Sunday, April 9, 2017

முதல்வர்,5அமைச்சர்களிடம் விசாரணை நடத்த... ரூ.89 கோடிக்கான மூலாதாரம் அறிய வரித்துறை மும்முரம்

ஆர்.கே.நகரில், தினகரன் அணியினர், ஓட்டுக்கு, 4,000 ரூபாய் கொடுத்த 
விவகாரம், விஸ்வரூபம் எடுத்துள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சிக்கிய ஆவணங்கள் அடிப்படையில், 89 கோடி ரூபாய்க்கான மூலாதாரம் அறிய, வருமான வரித்துறை மும்முரம் காட்டி வருகிறது. இது தொடர்பாக, முதல்வர் பழனிசாமி மற்றும் ஐந்து அமைச்சர்களிடம் விசாரிக்க, சம்மன் அனுப்பப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் தினகரன், எப்படியும் வெற்றி 
பெற்றாக வேண்டும் என்பதற்காக, பணத்தை வாரி இறைத்து வருகிறார். தேர்தல் கமிஷன் கெடுபிடிகளை மீறி, ஓட்டுக்கு, 4,000 ரூபாய் பணத்தை, தன் ஆதரவாளர்கள் மூலம், வாக்காளர்களுக்கு வழங்கி உள்ளார். இது தொடர்பான, 'வீடியோ' காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவின.

இதையடுத்து, இரு தினங்களுக்கு முன், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். 

அப்போது, பல முக்கிய ஆவணங்கள் சிக்கின. குறிப்பாக, ஆர்.கே.நகர் தொகுதிவாக்காளர் களுக்கு, ஓட்டுக்கு, 4,000 ரூபாய் வழங்கியது தொடர்பான ஆவணங்களும் கிடைத்தன.அந்த ஆவணங்கள், நேற்று முன்தினம் வெளியாகின. 
அதில், அ.தி.மு.க., அம்மா அணி, தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் களான, முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார்,ம் வைத்திலிங்கம் எம்.பி., மூலம், 85 சதவீத வாக்காளர்களுக்கு, 89.65 கோடி ரூபாய் வினியோகம் செய்ததாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும், அந்த அமைச்சர்கள், ஜூனியர் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் மூலம், பணம் பட்டுவாடா செய்த தற்கான ஆதாரங் களும் சிக்கி உள்ளன. ஒவ்வொருவரும், எவ்வளவு வாக்காளர்களுக்கு, எவ்வளவு பணம் கொடுத்தனர் என்ற விபரமும் இடம் பெற்றுள்ளது. 

சிக்கிய ஆவணங்கள் குறித்து விசாரிக்க, இன்று நேரில் ஆஜராகும்படி, அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி ஆகியோருக்கு, வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

அடுத்த கட்டமாக, ஆவணங்களில் இடம் பெற்றுள்ள, முதல்வர் பழனிசாமி, ஐந்து அமைச்சர்கள், எம்.பி., உட்பட, ஏழு பேருக்கு சம்மன் அனுப்பி, விசாரிப்பது குறித்தும், வருமான வரிதுறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இது, அமைச்சர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமைச்சர் மறுப்பு

நிதி அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை: முதல்வர், அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு, எவ்வித தொடர்பும் இல்லாத, பொய் தகவல்கள் உடைய, போலி ஆவணம், பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது. உண்மைக்கு புறம்பாகவும், அரசியல் ஆதாயம் அடையவும், போலி ஆவணத்தை, சிலர் தயார் செய்து, தேர்தல் நேரத்தில் வெளியிட்டுள்ளனர். அ.தி.மு.க., அம்மா அணிக்கும், ஜெ., அரசுக்கும், மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை சீர்குலைத்து, களங்கம் கற்பிக்க மேற்கொள்ளப்பட்ட அற்ப முயற்சி என்பதே உண்மை.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்ட அனைத்து அமைச்சர்களையும், உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும். வெளியான ஆதாரங்கள் அடிப்படையில், அமைச்சர்கள் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, எதிர்காலத்தில் அவர்கள், தேர்தலில் போட்டியிட முடியாதபடி தகுதியிழப்பு செய்ய வேண்டும். முதல்வர் பழனிசாமியும் ராஜினாமா செய்ய வேண்டும்.

-ஸ்டாலின், செயல் தலைவர், தி.மு.க.,

ஆர்.கே.நகர் தொகுதியில், தினகரன் சார்பில், வாக்காளர்களுக்கு, தலா, 4,000 ரூபாய் தரப்பட்டுள்ளது. இதற்கான ஆவணங்களை, வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ள தால், தேர்தல் கமிஷன் உரிய நடவடிக்கை எடுக்கும். அதேபோல, தி.மு.க., சார்பில், வாக்காளர்களுக்கு, தலா, 2,000 ரூபாய் கொடுக்கப்பட்டு உள்ளது. அதையும் வருமான வரித்துறை விசாரித்து, நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டும். 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...