Wednesday, October 1, 2014

கல்வி கடன் பெற எளிய வழி என்ன?

 மாணவர்களுக்கு கல்வி கடன்எளிய வழியில் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து மதுரை கனரா வங்கிசீனியர் மேனேஜர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:
கல்வி கற்பதற்கு பணம் தடையாக இருக்க கூடாது என்பதற்காகவங்கிகள்சார்பில் கல்வி கடன் வழங்கப்படுகிறது. 2012ம் ஆண்டு முதல் "மாதிரி கல்வி கடன்திட்டம்அமல்படுத்தப்பட்டுள்ளதுகல்வி கற்க அனுமதி பெற்றுவிட்டால்தாராளமாக வங்கிகளை அணுகி மாணவர்கள் கல்வி கடன் பெற்றுக் கொள்ளலாம்.
நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களுக்கு பிளஸ் 2வில் குறைந்தபட்சம்60 சதவீதம் மதிப்பெண் பெற்றால்அவர்களுக்கும் தற்போது வங்கிகள் கடன்வழங்குகின்றனதகுந்த ஆவணங்கள் இருந்தால்மூன்று முதல் 5 ஆண்டுகள்படிப்பிற்கு ரூ.4 லட்சம் கடன் பெற மாணவர் மற்றும் அவரது பெற்றோர்கையெழுத்து போதுமானது.
ரூ.7.50 லட்சம் வரை கடன் பெற மாணவர்பெற்றோர் மற்றும் ஒரு ஜாமீன்தாரர்கையெழுத்து தேவைப்படும்ரூ.7.50 லட்சத்திற்கு மேல் கடன் பெற,சொத்துக்களை ஈடாக கொடுக்க வேண்டும்வேலைக்கு சேர்ந்து வருவாய்ஈட்டும்போது கடனை திருப்பி அடைக்கலாம்.
வெளிநாட்டு கல்விக்கும் வங்கி கடன் வசதி உள்ளதுமேல்படிப்பிற்கும் கடன்பெறலாம்கடன் வழங்குவதை வங்கிகள் கடமையாக கருதுகின்றன.மாவட்டம்தோறும் முன்னோடி வங்கிகள் சார்பில் குறைதீர் மையங்கள் உள்ளன.கல்வி கடன் தொடர்பாக அந்த மையத்திற்கு சென்று மேலும் விவரங்களைபெற்றோர் கேட்டு தெரிந்துகொள்ளலாம்என்றார்.
"பட்டங்கள் சார்ந்து இல்லாமல்எதிர்காலத்தில் வளர்ச்சியை எட்டும் துறைகள்சார்ந்த படிப்புக்களை தேர்வு செய்யுங்கள்எனகூறினார்.

மருத்துவம்பொறியியல் படிப்புக்களை தவிரஎதிர்காலத்தை பிரகாசமாக்கும்ஏராளமான படிப்புக்கள் உள்ளனமருத்துவம் முயற்சித்து கிடைக்காதமாணவர்கள்இந்திய மருத்துவ படிப்புக்களான ஆயுர்வேதாசித்தாயுனானிமற்றும் ஓமியோபதி படிப்புக்களை தேர்வு செய்யலாம்.
பல் மருத்துவம்பி.பார்ம்., பிஸியோதெரபிநர்சிங்கால்நடை மருத்துவம்போன்ற படிப்புக்களை தேர்வு செய்யலாம்நர்சிங் முடித்தவர்களுக்கு உலகஅளவில் வரவேற்பு உள்ளதுஇதுதவிர வேளாண்மைஓவியம்இசைபிலிம்இன்ஸ்டிடியூட்கேட்டரிங் மற்றும் ஓட்டல் மேனேஜ்மென்ட்மீன்வளம்ஆடைவடிவமைப்புஅனிமேஷன்போன்ற உடனடியாக வேலைவாய்ப்பு தரும்படிப்புக்களை தேர்வு செய்து படிக்கலாம்.
கலை மற்றும் அறிவியல் பிரிவில் கணிதம்ஆங்கில இலக்கியம்பி.காம்., சி..,.சி.டபுள்யூ.., .சி.எஸ்., போன்ற படிப்புக்களை மாணவர்கள் படிக்கலாம்.இந்தியாவில் இந்தாண்டு 28 ஆயிரம் கோடி விளம்பர துறையில்செலவிடப்படுகிறதுஎனவேமாயையான படிப்புகளின் மயங்கி விடாமல்,எதிர்காலத்தில் எந்த துறையில் வளர்ச்சி உள்ளது என்பதை அறிந்து துறை சார்ந்தபடிப்புக்களை தேர்வு செய்யுங்கள்.
படிக்கும்போதே கூடுதல் கல்வி தகுதிகளை வளர்த்துக்கொண்டால் பிரகாசமானஎதிர்காலம் அமையும் என்றார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...