Monday, August 1, 2011

கருணாநிதி மீது வழக்கு ஏன்..? கலைஞர் குடும்பம் கலக்கம்

வில்லிவாக்கம் தர்மாதோப்பு அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடு செய்ததாக புகார் பதிவு இன்று மாலை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறக்கட்டளையைச் சேர்ந்த ரெங்கா ரெட்டி என்பவர் காவல்துறை ஆணையரிடம் அளித்துள்ள புகாரில், அறக்கட்டளைக்குச் சொந்தமான 7 ஏக்கர் நிலத்தை பரிதி இளம்வழுதி உள்ளிட்டவர்கள் முறைகேடு செய்து மோசடி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.




அவர் இந்தப் புகார் மனுவில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரன் உதயநிதி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரையும் சேர்த்துக் குறிப்பிட்டுள்
ளார்....



கருணாநிதி தன் மீது வழக்கு வராது என நினைத்திருப்பார்..ஸ்டாலின் மீது புது சட்டமன்ற கட்டிடம் கட்டிய வகையில் நடந்த முறைகேடு சம்பந்த வழக்கு வரும் சூழ்நிலையில்..ஸ்டாலின் மகன் மீதும் வழக்கு,கைது பாயப்போகிறது...பொய் வழக்கு போடுவதாக நாடகமாடி அதற்கு ஒரு போராட்டமும் நடத்தி மக்களுக்கு இடையூறு செய்யும் கருணாநிதி க்ரூப்புக்கு இது தேவைதான்...பொய் வழக்கு போடுவதாக சொல்லி மிரட்டி வழக்கில்லாமல் செய்துவிட வேண்டும் என்பது கலைஞர் ஆசை..அத்ற்கு பின்னால் எத்தனை அப்பாவி மக்களின் சோக கதை இருக்கிறது என்பது இப்ப தானே கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வருது...

இன்னும் இருக்கு......சென்ற ஆட்சியில் தமிழகத்தையே மொத்தமக தங்கள் பெயருக்கு மாற்றிக்கொள்ளலாமா என்ற பாணியில்தானே அழகிரி,ஸ்டாலின்,துரைமுருகன்,விரபாண்டி ஆறுமுகம்,பொங்கலூர் பழனிசாமி,ராஜா,கனிமொழி,ராஜாத்தி என ஒவ்வொருவரும் மெகா முதலாளிகளாக உலா வந்தார்கள்.இவர்கள் ஒவ்வொருவர் பினால் பெரிய கதைகளும் பெரிய க்ரூப்பும் இருக்கிறது...பல ஆயிரம் ஏக்கர்கள்,பெரிய பெரிய கம்பெனிகள் என வளைத்து போட்டது எல்லாம் ஒவ்வொன்றாக வெளியே வரும் காலம் நெருங்கிவிட்டது...



தமிழக முதல்வராக காளிதேவியே வந்தது போல,சூரனை வதம் செய்வது போல,அநிதியை தட்டி கேட்க நடவடிக்கை எடுக்குற அந்தம்மாவை குறை சொல்லலாமா..?;-))
பொய் வழக்காம்.அப்படின்னா கோர்ட்ல சந்திக்க வேண்டியதுதானே எதுக்கு ரோட்ல உட்கார்ந்து பஸ்ஸை மறிக்கிற..?
நேரு மட்டும் 3000 பேரை கூட்டியாந்து போராடீருக்கார்..அவ்ளோ பயம்..அடுத்தது அண்ணந்தானே...அதான் இப்படி போராடினா அந்தம்மா விட்ரும்னு நப்பாசை. 
சொத்து குவிப்பு வழக்குல எப்படியும் அந்தம்மா உள்ள போயிரும்னு உடன்பிறப்பெல்லாம் பகல் கனவு காணுதுங்க..அந்தம்மா எல்லோரையும் தாத்தா உட்பட கட்டம் கட்டிட்டுதான் போகும் போல..ஒரு வேளை அந்தம்மா சொத்துகுவிப்பு வழக்குல...உள்ளே போற மாதிரி இருந்தா சும்மா இவங்களை விட்டுட்டா போகும்...
-------------------------------
?2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் பிரமருக்கு அனைத்தும் தெரியும், இந்த விவகாரம் தொடர்பாக பார்லி.,யில் விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கும்,அப்போதைய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரமும் பார்லிமென்டில் விளக்கம் அளிக்க வேண்டும் என பா.ஜ., கோரியுள்ளது.


செம ஆப்புதான்...சிதம்பரம் இதுக்குதான் குறுக்குவழியில ஜெயிச்சுட்டு ஓடுனாரா....மொத்தத்துல தமிழக எம்.பி.க்கள் எல்லாம் திருட்டு பயலுகன்னு வடநாட்டுக்காரன் காறி துப்புற அளவுக்கு வெச்சிட்டீங்க..நல்லாருங்க ராசா...


 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...