Tuesday, January 31, 2017

சிகரெட்டினால் பாதிக்க‍ப்பட்ட‍ நுரையீரலை சுத்த‍ம் செய்யும் அற்புதமான ஆரோக்கியமான நம் நாட்டுமருந்து.

சிகரெட்டினால் பாதிக்க‍ப்பட்ட‍ நுரையீரலை சுத்த‍ம் செய்யும் அற்புதமான ஆரோக்கியமான  நம் நாட்டுமருந்து

சிகரெட்டினால் பாதிக்க‍ப்பட்ட‍ நுரையீரலை சுத்த‍ம் செய்யும் அற்புதமான ஆரோக்கியமான  நம் நாட்டுமருந்து
புகைப்பிடித்தல் என்பது மோசமான பழக்கம் என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், அக்கெட்ட
பழக்கத்தைக் கைவிடமுடியாமல் ஏராளமானோர் அவஸ்தைப்படுகின்ற னர். மேலும் இன்றைய மன அழுத்தமிக்க வாழ்க்கை முறையினால், மனதில் உள்ள பாரத்தைக் குறைப்பத ற்காகவே பலர் புகைப்பிடிக்கின்றனர்.
இப்படி புகைப்பிடிப்பதால், நுரையீரல் மிகவும் மோச மாக பாதிக்கப்பட்டு, அதனால் நுரையீரல்அழற்சி, காச நோய் போன்றவற்றால் நாள்கணக்கில் அவஸ்தைப்படக்கூடும். புகைப் பிடித்தால் மட்டும் தான் நுரையீரலில் பிரச்சனைகள் வரும் என்பதில்லை. அதை சுவாசித்தாலும் தான் பாதிப்பு ஏற்படும்.
ஆகவே சிகரெட் புகையினால் பாதிக்கப்பட்ட நுரையீர லை சுத்தம்செய்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஓர் அற்புதமான நாட்டு மருந்து ஒன்று உள்ளது.
மஞ்சள் தூள் – 2 டேபிள் ஸ்பூன் 
பூண்டு – 400 கிராம் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி – 1 சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
நாட்டுச்சர்க்கரை – 400 கிராம்
தண்ணீர் – 1 லிட்டர்
இந்த மருந்தில் சேர்க்கப்படும் மஞ்சளில் நோயெதிர்ப்பு அழற்சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மைகள் உள்ளது. மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் உட்பொருள் நோயெதிர்ப்பு மண்டல த்தின் வலிமையை நேரடியாக அதிகரிக்கும். மேலும் ஆய்வுக ளும் மஞ்சள் நுரையீரலில் உள்ள பிரச்சனைகளைக் குணப்படுத்துவதாக கூறுகின்றன.
பூண்டில் உள்ள அல்லின், உடலினுள் செல்லும்போது அல்லிசினாக மாறி, பூஞ்சை மற்றும் பாக்டீரியல்தொற்றுக்களை எதிர்த்து ப் போராடி, நுரையீரலுக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த உடலுக்கும் ஓர்நல்ல பாதுகாப்பை வழங்கும்.
இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் என்னும் உட்பொருள், நுரையீரலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்தழித்து, நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். மேலும் இஞ்சி, நுரையீரலில் உள்ள சளியை முறித்து உடலில் இருந்து வெளியேற்றும்.
ஒருபாத்திரத்தில் நாட்டுசர்க்கரையை சேர்த்து அடுப்பில் வைத்து, அத்துடன் இஞ்சி பூண்டு மஞ்சள் மற்றும் நீர் ஆகியவ ற்றைசேர்த்து, குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கி, குளிர்ந்ததும் கண்ணாடி பாட்டிலில் ஊற்றி விட்டு, ஃப்ரிட்ஜில் வைத்து பாதுகாக்கவும்.
இந்த கலவையை தினமும் இருவேளை உட்கொள்ள வேண்டும். அதில் அதிகாலையில் எழுந்ததும் காலை உணவிற்கு முன் வெறும் வயிற்றில் 2 டேபிள் ஸ்பூன் சாப்பிட வேண்டும். பின் இரவு உணவு உண்பதற்கு 2 மணிநேரத்திற்கு முன் 2 டேபிள் ஸ்பூன் சாப்பிட வேண்டும்.

இந்த நாட்டு மருந்தை உட்கொண்டு வரும்போது, தினமும் தவறாமல் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். இதனால் உடலில் இருந்து டாக்ஸின் களும் வெளியேற்றப்படும்.*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...