Saturday, January 21, 2017

ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான ‘PETA’ பற்றிய அதிர்ச்சி உண்மைகளும், அபாய தகவல்களும்!

ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான PETA பற்றிய அதிர்ச்சி உண்மைகளும், அபாய தகவல்களும்!

ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான PETA பற்றிய அதிர்ச்சி உண்மைகளும், அபாய தகவல்களும்!
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதி மன் றம் இடைக் காலத்தடை விதித்திருக்கும் இந்த வேளையில்,
ஜல்லிக்கட்டு க்கு எதிராக வழக்கு தொடர்ந்த PETA என்ற அமைப்பு பற்றி நாம் தெரிந்து  கொள்வது அவசியம்.
யார் இந்த PETA?
 
PETA– People for the Ethical Treatment of Animals என்று தன்னை அழைத் துக் கொள்ளும் இந்த அமைப்பானது 1980ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இயங்கி வருகிறது. அமெரிக் காவில் ஆதரவற்ற விலங்குகளைப் பாதுகாக்கும் ஒரு காப்பகம் என  தன்னைப் பதிவுசெய்துகொண்டது. (எளி மையாகச் சொல்ல வேண்டுமானால் நம்மூரில் முதி யோர் காப்பகங்கள் இயங்கி வருவதைப் போல) சரி… அதன் பின்னர் நடந்தது என்ன? வீதியில் ஆதரவின்றி அலையும் நாய்கள் மற்றும் பூனைகளைக் காப்பாற்ற களத்தில் குதிக்கப் போவதாக அறிவித் தது பீட்டா.
 
ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான போன்கால் கள் பீட்டாவிற்கு தெரு நாய்களைப்பற்றி வரத் துவங் கின. இலட்சக்கணக்கான விலங்குகள் காப்பகத்தில் குவிந்துவிடவே அமெரிக்க அரசை நிர்பந்தப்படுத்தி ஒரு சட்டம் இயற்ற வைத்தது பீட்டா. அந்தச் சட்டத்தின்படி பதினைந்து நாட்கள் பீட்டா ஒரு ஆதரவற்ற நாயைப் பராமரிக்கும். அந்தப் பதினைந்து நாட்களுக்குள் யாரும் அந்நாயைத் தத்தெ டுக்கமுன்வராவிட்டால் பீட்டா அந்நாயைக் கருணைக் கொலை செய்து கொள்ளலாம்.
 
இவ்வாறு 2015ம் ஆண்டு மட்டும் பீட்டா கொ லை செய்த நாய்கள், பூனைகள், முயல்கள் மற்றும் இன்னபிறவிலங்குகளின் எண்ணிக்கை எவ்வளவுதெரியுமா? அதிர்ச்சி அடைய வேண்டாம்…35000.  ஆமாம் நண்பர்களே … முப்பத்தி ஐந்து ஆயிரம்!! இந்தக் கருணை நிறைந்த மகா கொலை காரர்கள்  நம்மிடம் வந்து சொல்கி றார்கள்…
 
நீ மாட்டு வாலைத் திருகுகிறாய்!
 
கொம்பைப் பிடிக்கிறாய்!
 
கழுத்தைக் கட்டிக் கொண்டு அதைத் துன்புறுத்துகிறாய்!
 
அதனால் நீ மாட்டை, மிருக வதை செய்கிறாய்… எனவே ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்ய வேண்டும்!
 
‘சாத்தான் வேதம் ஓதுகிறது’ என்பார்களே நம்மூரில்… பீட்டா செய்வது அது வே தான்!!
 
பீட்டா – மிருகவதை வியாபாரம்
 
அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் பீட்டா கருணைக்கொலை என்றபெயரில் ஏன் இத்தனை இலட்சம் நாய்களயும், பூனைகளையும்,முயல்களையும் கொல்ல வேண்டும்?
 
அதற்கு உணவு அளித்துப் பராமரிக்கப் பண மும், இடமும்இல்லை என்பது மட்டும்தான் உண்மையான காரணமா?  இதற்கான பதிலில் தான் இருக் கிறது சூட்சுமம்!
 
அமெரிக்காவில் வளர்ப்புப் பிராணிகள் விற்பனை என்பது பல்லாயிரக் கணக்கான கோடிகள் புரளும் மிகப் பெரிய மார்க்கெட்.
 
எனவே வளர்ப்புப்பிராணிகளை விற்பனைசெய்யும் நிறுவனங்கள் பீட்டாவிற்கு மிகப்பெரும் பணத்தை நிதியுதவி என்ற பெயரில் தொடர்ந்து வழங்கி வரு கின்றன.
 
பீட்டாவின் இந்த கருணைக் கொலைகள் அவர்கள் வியாபாரம் சரிந்து விடாமல் உயர்ந்து கொண்டேயிருக்க உதவுகிறது என்பது தான் உண்மை.


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...