Wednesday, December 14, 2016

"கெட்டப்பையன் சார் இந்த காளி"

கமல்ஹாசனின் பரிந்துரையில் பாலுமகேந்திரா ஒளிப்பதிவாளராக நியமிக்கப்பட்டதாகச் சொல்லும் மகேந்திரன் படத்தின் பின்னணி இசையின் முக்கியத்துவம் கருதி இளையராஜாவை ஒப்பந்தம் செய்ததாக சொல்கிறார்.
படத்தின் இறுதிக் காட்சியில் அண்ணன் காளி (ரஜினி) பெருமை பிடிபடாது தன் தங்கையை (ஷோபா) வை அழைத்துக் கொண்டு வந்து மணமகன் (சரத்பாபு) முன்னே வந்து" இப்ப என் தங்கச்சியை உங்களுக்கு மனைவியாக்க சம்மதிக்கிறேன். ஆனா இப்பவும் உங்களை எனக்கு பிடிக்கலை" என்று சொல்வார். இந்தக் காட்சி படமாக்கும் போது சரத்பாபுவை காணவில்லையாம். தேடிப்பிடித்துக் கூட்டி வந்தால் "அதெப்படி இப்பவும் இந்த ஆள் இப்பவும் எனக்குப் பிடிக்கலை என்று சொல்லலாம்" என்று சொன்னாராம். பின்னர் மகேந்திரன் அவருக்கு புரிய வைத்துப் படத்தை எடுத்தாராம்.
படத்தை ரீரிக்கார்டிங் செய்வதற்கு முன்னர் பார்த்த தயாரிப்பாளர் வேணுச்செட்டியார் "அடப்பாவி என் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுட்டியே, படத்துல வசனமே இல்ல" என்று திட்டித் தீர்த்தாராம். ஓடாத படத்துக்கு விளம்பரம் தேவை இல்லை என்றும் ஒதுங்கிவிட்டாராம். படம் நூறு நாள் கண்டபோது blank chequeகை எடுத்து வந்து "மகேந்திரா,என்னை மன்னிச்சுக்கோ" என்றபோது அன்பாக மறுத்துவிட்டாராம் மகேந்திரன்.
இளையராஜா தன் முதன்முறையாக தன் பின்னணி இசையின் ஆழமான ஞானத்தை வெளிப்படுத்திய படம் "முள்ளும் மலரும்" என்கிறார் மகேந்திரன்.
மகேந்திரன் இந்தக் கதையை திரைக்தையாக்கும் போது இசைக்கு ஏற்றாற் போல் பல இடங்களில் வசனங்களை குறைத்து மெளனங்களை அதிகப்படுத்தியிருப்பார். உதாரணமாக ஒரு காட்சியை பேட்டியில் அவர் குறிப்பிட்டார்:
ரஜினி ஒரு கையை இழந்து ஊருக்கு திரும்பி வரும் காட்சி. அவர் கையை இழந்தது தங்கைக்கு தெரியாது. அண்ணன் திரும்பி வந்த சந்தோஷத்தில் அவனை தழுவும் அவள், அப்போதுதான் அவன் கையை இழந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அழ ஆரம்பிப்பாள். இந்தக் காட்சியில் ஒரு வசனமும் கிடையாது. மற்ற இயக்குநர்கள் என்றால் குய்யோ முறையோ என்றோ வீராவேசமாகவோ பக்கம் பக்கமாக வசனங்களால் நிரப்பியிருப்பார்கள். ஆனால் ராஜா இந்த இடத்தை அபாராக தன்னுடைய இசையால் பார்வையாளர்கள் உருகும்படி இசைத்திருக்கிறார்.
புகைப்படம் : 'செந்தாழம் பூவில்' பாடல் ஒலிப்பதிவின்
போது எடுத்தது...
Image may contain: 3 people, people standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...