Wednesday, October 1, 2014

கிரெடிட், டெபிட் கார்டில் ஷாப்பிங் செய்கிறீர்களா...உஷார்!

கிரெடிட்டெபிட் கார்டில் ஷாப்பிங் செய்கிறீர்களா...உஷார்கணக்குரகசியங்களை
திருடும் புதிய வைரஸ்கண்டுபிடிப்பு
டெபிட் கார்டு வந்த பிறகுஅதைபயன்படுத்திதான்பெரும்பாலானோர் ஷாப்பிங்செய்கின்றனர்பிக்பாக்கெட்பயமில்லைபாக்கெட்கனமில்லை என்ற கூடுதல்தெம்பும் வந்து விடுகிறது.   இப்படிஒருபுறம் வசதி இருந்தாலும்இன்னொரு புறம் தொழில்நுட்ப வளர்ச்சி நம்செயல்களை எளிதாக்கி கொண்டிருக்கஸ்கிம்மர் மெஷின்பிஷ்ஷிங் என நவீனமுறையில் திருட்டுகள் அமோகமாக நடக்கின்றனகடைகளில் கார்டு பயன்படுத்திபொருள் வாங்குவது போலஆன்-லைனில் பொருட்கள் வாங்கும் பழக்கமும்அதிகரித்து வருகிறதுஇதுபாதுகாப்பு இல்லாதது என்று தெரிந்தாலும்வசதி கருதிபலரும் பயன்படுத்தி வருகின்றனர்எனவேகடைகளில் பொருள் வாங்கும்போதுகார்டு மூலமான பண பரிவர்த்தனையை பாதுகாப்பானதாக ஆக்கும் வகையில்,டெபிட் கார்டுகளுக்கு பாஸ்வேர்டு எண் பயன்படுத்துவதை ரிசர்வ் வங்கி கட்டாயம்ஆக்கியதுஇருப்பினும் இணையதள திருடர்கள் புதுப்புது ரூபத்தில் தங்கள்வேலையை காட்டிக்கொண்டுதான் உள்ளனர்எனவேதான்இணையதளதாக்குதல்களுக்கு அதிகம் ஆளாகும் நாடுகளில் இந்தியாவும் உள்ளது.

இணையதள பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வந்தாலும்முழுவதுமாகஇதை கட்டுப்படுத்த முடிவதில்லைஇப்படிப்பட்ட நிலையில்டெபிட்கிரெடிட்கார்டு பயன்படுத்தி ஷாப்பிங் செய்பவரின் கணக்கு ரகசிய விவரங்களை திருடும்வைரஸ் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  ‘‘டெக்ஸ்டர்’’ என்று பெயரிடப்பட்டஇந்த வைரஸ்கடைகளில் கார்டு உரசும்போது அந்த கார்டில் உள்ள கார்டுதாரரின்பெயர்கணக்கு எண்காலாவதி தேதிசிவிவி எண் மட்டுமின்றி ரகசிய குறியீட்டுஎண்ணையும் திருடி விடுகிறது.  எனவேபிஷ்ஷிங் மெயில் போன்றவை குறித்துஉஷாராக இருக்க வேண்டும்பொது இடங்களில் உள்ள ஒயர்லெஸ்நெட்வொர்க்குகள்பொது இணையதள மையங்களில் பண பரிவர்த்தனைசெய்வதை தவிர்க்க வேண்டும் என அவசர நிலைக்கான இந்திய கணினிசெயல்குழு (சிஇஆர்டிஅறிவுரை கூறியுள்ளது
.
நீங்க என்ன செய்யணும்?

பண பரிவர்த்தனை பாதுகாப்புவிஷயத்தில் நாம் கூடுதலாக கவனம்செலுத்தினால் போதும்.பாதுகாப்பதும்அதை நழுவவிடுவதும் நம் கையில்தான் உள்ளது.உங்கள் டெபிட் கார்டுக்கான தனிநபர்அடையாள எண் (பின்கேட்கும்வியாபார மையங்களில்ஸ்கிம்மிங்கருவி பொருத்தப்பட்டுள்ளதாஎன்பதை கவனிக்க வேண்டும்.
 
பின் நம்பர் அழுத்தும் இடத்திலும்கார்டு உரசும் இடத்திலும் வித்தியாசமாகஎதாவது பொருத்தப்பட்டுள்ளதா என கவனிக்க வேண்டும் என நிபுணர்கள்அறிவுரை கூறுகின்றனர்என்னதான் நவீன வசதிகள் வந்தாலும்கையில் பணம்கொடுத்து வாங்கினால்தான் பாதுகாப்பு என்று பழைய நடைமுறைகளையேபயன்படுத்துபவர்களுக்கு எந்த கவலையும் இல்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...