Wednesday, October 1, 2014

சிறிய மருத்துவம் சிறந்த பயன்கள்

சோற்றுக் கற்றாழை நம் நாட்டின் பொக்கிஷங்களுள் ஒன்று. சிறு காயம், சிறு வெட்டுபட்ட இடத்தில் இதன் இலையை உரித்து பசைப் பகுதியினைத் தடவ காயம் எந்த வித கிருமி தாக்குதலும் இல்லாமல் மாயமாய் மறையும். முகப் பருவக்களின் மீது இதனை தடவ அவை மறைகின்றன. வயது கூடுதலின் காரணமாக கைகளில் ஏற்படும் பழுப்பு புள்ளிகள் இதனைத் தடவி வர மங்கலாகின்றன.

சிறிய மருத்துவம் சிறந்த பயன்கள்

வறண்ட சருமத்தினால் தவிப்போருக்கு இந்த ஜெல் அதாவது சோற்று கற்றாழையின் கூழ் தடவ சருமம் ஆரோக்கியமாகின்றது. சோரியாஸிஸ் பாதிப்பில் இந்த பசை அதிக முன்னேற்றத்தை தருகின்றது. வெப்பத்தாக்குதலுக்கு இது சிறந்த நிவாரணி தொடர்ந்து தடவ சுருக்கங்கள் நீங்குகின்றன. இதன் ஜுசை தலையில் தடவி சிறிது நேரம் தடவி கழுவி விட முடி வறட்சி நீங்கும். சிலருக்கு சளி பிடிக்கின்றது. 10 நிமிடங்களிலேயே தலையை அலசி விடவும்.

* பல விஞ்ஞான ஆய்வுகள் `ஹோமியோபதி' வைத்திய முறையிலும் அநேக தீர்வுகள் உள்ளன என்பதனைக் கூறுகின்றன.

* பூண்டு பல் ஓரிரண்டு தினமும் எடுத்துக் கொள்வது இரத்தம் கெட்டிப்படுவதை தவிர்க்கும். கெட்ட கொலஸ்டிரால் நீக்கும். பூண்டு மாத்திரைகளிலும் இதே பலன் உண்டு.

இஞ்சியினை தினமும் நன்கு உணவில் சேர்த்துக் கொள்வது மூட்டு வலியின் வெகுவாகக் குறைக்கின்றது என்பது ஆய்வு கூற்று. தினமும் 30 கிராம் இஞ்சியினை உணவில் சேர்ப்பது நல்ல முன்னேற்றத்தை அளிக்கும்.

அடிபட்டு வெறும் வீக்கமா, அந்த இடம் கறுத்தோ, நீலமாக தெரிகின்றதா பொதுவில் அடிபடும் பொழுது அல்லது எங்காவது இடித்துக் கொள்ளும் பொழுது தோலுக்கு அடியிலுள்ள மிக துண்ணிய இரத்தக் குழாய்கள் உடைந்து சிறு இரத்தக் கசிவு ஏற்படுகின்றது. சிறிது காலம் கருப்போ, நீலமோ உடைய வீக்கமும் உடன் வலியும் அவ்விடத்தில் ஏற்படுகிறது.

வெளியில் துளி கூட இரத்தக் கசிவு இருக்காது. இது இரண்டு வாரங்களில் தானாகவே சரியாகக் கூடியது. அதற்காக நாம் அப்படியே வலியோடு இருக்க முடியாது அல்லவா. எனவே வீக்கம் தோன்றிய இடத்தில் முதலில் ஐஸ் கொண்டு தேயுங்கள். இது இரத்தக் கசிவினை நிறுத்தி நிறமாற்றத்தினையும் குறைக்கும்.

நாள் ஒன்றுக்கு 10 நிமிடம் வீதம் 3 முறை செய்யுங்கள். ஒரு நாள் சென்று சிறிது நேரம் வெந்நீர் ஒத்தடம் கொடுக்க வீக்கமடைந்த பகுதியில் கொடுக்க இரத்த ஓட்டம் சீர்படும். இதனையும் நாள் ஒன்றுக்கு 10 நிமிட வீதம் மூன்று முறை செய்யுங்கள். வலி இருந்தால் சாதாரண மாத்திரையே போதும் `ஆஸ்ப்ரின்' மாத்திரை வேண்டாம்.

இது பொதுவான சிகிச்சை ஆகும். ஆனால் இருதய நோய்க்காக நீங்கள் தொடர்ந்து ஆஸ்ப்ரின் மாத்திரை எடுத்துக் கொள்பவராக இருந்தால் கண்டிப்பாக, மிக கண்டிப்பாக உங்கள் மருத்துவரின் ஆலோசனை இன்றி நீங்கள் ஆஸ்ப்ரின் மாத்திரையின் நிறுத்தக் கூடாது.

அடிபடுதல் மூட்டுகளில் ஏற்பட்டாலோ, வலி பொறுக்க முடியாது இருந்தாலோ, ஜுரம் ஏற்பட்டாலோ, காது பக்கத்தில் ஏற்பட்டாலோ உடனடி மருத்துவ ஆலோசனை அவசியம். அடிக்கடி இப்படி சிறு சிறு அடிப்பட்டு பக்கம் பக்கமாய் கரு இரத்தம் கட்டும் செயல் உங்களுக்கு நிகழுமானால்

* மருத்துவ ஆலோசனையுடன் வைட்டமின் சி எடுத்துக் கொள்ளுங்கள்.

* எலுமிச்சை, கேரட், ஆரஞ்சு இவற்றினை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

* நீங்கள் ஏதேனும் பாதிப்பிற்காக எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரைகளைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் கலந்து பேசி அறிவுரை பெறுங்கள். வெப்ப, சுட்ட காயங்கள் பொதுவில் கொதிக்கும் எண்ணெய், கொதிக்கும் உணவு, தீக்காயம் ஆகியவை லேசாக பட்டாலே எரிச்சலை கொடுக்கக் கூடியவை. பட்ட இடம் சிவந்து சிறிது வீக்கத்துடன் இருக்கும். இவை சிறிய அளவிலேயே இருக்கலாம்.

அதிகமான பாதிப்பு ஏற்படுத்தும். நெருப்பு, நீராவி, இரசாயனங்கள் இவற்றினால் ஏற்படலாம். இவை பட்ட இடம் சிவந்து வலி, கொப்பளம், வீக்கம் இவற்றுடன் இருக்கும். மிக மிக அதிகமான பாதிப்பு என்பது கருத்தோ, வெளுத்தோ, சிவந்தோ இருக்கும் இவர்களுக்கு அதிக வலியை கூட உணர முடியாது.

ஏனெனில் நரம்புகள் கூட பாதித்திருக்கும். இந்த வகை காயங்கள் உடனடி அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவை. நாம் வீட்டிலேயே நம்மை கவனித்துக் கொள்ளக் கூடிய மிக சாதாரண சிறிய சூட்டுக் காயங்களை கையாள்வது எப்படி என தெரிந்து கொள்வோம்....

* சரும சிவப்பு

* சிறிது வீக்கம்

* கொஞ்சம் வலி ஆகிய அறிகுறிகளுடன் இருக்கும். பொதுவில் இது கை, கால்களிலேயே அதிகம் ஏற்படும் ஆனால் மூட்டு இணைப்புகளில் இக்காயம் ஏற்படின் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். இரண்டாவது வகை காயம் சரும முதல் போர்வையிலிருந்து இரண்டாவது போர்வைக்கு ஊடுவி இருக்கும். இதில்

* கொப்புளங்கள் தோன்றும்

* அதிக சிவப்பு இருக்கும்

* வலி, வீக்கம், எரிச்சல் அதிகமாக இருக்கும். முதல் வகை மற்றும் இரண்டாம் வகையில் இல்லாமல், காயம் 3-வது வகைக்கு உட்பட்டு இருந்தால் கீழ்க்கண்ட முறைகளை கையாளலாம்.

* காயம்பட்ட இடத்தை குழாய் நீரில் 10 நிமிடம் காட்டுங்கள். கண்டிப்பாக ஐஸ்கட்டி வைக்காதீர்கள்.

* சுத்தமான மென்மையான பாண்டேஜ் துணி கொண்டு இருக்கமில்லாமல் சுற்றி விடுங்கள்.

* சாதாரண வலி நிவாரண மாத்திரைகளை தேவைபட்டால் எடுத்துக் கொள்ளுங்கள்.

3 வயது குழந்தைகள் முதல் மாணவ பருவத்தினர் வரை ஆஸ்ப்ரின் மாத்திரை எடுத்துக் கொள்ள உங்கள் மருத்துவரின் அனுமதி பெறுங்கள். பொதுவில் இத்தகு சிறிய தீக்காயங்கள் தானே ஆறிவிடும். அதிக வலி, ஜீரம், காயம்பட்ட இடம் புண்ணாக்குதல் போன்றவை மருத்துவ உதவி தேவைப்படுபவை.

பொதுவில் தீக்காயம், சுட்ட காயம் இவற்றிக்கு

* ஐஸ்கட்டி உபயோகிக்காதீர்கள்

* வெண்ணை, முட்டை வெள்ளைக்கரு இவற்றினை பயன்படுத்தாதீர்கள்.

* கொப்புளங்களை உடைக்காதீர்கள். மூன்றாவது வகையான தீக்காயம் அதிக பாதிப்புடையது. நிறைய சதை, கொழுப்பு, எலும்பு வரை பாதித்திருக்கும்.

* இவர்களுக்கு குளிர்ந்த நீர் உபயோகிக்காதீர்கள்.

* அவர்கள் மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகி உள்ளனரா என்பதை பாருங்கள்.

* காயம் பட்ட இடத்தை இருதயத்திற்கு சற்று மேல் இருக்க முடியுமா என்று பார்த்து முடிந்தால் உயர்த்தி விடுங்கள். குளிர்ந்த சுத்தமான மென்மையான அகன்ற பாண்டேஜ் துணியில் காயம் பட்ட இடத்தை மென்மையாக மூடுங்கள். உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...