Sunday, January 15, 2017

துரோகம் துரோகம் துரோகம் என மாற்றிய பெருமை கட்டுமரத்திற்கும் அவரது குடும்பத்திற்குமே சாரும்.

பொன்.ராதாகிருஷ்ணன் அவர்களை ஒரு வகையில் பாராட்டலாம் காரணம் ஜல்லிகட்டு விவகாரத்தில் தனது முயற்சி தோல்விடையந்ததும் எந்தவித சாக்குபோக்கும் சப்பைக்கட்டும் கட்டாமல் பகிங்கரமாக மன்னிப்புக் கேட்டார். மேலும் அவரை பாராட்ட வேண்டும் என நான் சொல்வதற்கு காரணம், அவர் பிஜேபி கட்சியில் இருப்பதால் மத்திய அரசை ஆதரித்து பேசுவது இயல்பு. ஆனால் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள மாவட்டத்தில் பிஜேபி சார்ந்த பொன்னார் வெற்றி பெற்றார் என்றால் , அது தனிப்பட்ட செயல்பாட்டுக்கு கிடைத்த பெற்றி , இன்னும் சொல்லப்போனால் பிஜேபியை விடுத்து சுயேட்சையாக நின்றாலும் அவருக்கு வெற்றி உறுதிதான். காரணம் அவரின் மக்கள் சேவை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது.
ஆனால் கட்டுமரமும் தொளபதியும் திமுகவும் காங்கிரஸ்வுடன் சேர்ந்து தமிழ்நாட்டுக்கு எத்தனை வகையில் துரோகம் செய்ய முடியுமோ அத்தனை வகையிலும் துரோகம் செய்துவிட்டு இப்போது அதிமுக குறைகூறுவது நகைமுரண்.
முதலில் சர்காரிய கமிஷன் முகத்தில் கரியைபூசி திமுகவின் துரோகத்தை வெளிக்கொணர்ந்தது. அதன்பின்னர்
1) கட்சத்தீவுவை தாரைவார்த்தது
2) காவரி மேலாண்மை வாரியம் தொடர்பான வழக்கை திரும்ப பெற்றது.
3) திமுக ஆட்சியின் போது கர்நாடகம் தடுப்பணை கட்டியபோது தனது மீதுள்ள வழக்கை முடிக்க மத்தியில் இருந்த காங்வுடன் டீசல் பேசி வாய்மூடி மௌனம் காத்தது.
2) தமிழ்நாட்டுக்கு துரும்பை கிள்ளிப்போடாத திமுக, தனது பேரன் கலாநிதி தொழிலை பெருக்க புறவாசல் வழியாக தயாநிதியை கொண்டு வந்து பேரம்பேசி தனக்கு ஆதாயம் தரும் துறையை அமைச்சரவை கேட்டு பெற்றது.
3) அதன்பின் தொடர்ச்சியாக திமுகவின் குடும்ப சண்டையில் ஒருவருக்கொருவர் காட்டிகொடுத்து வெளிவந்த குட்டுகள் ஏராளம்.
4) தயாநிதி கலாநிததயின் கேபிள் திருட்டு
5) அழகிரியின் ஹார்லிக்ஸ் திருட்டு
6) தமிழன் என்றாலே வடநாட்டு மக்கள் கேவலமாக பார்க்கும் நிலை உருவாக்கிய கனி ராசாவின் 1.76இலட்சம் கோடி 2ஜி திருட்டு
7) தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன், சாதிக் பாட்சா, அண்ணா நகர் ரமேஷ், மதுரை கம்யூனிஸ்ட் பெண் கவுன்சிலர் என அரசியல் ஆணவக் கொலையை தமிழ்நாட்டில் அரங்கேற்றிய பெருமை திமுகவை சாரும்
8) திமுக குடும்பம் மட்டுமல்லாது நேரு, வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, சுரேஷ்ராஜன் என மாவட்டத்துக்கு மாவட்டம் தங்கள் கொள்கைக்கு ஏஜெண்டுகளை நியமித்து அவர்கள் குறுநில மன்னர்கள் போல் செயல்பட்டது.
9) இன்றைய ஜல்லிகட்டு விவகாரம் முதற்கொண்டு அதை எதிர்க்கும் பீட்டாவிற்கு அனுமதி கொடுத்தது.
10) போலிஸ் தடியடி பற்றிபேசும் இதே ஸ்டாலின் துணைமுதல்வராக இருந்த போதுதான், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கட்டவிழ்த்து விட்ட அராஜகம் நாடறியும்.
இப்படி ஆதிமுதல் அந்தப் வரை திமுக தமிழ்நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும், தம்மை நம்பியவர்களை கழுத்தறுத்து அறிஞர் அண்ணா உருவாக்கிய திமுகவின் தாரகமந்திரமான கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்பதை மாற்றி துரோகம் துரோகம் துரோகம் என மாற்றிய பெருமை கட்டுமரத்திற்கும் அவரது குடும்பத்திற்குமே சாரும்.
இந்நிலையில் அதிமுக வை விமர்சிக்க தொளபதிக்கு எந்த அருகதையும் இல்லை.
திமுகவின் துரோக வரலாறு நாடறியும்
துரோகம் என்றால் திமுக,
 திமுக என்றால் துரோகம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...