Wednesday, December 21, 2016

தமிழகத்திற்க்கு அபாய மணி அடித்த இந்தியஅரசு :

தமிழக தலைமை செயலகத்தில் இந்திய இராணுவம் குவிப்பு என்பது தமிழ்நாட்டின் இறையாண்மைக்கு இந்தியா விடுத்துள்ள நேரடி சவால் ஆகும்.
இதை ஏதோ ஒரு கட்சியின் சிக்கல் என்றோ, தனிநபர்கள் சிக்கல் என்றோ நாம் இருந்தோமானால் இருப்பதும் பறிபோய் விடும்.
மோடி தலைமையிலான ஆரிய பா.ச.க அரசு மத்தியில் பதவி ஏற்றதில் இருந்தே தமிழ்நாட்டின் மீதான இந்திய அரசின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இன்று தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்க்கு உச்சபட்சமாக மாநில அரசின் அனுமதி ஏதுமின்றி, இந்திய துணை இராணுவத்தை தமிழக தலைமை செயலகம் முழுவதும் நிறுத்தி உள்ளது.
இது ஏதோ அவசரகதியில் நிகழ்ந்த நிகழ்வல்ல திட்டமிட்டே தமிழகத்தை அச்சுறுத்தும் வகையில் நிகழ்த்தப்பட்ட நிகழ்வு.
இதுவெறும் தொடக்கம் தான் இனிமேல் அடிக்கடி இந்திய இராணுவத்தை தமிழக மக்கள் எதிர்கொள்ள வேண்டிய காலம் நெருங்கி விட்டது.
நேற்று உயர்நீதிமன்றத்தில் மெல்ல நுழைந்த இராணுவம் இன்று தலைமை செயலகத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டது.
தமிழகம் இனிமேல் ஆபத்தான தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டிவரும்.
இந்த இக்கட்டான சூழலில்
அனைத்து தமிழக மக்களும், கட்சிகளும் ஒன்றுபட்டு நின்று தமிழக உரிமைகளை மீட்டெடுப்போம்!.
ஆரிய சூழ்ச்சியை முறியடிப்போம்!!.
இல்லை என்றால் அபாய மணி சாவு மணியாக போய்விடும்.
"எங்கோ மறைந்தர்
நம் பகைவர் (ஆரியர்)
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!!"

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...