Monday, December 19, 2016

கலைஞர் யாருக்கு..?



கலைஞரால் யார் யாருக்கு எவ்வளவு..? இது தான் இறுதிக் கட்டப் போர்..
இதில் தளபதி வெற்றி பெற்றால் மட்டுமே..தந்தை கட்டிக்காத்த பேரியக்கமான திமுக பிழைக்கும்..!
ஆனால், குடும்பத்தில் உச்ச கட்ட மோதல் துவங்கி விட்டது என்கிறார்கள். அதற்கு அச்சாரமாக நடந்தே விட்டது தளபதி, கனிமொழி தாயார் ராசாத்தியம்மாள் மோதல்.
கலைஞர் நடமாடிய போதும், நாற்காலிக்கு மாறிய போதும் கூட தவறாமல் ஆலிவர் ரோட்டில் உள்ள கனிமொழி வீட்டிற்கு போய் விடுவார்.
ஆனால், உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கிய போது ..ஆலிவர் வீட்டிற்கு அவரால் போக இயலவில்லை.
இதனால் மகளின் எதிர்காலம் பற்றியும், சொத்துகள் பற்றியும் ராசாத்தியம்மாள் பேசும் வாய்ப்பு அடியோடு நின்று விட்டது.
காலை, மாலை கோபாலபுரம் வந்து கணவரைப் பார்த்து விட்டுப் போவார். அப்போதும் கூட ரகசியமாக எதுவும் பேச இயலாதபடி தளபதி ஆள் வைத்திருந்தார்.
எது பேசினாலும் அவர் காதுக்கு போய் விடும். இதனால் கடும் கோபத்தில் இருந்தார் ராசாத்தியம்மாள்.
கடந்த முறை மருத்துவமனையில் இருந்து கலைஞரை தனது வீட்டிற்கு அழைத்துப் போய்விட முயன்றார்..!
Image may contain: 5 people, people smiling, people standing
அப்போது தளபதி கலைஞர் உடல்நிலையை காரணம் காட்டி மறுத்து விட்டார். அப்போதே கடும் வாக்குவாதம் வந்தது என பத்திரிகைகள் எழுதின.
இம்முறை எப்படியும் கலைஞரை தனது வீட்டிற்கு தான் அழைத்துப் போவேன் என்று அடம் பிடித்தபடி அதற்கான வேலைகளில் இறங்கினார் ராசாத்தியம்மாள்.
நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கோபாலபுரம் வரலாம். ஆனால் உங்கள் வீட்டிற்கு அப்பாவை அனுப்ப மாட்டேன் என்று திட்டவட்டமாக மறுத்து விட்டார் தளபதி.
கடும் ஆத்திரம் அடைந்தவர் நேருக்கு நேர் மோத ஆரம்பிக்க மோசமான வாக்குவாதமும் சண்டையும் வந்துவிட்டது என்கிறார்கள்.
மருத்துவமனை வட்டாரம் அதிர்ந்து போனது…பெரும் கலவரம் மூண்டு விடும் சூழல் ஏற்பட்டு விட, பதறிப் போனார்கள் மருத்துவமனை நிர்வாகத்தினர்.
போலீசும் குவிக்கப்பட்டது..! ஆனால், சிலர் எடுத்த சமாதான முயற்சியால் இப்போதைக்கு பதட்டம் தணிந்துள்ளது என்கிறார்கள்.
ஆனால், எப்போது வேண்டுமானாலும் பெரும் கலவரம் வெடிக்கலாம் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன..!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...