Tuesday, December 16, 2014

ஜெயலலிதாவைக் காப்பாற்றும் சட்ட‍ப்பிரிவு 313 – ஓர் அலசல்

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதி மன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அவர்களால், ஜெயலலிதா
பிரதான குற்ற‍வாளி என்று அறிவித்து அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்க‍ப்பட்டது. அன்று மாலையே ஜெயலலிதாவை  பெங்க ளூரில் உள்ள‍ பரப்பன  அக்ரஹாரத்தி ல் உள்ள‍ சிறையில் அடைக்கப்பட்டா ர். இவரது ஜாமீன் மனு சிறப்பு நீதிமன் றம் மற்றும் கர்நாடக உயர்நீதிமன்ற ங்களில் தள்ளுபடியான நிலையில் உச்ச‍நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்க‍ல் செய்ய‍ப்பட்ட‍து. இதுகுறித்து உச்ச‍நீதிமன்றம் விசாரித்து ஜெயலலி தாவிற்கு சில நிபந்தனைகளை விதித் து ஜாமீன் வழங்கியது.  உங்களுக்கு நினைவிருக்க‍லாம்.
இதிலிருந்து ஜெயலலிதா தப்பிக்க‍ வாய்ப்புண்டா, அல்ல‍து தண்டனை குறையுமா என்ற விவாதம், தெருவோர டீ கடை முதல் ஊடகம் மற்றும் தொலைக்காட்சிகள் வரை நட ந்தேறிக்கொ ண்டிருக்கிறது.
இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலி தாவிற்கு விதிக்க‍ப்பட்ட‍ 4 ஆண்டுக ள் சிறைத்தண்ட னையை குறைக்க‍, சட்ட‍ப்பிரிவு 313 உம், அதன் உட்பிரி வுகளின் கீழ் வழிவகை உள்ள‍தாக சட்ட‍ வல்லுநர்கள் தெரிவித்துள்ள‍ னர்.
அது என்ன‍ங்க சட்ட‍ப்பிரிவு 313உம் அதன் உட்பிரிவுகளும் என்றுதானே கேட்கிறீர்கள்
குற்ற‍ம் சுமத்த‍ப்பட்ட‍ நபரை நீதிமன்றம் விசாரணை செய்வதற்கு கு.வி.மு.ச• பிரிவு 313 வழிமுறை செய்ய‍ அதிகாரம் கொடுக்கிறது (313) 
குற்ற‍ம் சுமத்த‍ப்பட்ட‍ ஜெயலலிதாவிற்கு எதிராக உள் ள‍வைகள் குறித்து அவராகவே விளக்குவதற்கு  வாய்ப் புக்கொடுக்க‍ப்படுகிறது. நீதிமன்றம் வழக்கின் எந்த நிலையிலும் தேவை என்று எண்ணுகின்ற கேள்விக ளைக் குற்ற‍ம் சுமத்த‍ப்பட்ட‍ நபரைக் கேட்கலாம்  (பி.313 (1) (ஏ) 

அரசுத் தரப்பு சான்றுரைஞர்களை விசாரணை செய்த பின் எதிர் வழக்குகளைத் தொடுத்திட, குற்ற‍ம் சுமத்த‍ப் பட்ட‍ நபரைக் அழைக்கும் முன்னர், வழக்கினை குறித் து பொதுவான கேள்விகளை அவரிடம் கேட்கலாம். பி.313 (1)(பி)

குற்ற‍ம் சுமத்த‍ப்பட்ட‍ நபரை விசாரணைச் செய்யும் மு ன்ன‍ர் அவருக்கும் சத்தியபிரமாணம் செய்து வைக்கக் கூடாது. (பி.313 (2) 

குற்ற‍ம் சுமத்த‍ப்பட்ட‍ நபர், நீதிமன்றம் கொடுத்த‍ கேள் விகளுக்குப் பதில் சொல்ல மறுத்தால், பொய்யான பதில் கொடுத்தால், அதன் பொருட்டு அவருக்குத் தண் டனைக்கொடுக்க‍க் கூடாது. (பி.313 (3) 

குற்ற‍ம் சுமத்த‍ப்பட்ட‍ நபரால் நீதிமன்றம் கேட்ட கேள் விகளுக்கு கொடுக்க‍ப்பட்ட‍ பதில்கள், குற்ற‍ வழக்கு விசாரணையின் போது கருத்தில் கொள்ள‍ வேண்டும். (பி. 313 (4) 

குற்ற‍ம் சுமத்த‍ப்பட்ட‍ நபரை, குறுக்கு விசாரணைச் செய்வது, அவர்மீது சுமத்த‍ப்பட்ட‍ குற்றத்தை அவர் ஒப் புக்கொள்ள‍ச் செய்வதற்கு இந்தச் சட்ட‍ப்பிரிவை சட்ட‍ அறிஞர்கள் இயற்றவில்லை என்று பி.முருகன் எதிர் எத்திராஜம்மாள் 1973 சி.ஆர்.ஐ. எல்.ஜே 1256 மேட் ஹெச்.சி. என்ற வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கூறியது.  

இந்த சட்ட‍ப் பிரிவின் முக்கிய நோக்க‍ம் என்ன‍?
குற்ற‍ம் சுமத்த‍ப்பட்ட‍ நபருக்கு தனக்கு எதிராகத் தோ ன்றும் சான்றுரைகள், சாட்சியங்கள் சூழ்நிலைகள் எல் லாவற்றினுக்கும் நல்ல‍ வாய்ப்புக் கொடுத்து விளக்க‍ ம் கேட்பதே ஆகும் என்று உச்ச‍நீமின்றம் அஜ்மீர் சிங்க எதிர் – ஸ்டேஸ் ஆஃப் பஞ்சாப் (ஏர் 1953 எஸ்.சி.76) என்ற வழக்கில் கூறியது. 
மேலும் குற்ற‍ம் சுமத்த‍ப்பட்ட‍ நபரிடம் கேட்கப்படும் நபரிடம் கேட்கப்படும் கேள்விகள், நேர்மையானதாக வும் வழக்கினையும் கேடறிந்தே தீர்ப்புச் சொல்ல வே ண்டும் என்பதை வலியுறுத்துகிறது. உச்ச‍நீதிமன்றம் பஸ்வராஜ் ஆர். பாட்டீல் எதிர். ஸ்டேட் ஆஃப் கர்நாட கா 2000 (8) செக்.740 என்ற வழக்கின் மூலம் கூறியது. 

குற்ற‍ம் சுமத்த‍ப்பட்ட‍ நபரின் விளக்க‍ம், முன்னுக்குப் பின் முரணாக இருந்தால், நீதிமன்றம் அதனை உச்ச‍ நீதிமன்றம் சுநேந்திரா சரண் எதிர். ஸ்டேஸ் ஆஃப் கர் நாடகா 2000(8) எஸ்.சி.சி.740 என்றவழக்கில் கூறியது. 

குற்ற‍ம் சுமத்த‍ப்பட்ட‍ நபரிடம் விசாரணை நடத்தும் போது அது, கேள்வி பதில் என்ற முறையிலேயே இரு க்க‍ வேண்டும் என்று கூறப்பட்டது. 

குற்ற‍ம் சுமத்த‍ப்பட்ட‍ நபரை, விசாரணை செய்தல், என்பது மிகவும் முக்கியமான நிலை எனவே அனை த்து வகையான கவனமும் அதில் ஈர்க்க‍ப்பட்டு இருக்க‍ வேண்டும். பதிவு செய்ய‍ப்பட்ட‍வை. துல்லியமாக (அக்கியூரேட்) இருக்க‍ வேண்டும். அதிகாரப்பூர்வமாக (அத்தென்டிக்) இருக்க‍ வேண்டும். 

செஷன்ஸ் நீதிமன்றம் குற்ற‍ம் சுமத்த‍ப்பட்ட‍ நபரை விசாரணை செய்யும்பொழுது கேட்கப்படும் கேள்வியு ம் பதிலும் நீதிபதியால் அல்ல‍து அவருடைய மேற் பார்வையிலும் கண்காணிப்பிலும் அவரால் நியமனம் செய்யப்பட்ட‍ நீதிமன்ற அலுவலரால் முழுமையாக பதிவு செய்ய‍ப்பட வேண்டும் என்று சட்ட‍ப்பிரிவு 281 என்பதன் உட்பிரிவு (2) கூறுகிறது. 

குற்ற‍ம் சுமத்த‍ப்பட்ட‍ நபர், விசாரணை செய்ய‍ப்படும் போது அதனைப் பதிவு  செய்வது அவர் எந்த மொழி யில் விசாரணை செய்ய‍ப்படுகிறாரோ அந்த மொழியி லோ அல்ல‍து நீதிமன்ற மொழியிலோ இருக்க‍ வேண் டும் (பி.281 (3) பதிவு செய்ய‍ப்பட்ட‍து. அவருக்குப் படி த்து காட்ட‍ப்பட வேண்டும். அது அவருக்குப் புரியவில் லை என்றால் தெரிகின்ற மொழியில் மொழிப் பெயர்த் துச் சொல்ல‍ வேண்டும். குற்ற‍ம் சுமத்த‍ப்ப‍ட்ட‍ நபர், விளக்க‍ம் சொல்வதற்கு சுதந்திர உரிமை உடையவர் (பி.281 (4) 

குற்ற‍ம் சுமத்த‍ப்பட்ட‍ நபரும், நீதிபதியுடன் அந்த ஆவ ணத்தில் கையொப்ப‍மிட வேண்டும். நீதிபதி தன்னு டைய முன்னிலையில் கேள்வி கேட்கப்பட்ட‍து. சுமத்த‍ ப்பட்ட‍ நபர் கொடுத்த‍ பதில் முழுமையாக உள்ள‍து என்பதை உறுதி செய்ய‍ வேண்டும் (பி. 281 (5) 

குற்ற‍ம் சுமத்த‍ப்பட்ட‍ நபரை, எப்ப‍டி, விசாரணை செய் வது என்பதைச் சொல்வதற்கு ஒவ்வொரு உயர் நீதிம ன்றமும் பொது விதி (ஜெனரல் ரூல்) உள்ள‍து. எல்லா வழக்குகளிலும் அந்த விதியைப் பின்பற்ற‍ வேண்டும் பி.283) 

குற்ற‍ம் சுமத்த‍ப்பட்ட‍ நபரின் விடுதலை (பி.232) (அக்யூண்டல் ஆஃப் அக்கியூஸ்டு) 
அரசுத்தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட‍ சான்றுரைகளைக் கேட்ட பின்ன‍ர் குற்ற‍ம் சுமத்த‍ப்பட்ட‍ நபர், விசாரணை செய்ய‍ப்படுகின்றனர். நீதிபதி, இரண்டு தரப்பு வாதங் களையும் செவிமடுத்துக் கேட்கின்றனர். குற்றம் சுமத்த‍ ப்பட்ட‍ நபர், குற்ற‍த்தைச் செய்தத‍ற்கான நிரூபணம் ஏதும் இல்லை என்று நீதிபதி கருதினால் அவரைக் குற்ற‍ப் பொறுப்பில் இருந்து விடுதலை செய்ய ஆணை ப் பிறப்பிக்க‍ வேண்டும். (பி.232) 
குற்ற‍ம் சுமத்த‍ப்பட்ட‍வர், தனக்குச் சாதகமாக சமர்ப்பி க்க‍ப்படும் சான்று (பி.233) 

குற்ற‍ம் சுமத்தப்பட்ட‍ நபரை, குற்ற‍ம் பொறுப்பில் இரு ந்து விடுதலை செய்ய‍வில்லை என்றால், நீதிபதி அவ ருடைய எதிர் வழக்கு என்ன‍? என்று கேட்க வேண்டும். அதற்குத் தேவையான சான்றுரையர்கள் சாட்சியங்கள் சமர்ப்பிக்குமாறு கோரிட வேண்டும் (பி.233 (1)

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...