Sunday, January 15, 2017

முதலில் தோன்றிய தமிழர் மட்டுமே..!!



இந்தியா என்ற நாடு இருக்குமெனில் அதை சொந்தம் கொண்டாட ஓர் இனத்துக்குமட்டும் உரிமையுண்டு. அது வேறுயாருமல்ல முதலில் தோன்றிய தமிழர் மட்டுமே..!!
சொன்னவர்கள் இரு மாமனிதர்கள் டாக்டர்.அம்பேத்கார் மற்றும் மேற்குவங்காள முன்னாள் முதல்வர் ஜோதிபாசு..
மறுபிறவி இருக்குமெனில் தமிழ் அன்னைக்கு வீர மகனாக பிறப்பேன் என முழக்கமிட்டவர் யாசகம் கேட்டு வாங்கக்கூடாது போராடி பெறவேண்டும் சுதந்திரம் என கர்ஜித்த நேதாஜி சுபாஷ் அவர்களுக்கு தெரிந்த வரலாறு இவர்களுக்கு தெரியாமல்
போச்சு..
பணிந்து போக தமிழர்கள் நனைந்த கோழிகள் அல்ல !!தமிழர்கள் புலிகள் என புகழாரம் சூட்டி ஆட்சிமொழியாக்கினார் தமிழை சிங்கப்பூரை சிறப்படையச் செய்த முதல் பிரதமர் லீ குவான் யூ..
தமிழனை ஆரம்பகாலத்தில் உலகறியச்செய்தவன் சோழன்..இக்காலத்தில் தமிழனை உலகறியச்செய்தவன் தமிழனத் தலைவர் பிரபாகரன்..
யாதும் ஊரே யாவரும் கேளிர் எனக்கூறிய கனியன் பூங்குன்றனாரும் உலகப்பொதுமறையான திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரும் தமிழனே
சீனாவுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுத்தந்த போதி தர்மரும் தமிழனே மின்னஞ்சல் கண்டுபிடித்த சிவா அய்யாத்துரை தமிழனே..
இந்தியாவுக்கு ஆஸ்கர் விருது வாங்கிக்கொடுத்த திலீப் என்ற ஏ.ஆர்.ரகுமான் தமிழனே..தெற்காசிய நாடுகளை ஆண்டவனும் தமிழனே..
தென்குமரியின் லெமூரீயா கண்டத்தில் பிறந்தவனும் தமிழனே ..
உலக மொழிக்கெல்லாம் தாய்மொழியான தமிழுக்கு சொந்தமானவனும் தமிழனே..
துருக்கி நாட்டிலிருந்து பிறந்த இந்திக்கு இவ்வளவு இறுமாப்பு இருப்பின் தமிழனுக்கு எப்படி இருக்குமென சற்று சிந்தித்துப் பார்..
வரலாறு தெரியாமல் பல கலப்பு
மொழிகளை பேசும் இந்தியனே..!!
அடக்கமாக வாழ நினைக்கிறோம் .அடக்க நினைத்தாயெனில் ஆழிப்பேரலையாய் தோன்றிடுவோம்..தமிழன் என்ற செருக்கு எனக்கு உண்டு..!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...