Thursday, December 1, 2016

*ஒடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்!*



🏃🏿🏃🏿🏃🏿🏃🏿🏃🏿🏃🏿🏃🏿🏃🏿🏃🏿🏃🏿🏃🏿
*எல்லோரும் அதிவேகமாக*
*ஓடுகிறார்கள்.*
*நவீனம் நடத்தும்* *பொருளாதார பந்தயத்தில்*
*ஓடுவதற்கு தடங்கலாக* *இருந்த சொந்த ஊர்களை உதறித்* *தள்ளி விட்டு*
*வேகமாக ஓடினார்கள்..*
*பந்தயம் கடினமாக இருந்த போது*
*வேகம் மேலும் கூட்ட* *தாய்மொழி தடையாக* *இருக்கவே அதையும்* *ஒதுக்கிவைத்து*
*ஓடினார்கள்..*
*பின்னர் அறச்சிந்தனைகள்,*
*கடமை, கண்ணியம் கூட* *சுமைகளாகிப் போயின..*
*எனவே அவை*
*அனைத்தையும் உதறித்*
*தள்ளிவிட்டு ஓட்டத்தைத்*
*தொடர்ந்தனர்..*
*உறவுகள் சுமையாக* *அரிக்கும் படைபோல்* *அவர்களுக்குத்* *தோன்றின..*
*எனவே அவற்றையும்* *விட்டுத் தள்ளினார்கள்* *அல்லது வில(க்)கி* *ஓடினார்கள்..*
*இந்த நவீன மனிதர்களுக்குப்* *பொருளாதாரம்,* *வெற்றிகரமான வாழ்க்கை என்ற அடங்காத* *வெறி மட்டுமே எஞ்சி*
*உள்ளதால்*
*பந்தயத்தில் வேக வேகமாக ஒடிக் கொண்டிருக்கிறார்கள்..*
*இனி அவர்கள் வீசி எறிய*
*எதுவுமில்லை!..*
*குடும்பங்கள் சிதறிக் கிடக்கின்றன...*
*மடிக்கணினித் திரை* *வழியாக* *பேரப்பிள்ளைகளைக்* *கொஞ்சும் பெரியவர்களை பெற்றெடுத்திருக்கிறார்கள், பந்தயத்தில் ஓடும் பிள்ளைகள்!...*
*பிறந்த குழந்தையின்* *பசிக்கு பாலூட்டவும்* *மலத்தை கழுவவும்* *நேரம் இல்லாத*
*இளம் அம்மாக்களும்* *உருவாகிவிட்டார்கள்..*
*மனைவி வலியால்* *துடித்தாலும்* *அரவணைத்து தட்டிக்* *கொடுத்து பாசம் காட்டும்* *பக்குவமற்ற*
*கணவர்களும் மலிந்து* *போனார்கள்...*
*என்றாலும் எல்லோரும்* *ஒடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்!*
*பல பெரியவர்களுக்குப் பிள்ளைகளைப் பார்க்காத ஏக்கத்தில் மாரடைப்பு வருகிறது..*
*சிலருக்கு அவர்கள் படும் பாட்டை நினைத்து உயிர் பிரிகின்றது*..
*மருத்துவச் செலவுக்கு அனுப்பும் பணம் கூட அவரவர் கணக்குகளில் வங்கிகளில் நிரம்பி வழிகின்றன..*
*மருத்துவ நிலையங்களுக்கு அழைத்துச் செல்லவும் முடிவதில்லை...*
*எல்லோருடைய நேரத்தையும் நிறுவனங்களும் கேளிக்கைகளும் விழுங்கிவிட்டன..*
*நகரங்கள் விரிவடைய*
*மனித மாண்பு வெகுவாகச் சுருங்கி விட்டது.*
*மூன்று வயது நிரம்பாத குழந்தைகள் மழலைக் காப்பகங்களுக்கும்* *பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப் படுகின்றனர்..*
*இவர்கள் ஓட்டத்திற்கு இந்த குழந்தைகள் தடையானவர் போலவேத் தென்படுகின்றார்கள்!..*
*தொடக்கத்தில் கூட்டுக்குடும்பங்கள் தனிக்குடும்பங்களாகின..*
*இப்போது தனிக்குடும்பங்களின் உறுப்பினர்கள்* *தனித்தனியாகப் பிரிந்து இயங்குகிறார்கள்..*
*பெற்ற பிள்ளைகளை* *மூன்று வருடங்கள் கூட* *முழுமையாக பராமரிக்க இயலாத* *சமூகத்திற்கு*
*இயற்கை*
*மழையையும் காற்றையும் சீராக வழங்கி விடுமா, என்ன?*
*ஆயிரம் சூரியன்..*
*ஆயிரம் சந்திரன்!*
*ஒரே ஒரு பூமி*
*நமக்குத்* *தெரிந்தது,*
*நாம் வாழ்வது!*
*இனி சொல்வதற்கு ஒன்றுமில்லையே!*
*மனித இனம் அழிவுக்கான பாதையைத் தேர்ந்தெடுத்து* *ஓடிக்கொண்டிருக்கிறது..*
*இனி அதுவே* *நினைத்தாலும்*
*நிறுத்த முடியுமா, என்ன?*
🏃🏿🏃🏿🏃🏿🏃🏿🏃🏿🏃🏿🏃🏿🏃🏿🏃🏿🏃🏿🏃🏿

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...