Friday, December 16, 2016

பெண் உரிமைக்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிம்ம சொப்பனமாக விளங்கினார் .

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட நெகிழ்ச்சி மூட்டும் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் ஒரு பெண் பத்ரிகையாளர்.
ஒரு முறை சென்னையில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது அப்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் பேட்டி எடுப்பதற்காக நான் கூட்டத்தோடு கூட்டமாய் நின்றிருந்தேன். அவரது கார் வந்தவுடன் முந்தி சென்று அவரிடம் பேட்டி எடுக்க முயன்றப்போது எனது அடிவயிற்றில் ஏதோ ஒரு வலி ஏற்பட்டது.
உடனே என்னை அறியாமல் எனது கண்கள் கலங்கின, கீழே அமர்ந்திருந்த செக்யூரிடிகளில் யாரோ ஒருவர் தான் என்னிடம் தவறாக நடக்கிறார் என்பது எனக்கு புரிந்தது. ஆனால், கூட்டத்தில் அது யார் என்பது தெரியவில்லை, நானும் கூட்டம் என்பதால் வாயை திறக்கவில்லை.
பின் அம்மா பேட்டி அளித்தவுடன் அவருடைய கார் நகர்ந்தது. உடனே வலியால் துடித்த என்னை எனது தோழிகள் ஆறுதல் கூறி என்னுடைய வீட்டில் விட்டனர். இரவு 11 மணியளவில் எனக்கு ஒரு தொலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது, யாரென்று கேட்டதற்கு, நான் ஜெயலலிதாவின் தனி செயலர் பேசுகிறேன், இன்று நீங்கள் பேட்டியின் போது அழுததாக அம்மா கூறினார் என்ன ஆனது என்று கேட்டார்.
என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் அனைத்தையும் கூறினேன். பிறகு அடுத்த நாள் மீண்டும் எனக்கு ஒரு கால் வந்தது. அதில் பாதுகாப்புகாக வந்த 30 செக்யூரிட்டிகளையும் அம்மா வெளுத்து வாங்கினார், ஆனால் அது யார் என்று தெரியவில்லை,என்று கூறிவிட்டு ஒரு நிமிடம் இருங்கள் என கூறினார்.
உடனே ஹெலோ எப்படி இருக்கிறாய் என்று ஒரு பெண்ணின் குரல். ஏதோ பதிவு குரல் என நினைத்து நான் மௌனமாகவே இருந்தேன்.
மீண்டும் ஏன் மௌனமாக இருக்கிறாய் என்று கேட்டவுடன் தான் தெரிந்தது அது அம்மாவின் குரல் என்று. உடனே நான் நீங்கள் சாதாரண மக்களிடம் பேசுவீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர் ஏன் நான் பேச மாட்டேன் என நினைத்தாயா என்று கேட்டார்.
பிறகு நீ ஒரு இளம் பத்ரிக்கையாளர். இப்படி துவண்டு போகக்கூடாது, வாழ்க்கையில் எவ்வளவு தடங்கல்கள் வந்தாலும் அதை எதிர்த்து செல்லு என்று கூறினார். பிறகு தேர்தல் பணிகள் உள்ளது ஆகையால் நான் செல்கிறேன் நான் சொன்னது நினைவிருக்கட்டும் என்று கூறி விடைபெற்றார்.
அப்போது தான் ஒரு பெண்ணின் பாதுகாப்பிற்கு அம்மா எவ்வளவு முக்கியத்துவம் அளிப்பார் என்பதை உணர்ந்தேன் என்று தெரிவித்துள்ளார். பெண் உரிமைக்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிம்ம சொப்பனமாக விளங்கினார் என்பதற்கு மீண்டும் ஒரு எடுத்துகாட்டு.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...