Monday, December 8, 2014

அலுவலகத்தில் நீங்கள் மன நிம்மதியோடு பணிப்புரிய எளிய வழிகள் – பயனுள்ள‍ குறிப்புக்க‌ள்

அலுவலகத்தில் நீங்கள் மன நிம்மதியோடு பணிப் புரிய  எளிய வழிகள் – பயனுள்ள‍ குறிப்புக்க‌ள்
ஒரு சராசரி மனிதன் தன் வாழ்நாளில் சுமார் 200 ஆயிரம் மணி நேரங்கள் தன் அலுவலகத்தில் அல்லது பணியிடத்தில்
செலவிடுகிறான் என்று ஆய்வுகள் கூறுகின்றன. பணியிடமானது நம் முன்னேற்றத்திற்கும் சக ஊழியர்க ளின் நட்புறவுக்கும் வித்திட வேண் டுமென்றே அனைவரும் விரும்புவ ர். ஆனால் எல்லோருக்கும் இவ்வ திஷ்டம் அமைவதில்லை
நம்மோடு பணிப்புரியும் சக ஊழிய ர்கள் பல குணாதிசயங்களைக் கொண்டவர்களாக உள்ளனர் என் பதுதான் உண்மை. பலர் நம் அன்றாட பணிகளுக்குக் கைக் கொடுப்பவர்களாகவும் நம் வெற்றிக்கு உதவுபவர்களாக இருந்தாலும், ஒரு சிலர் நம க்கு எதிராகவும் நடப்பது ண்டு. அவர்கள் எதிர்மறை எண்ண ங்களைக் கொண்டவர்களும், குறைக் கூறுபவர்களும், மற்றும் சிலர் தங்களின் கட் டுப்படுத்தமுடியாத உணர்வுக ளால் அத்து மீறுபவர்க ளும் ஆவர்.  இவர்களைப்பொ துவாக நச்சு மனிதர்கள் என்று அழைக்கலாம்
நம் தொழிலுக்கோ அல்லது உடன் பணிப்புரிவோரின் நட்புற வுக்கோ பாதிப்பு வராதவகையி ல் நாம் இவ்வகை நச்சு மனிதர் களைக் கவனமுடன் கையாளு வது அவசியம். பல மனநல நிபுணர்களும் பேச்சுவார் த்தை ஆலோசர்களும் இதைப் பற்றி நிறைய எழுதியு ள்ளனர். அவர்களில் பிரேட்பேரிமற்றும் விக்டோரியா என் பவர்களைக் குறிப்பிட் டு சொல்லலாம். சில யுக்தி களைப் பயன்படுத்துவதன் மூலம் நாம் இவர்களின் நச்சு வலையில் சிக்காமல் தப்பித்துக் கொள்ளலாம்.
நச்சு மனிதர்கள் பொதுவா கக் குழப்பவாதிகளாகவும் நம்மை மன அழுத்திற்குள் தள்ளிவிடும் சாத்தியம் படைத்தவர்களாகவும் இருப்பர். மன அழுத்தமானது சரியா கக் கையாளும் பட்சத்தில் நம்மை முன்னேற்றப் பாதையில் அழை த்து செல்லும். ஆனால் அதுவே எல்லை மீறும்பொழுதுநம்மைத் தோல்வி கடலில் மூழ்கச் செய் துவிடும். ஆகவேதான் நம் மன அழுத்தத்திற்குக் காரணியாய் இருப்பவர்களிடம் ஓரடி தள்ளி யிருப்பதே நன்மையளிக்கும்.  அவர்களுடன் ஓர் எல்லை யை ஏற்படுத்திக்கொண்டு, அவர்க ளை நம் எல்லைக்குள் வரவிடாமலும் நாம் நம் எல் லையைத்தாண்டாமலும் கவனமுடன் நடந்துக் கொள் ளுதல் அவசியம்.

அதனையடுத்து, நம் உணர் வை மதித்தலும் பிறர் உண ர்வுக்கு மதிப்பளிப்பதும் பணி விடத்தில் ஒரு சுமூக மான நற்பை உண்டாக்கும். நம்மனப் பூங்காவில் நல் லெண்ணங்களைப் பூத்து குலுங்க வைக்க வேண்டியது அவசியம். அதிகப்பட்ச மன அழுத்தத்தைத் தவிர் க்கவும் நல்ல எண்ணங் களில் கவனம் செலுத்த வும் மற்றும் பிரச்சனைக ளுக்குத் தீர்வு காணவும் இது பெருமளவில் உதவி ப் புரியும்.
சக ஊழியர்கள் நம்மை அவமானப் படுத்தினாலோ அ ல்லது அவர்கள் தங்கள்கட்டுப்பாட்டை இழந்துவிட்டு குர லை உயர்த்தினாலோ உங்களுக் கு உடல்ரீதியாக பாதிப்பு ஏற்படா த பட்சத்தில் பதற்றம் கொள்ளா மல் பொறுமையாக அவர்களிடமி ருந்து விடைபெற்றுக் கொண்டு, நிலமைக் கட்டுக்குள் வந்ததும் அ வர்களிடம் மறுபடியும் பேச தொட ங்கலாம்.
பிரச்சனையை விடுத்து அதற்கானத் தீர்வைப் பற்றி மட் டுமே யோசிப்பது நல்ல மாற்ற த்தை ஏற்படுத்தும்.  குறைக் கூறுபவர்களுடன் உரையாடும் பொழுதுஅவர்கள்கூறும் குறை களுக்கானத் தீர்வுகளைப் பற்றி பேசி உங்கள் உரையா டலைத் திசை திருப்பிப் பாருங்கள். உங்கள் உரையாடல் ஒரு நல்ல பாதைக்குச் செல்வ தை நீங்கள் உணர்வீர்கள். இது உங்களிருவரின் நட்பு முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கும்.
இதைனைத்தவிர, இவர்களின் தொல் லை எல்லை மீறும்பொழுது உங்கள் மேலிடத்தில் முறையிடுவதைப் பற்றி சிந்திக்கலாம். ஆனால் உங்களின் புகா ர் சம்பந்தப்பட்டவரி்ன்வேலைக்கு ஆபத்தை ஏற்படுத்தாத வண்ணம் இருத்தல் அவசியம். சாத்தியமுள்ள பட்சத்தில் வேறுப்பகுதிக்கோ அல்லது வேறுக் கிளைகளுக்கோ மாறிச் செல்வ து உங்கள் பணி, திருப்திக்கு வித்திட லாம்.
பணியிடத்தில்(அலுவலகத்தில்) மன நிம்மதியோடு பணிப்புரிய இவ்வழிமுறைகள் துணை புரியும் என்பத ற்குச் சாத்தியமிருப்பதால் நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாமே!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...