Monday, November 3, 2014

அடுத்த நிதியமைச்சர் டாக்டர் சுப்ரமணியன் சுவாமியா…..??!!!

திரு.பத்ரி சேஷாத்ரி அவர்கள் டாக்டர் சுப்ரமணியன் 
சுவாமியை பேட்டி கண்டதும், அந்த பேட்டி தந்தி 
தொலைக்காட்சியில் வந்ததையும் பலர் பார்த்திருப்பீர்கள்.  அப்போதே சுவாமி சொன்னது தான் …. தனக்கும் மோடி  அவர்களுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் இருப்பதாகவும்,  தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சில assignment- களை  முடித்த பிறகு, தான் மோடிஜியின் அமைச்சரவையில்  சேரப்போவதாகவும்……!!
நிதியமைச்சர் பதவி என்பது சு.சுவாமி அவர்களின்
நீண்ட காலக் கனவு….( முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடம் 
கேட்டு, கிடைக்காமல் போனதிலிருந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாக – இன்னமும் தொடர்வது …..)
வாழ்க்கையின் உச்சபட்ச
லட்சியத்திற்கான முதல் படி …!!!
( உடனடித் திட்டம் – மத்திய நிதியமைச்சர்
நீண்டகாலத் திட்டம் – இந்தியாவின் பிரதம மந்திரி ….!!!! )
அந்த assignment -கள் என்னென்ன என்பதும் -
சு.சுவாமியால் உண்மையிலேயே அவற்றைச் 
செய்து முடிக்க முடியுமா என்பதும்,
ஒருவேளை செய்து முடிக்கப்பட்டால் -
அவை நிறைவேற்றப்பட்டதும் சு.சுவாமி அவர்களை,
திரு.நரேந்திர மோடி அவர்கள் தன் அமைச்சரவையில்
நிதியமைச்சராகச் சேர்த்துக் கொள்வாரா என்பதும்
திரு நரேந்திர மோடி அவர்களுக்கு மட்டுமே (ஒரு வேளை  அமித் ஷாவுக்கும் கூட ) தெரிந்திருக்கக்கூடிய விஷயம்…..!!!
திரு சு.சுவாமி அவர்கள் தனிப்பட்ட முறையிலும் பலரிடமும் சொல்லிக் கொண்டிருக்கும் விஷயம் தான் – நிதியமைச்சர் பதவி தனக்காகக் காத்திருப்பதாக…..!!!
(திரு அருண் ஜெட்லி தற்காலிகமாகவே பாதுகாப்பு, நிதி
ஆகிய இரண்டு முக்கியமான துறைகளையும் வைத்துக்
கொண்டிருக்கிறார் என்பது தெரிந்ததே…..).
இது எந்த அளவிற்கு நடைமுறையில் வருமோ – 
நமக்குத் தெரியாது. ஆனால் சு.சுவாமி பல கனவுகளைக் கொண்டிருக்கிறார் …..
அவர் நிதியமைச்சராக பதவிக்கு வருவது நிச்சயம் 
என்றும், அப்படி வந்தால் என்னென்ன நடக்கும் என்பதையும் அவரே கூறி இருக்கிறார்.
நான் சும்மா சொல்லிக்கொண்டே போவதை விட சிலவற்றைசு.சுவாமியின் வார்த்தை ஜாலங்களிலேயே பார்த்தால் -
இன்னும் சுவையாக இருக்குமல்லவா …?
அவரது ட்விட்டர் ஜாலங்கள் சில கீழே -
————–
ஒரு ரூபாய்க்கு ஒரு டாலர் நிலை 2014-ல் 
வருமென்று முன்பு சொன்னீர்களே …..?
ஆம் – NDA ஆட்சிக்கு வரும்… அவர்கள் நான் 
சொல்வதைக் கேட்கும் நிலை உருவாகும் என்கிற 
நம்பிக்கையில் சொன்னேன்…..!!!
st-1

என் தாயின் கனவு – 2014-ல் மோடியை பிரதமராகவும்,
சுப்ரமணியன் சுவாமியை நிதியமைச்சராகவும் காண்பது ….!
-பெர்னார்ட் ஷா வே சொல்லி இருக்கிறார் ….
கனவு நிச்சயம் நிஜமாகும்…..!!!
st-5


நான் டாக்டர் சுவாமியை மட்டுமே நம்புகிறேன்.
இந்த நாட்டை அழிவிப்பாதையிலிருந்து மீட்டு,
உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல உங்களால் 
மட்டுமே முடியும் …..
விதி விரும்பினால் அதை யாரால் தடுக்க முடியும் …?

st-2

( நரேந்திர மோடி தலைமைக்கும் ஆபத்து ……!!!)
நாஸ்டர்டாம் சொன்னது அனைத்துமே அநேகமாக
நடக்கிறது. அப்படியென்றால், நாம் அனைவரும் உங்கள் 
தலைமையில் புதிய இந்தியாவை காணப்போகிறோமா…?
நாஸ்டர்டாம் சொன்னார் – மூன்று கடல்கள் சங்கமிக்கும் இடத்திலிருந்து வரும் இறைவனடியார் பெயரைக்கொண்ட  ஒருவரால் அது நடக்கும் என்று – அது தமிழ்நாட்டிலிருந்து சுவாமி (யாகத் தானே இருக்க முடியும் ) ….??!!!
st-3————————————————–

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...