்களுக்கு அவற்றைப்பயன் படுத்தப்போவதாகவும் டாடா கூறியுள்ளது. இந்த நிலத்தை டாடாவி டமிருந்து வாங்கி ரெயில்வேக்கு தரவேண்டும் மம்தா கூறிவந்தது ம், அதற்கு மேற்கு வங்க அரசு ஒப்பு தல் தெரிவித்ததும் நினைவிருக் கலாம்.
b) தமிழ்நாட்டில் 1990-ல் ஆட்சி செ ய்த அரசு சென்னையையடுத்து ஃபோர்டு கார் கம்பெனியை நிறுவு வதற்காக, 400 ஏக்கருக்கும் மேற் பட்ட விவசாய நிலங்களை வலுக் கட்டாயமாக பறித்துக்கொடுத்தவர் தான்
c) POHANG STEEL COMPANY (POSCO) என்பதுதான் இதன் சுருக் கம். சுதந்திரம் அடைந்து 60 ஆண்டு களுக்கு பின்னால் 21 இரும்பு தொழி ற்சாலைகளால் 13.5 மில்லியன் டன் இரும்பை மட்டுமே உற்பத்தி செய்ய முடிகிற நிலையில், ஒரு தனி தொழி ற்சாலை எவ்வாறு ஆறு வருடங்களி ல் 12 மில்லியன் டன் இரும்பை உற் பத்தி செய்ய முடியும்? என்ற கேள்வி எல்லோரடைய மனதில் அப்போது இருந்தது.
d) ரிலையன்ஸ் நிறுவனம் அமைக்கவிருந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது மராட்டிய அரசு. இந்த நிலங்களை விவசாயிகள் இனி தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என மராட்டிய அரசு அறிவித்துள்ளது. மும்பையில் 35,000 ஏக்கர் பரப்பளவில் சிறப் புப் பொருளாதார மண்டம் அமை க்க ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு மராட்டிய அரசு அனுமதியளித்திருந்தது. 45 கிராமங்கள் இந்த பரப் பளவுக்குள் வந்தன. 2009-ம் ஆண்டுக்குள் இந்தத் திட்டம் நிறைவே ற்றப்பட வேண்டும் என நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது. ஆனா ல் 2009-டிசம்பர் 31-ம் தேதி வரை இந்தப் பணிகளில் எந்த முன்னேற்ற மும் இல்லை. கொடுக்க ப்பட்ட அவ காசத்துக்குள் திட்டம் நிறைவு பெறாத தால் இந்தத் திட்டத்தை ரத்து செய்வ தாகவும், இனி விவசாயிகள் தங்கள் நிலங்களை விருப்பபப்படி பயன்படுத் திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்க ப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் இந்த திட்டம் குறித்து ஒரு பொது வாக்கெடு ப்பு நடத்தியது அரசு. அதிலும் ரிலைய ன்ஸ் சிறப்புப் பொருளாதார மண்டலம் வேண்டாம் என்றே மக்கள் தீர்ப்பளித் திருந்தனர். இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் இந்த மசோதா நிலத் திற்கான இழப்பீடு பெற சரியா ன ஆவணங்களை வைத்திரு க்க வலியுறுத்துகிறது. அப்படி இல்லாதபட்சத்தில் நிலத்திற் கான இழப்பீட்டை அவர்கள் கோரமுடியாது. நம் நாட்டில் கொஞ்சம் நிலம் வைத்திருப் போர் ஆவணங்களை சரியா ன முறையில் பராமரிப்பது இ ல்லை. ஏராளமானவர்கள் வெறுமனே அனுபவ அடிப்படையில்தா ன் நிலங்களை உரிமையாக்கியுள்ளனர். இத்தகையோருக்கு இழ ப்பீடு பெறுவதும் குதிரைக்கொம்பாகி விடும்.
நிலத்தைக் கையகப்படுத்த ஒருதனி நபர் ஒப்புக்கொ ள்ள மறுத்தாலும் கூட அதை ஏற்றுக்கொண்டு அவரு க்கிருக்கின்ற உரிமையை அங்கீகரிப்பதுதான் அரசி ன் நிலைப்பாடாக இருக்க வேண்டும். இந்த நில அப கரிப்புக்கு எதிராக விவசாயிகள் ஒரு நீண்ட நெடிய போராட்டத்தை நடத்தவேண்டியிருக்கிறது.  இந்த நெடிய போராட்டத்தில் சிங்குரிலும், நந்தி கிராமிலு ம், நியம்கிரியிலும், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களிலும் விவ சாயிகளுக்குக் கிடைத்துள்ள வெற்றிகள் முக்கியமானவை என்ற போதும், அவற்றை தற்காலிகமான வெற்றியே தவிர, இறுதி வெற்றியாகக் கொள்ள முடியாது.  உழுபவனுக்கே நி லம் சொந்தம் என்று ஒருகாலத்தில் உரி மைக்குரல் கொடுத்தோம். இச்சட்டத்தி ல் மாற்றங்கள் கொண்டு வந்து விவசா யிகளைப் பாதுகாக்க வேண்டும் என்று வேண்டுகிறோம்.
குறிப்பு:
மேலே குறிப்பிட்டுள்ள சில முக்கியமான குறிப்புகள் அதாவது வளர்ச்சிதிட்டங்கள், போராட்டங்கள் ஆகியவை அவ்வபோது செய்தி தாள்களில் படித்தது. அதனால் முக்கியாமானவற்றை குறிப்பிட்டுள்ளேன் .

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...