Friday, December 5, 2014

உங்களது கவனிக்கும் திறனை (ஆற்றலை) மேம்படு த்துவது எப்படி? – பயனுள்ள‍ குறிப்புக்கள்

உங்களது கவனிக்கும் திறனை (ஆற்றலை) மேம்படு த்துவது எப்படி? – பயனுள்ள‍ குறிப்புக்கள் 
இந்த உலகத்திலேயே கவனம் இல்லாதவர்கள் நம் தலைமுறையினரே. ஒன்றுக்குப் பின் ஒன்றாக, புதிய வேலைகள்.. புதிய கடமைகள்.. நம்முடைய பொழுது போக்கு நேரத்தைக் கூட நாம் மால்களிலும், சத்தம் நிறைந்த
இடங்களிலும் கழிக்கின்றோ ம். எந்த வேலையோ, திட்ட மோ இல்லாதநேரத்திலும் நம்முடைய மூளையை ஆக்கிரமிக்க வந்துவிட்டன தொழில் நுட்பக் கருவிகள். ஒவ்வொரு முறையும் நான் ஒருசெயலில் கவனம் செலுத்த முயலும் போதும், அதி ல் தோற்றுப் போகின்றேன். ஒரு பொருளை எடுக்க ஒருஅறைக்குள் சென்றுவிட் டு, நான் ஏன் உள்ளே சென்றே ன் என்பதை மறந்து நின்ற நாட்கள் உண்டு. ஒவ்வொரு முறை நான் பிரார்த்தனை செ ய்யும்போதும், எண்ணங்கள், உள்மன சத்தங்கள் எனக் கஷ் டப்படுகின்றோம். இதிலிருந் து தப்பித்து, நமது கவனிக்கும் திறனை மேம்படுத்துவ து எப்படி.. மேலே படியுங்கள்.
ம் உலகம் முழுவதும் சத்த ம், இரைச்சல் என நிறைந்தி ருக்கின்றது. இப்பொழுதெல் லாம் சுற்றுப்புறம் அமைதி யாகி விட்டால், நம்மால் அ மைதியாக இருக்க முடிவதி ல்லை. ஆனால் உண்மை என்னவென்றால், நம் கவனிக்கும் திறனை அதிகரிக்கஒரே தேவை மௌ னம் மட்டுமே. நம் மனதில் கேட்கும் குரல்களை நீக்க நாம் கற்றுக்கொள்ள வே ண்டும். இந்த இரைச்சலான உல கத்திலிருந்து நாம் வெளியேற வேண்டும்.
உங்களுடன் நீங்களே பேசிக் கொள்ளுங்கள்
உங்களுடைய கேள்விகளுக்கு பதில்களைக் கண்டு பிடிக்க நீங்கள் முதலில் கவனிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் கவனிக்க வேண்டிய முதல் நபர் “நீங்கள்”தான். உ ங்களுக்கு நீங்களே பேசிக்கொ ள்வது பைத்தியக் காரத்தனம் என்று சொல்பவர்களை கண்டு கொள்ளாதீர்கள். அண்மை ய ஆய்வுகளில் தனக்குத் தானே மனதிற்குள் பேசிக்கொள்பவர்கள், தங்களுடைய வாழ்வில் வெற்றிக ரமாக வாழ்வார்கள் என்று கண் டுபிடிக்கப்பட்டுள்ளது. இனி உங்க ளுக்கு நீங்களே பேசி க்கொள்ளத் தொடங்குங்கள். உங்களைப் பற்றி நீங்க ளே உணர்ந்து கொள்ளுங்கள்.
தனிமை
உங்கள் கவனிக்கும்திறன் அதிக ரிக்க, அன்றாடைய வேலைகளி ல் இருந்து உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுங்க ள். அலுவலகத்தில் வேலையின்நடுவே உங்களை நீங் களே தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள்அலைபேசியை சில நிமிடங் கள் அணைத்து வையுங்கள். கணினியில் மூழ்கியிருப்ப தை நிறுத்தி விட்டு, உங்கள் மனதில் இருக்கும் எண்ண ங்களை எழுத சிறிது நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த த் தனிமை உங்களுக்கு இயற்கையான அமைதியை அளிக்கின்றது.

மாற்றம்
ஒரே இடத்தில் இருந்து உங்களுக்கு பைத்தியம் பிடிப்பதுபோல இருக்கின் றதா? தினந்தினம் ஒரேவேலையைச் செய்து தலைவலி பிடிக்கின்றதா? அமைதியான ஒரு இடத்திற்கு சென்று வாருங்கள். உங்கள்மனதை அமைதி ப்படுத்திக்கொள்ளுங்கள். ஒரு சார் நடையாக இருக்கலாம். அ ல்லது கடற்கரைக்குச் செல்ல ஒரு நீண்ட பயணமாகவும் இரு க்கலாம். ஆனால் எங்கு சென் றாலும் அமைதியாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.
குரல்களை முடக்குங்கள்
அமைதியான இடத்தைக் கண்டுபிடித்துவிட்டீர்களா ? சரி! உங்கள் மனதில் கே ட்கும் குரல்களை முடக்க வேண்டியநேரம் இது. இத்தேவையில்லாத குரல்களை முடக்க தியானமே சிறந்த வழி. இக்குரல்கள் சோகம், பயம் மற்றும் வருத்தத்தை பிரதிபலிக்கின்றன. ஒன்றை ப்புரிந்து கொள்ளுங்கள். நீங் கள் ஒருபோதும் கடந்த கால த்தை மாற்ற முடியாது. எதிர் காலமும் உங்கள் கையில் இல்லை. எனவேஇன்றை ய தினத்தில் கவனம் செலுத்து ங்கள். இதைப்புரிந்துகொண்டா லே நீங்கள் அமைதியாக இருப் பீர்கள்.
கவனியுங்கள்
உங்கள் இதயத்தின் குரலை கவனிக்கத் தொடங்குங்க ள். நீங்கள் என்ன சாதிக்க விரும்புகின்றீர்கள்? நீங்க ள் எங்குசெல்லவேண்டும்? நல்ல ஒரு மாற்றத்தை ஏற் படுத்த நீங்கள் என்ன செய் ய முடியும்? இதை நீங்கள் புரிந்து கொண்டவுடன், உங் கள் இலக்குகள் தெளிவாகப் புரிந்து விடும்.
நீங்கள் செய்யவேண்டிய இலக்குகளை தெ ளிவாகப் புரிந்து கொண்டால், உங்கள் கவ னிக்கும் திறன் அதிக ரிக்கும். தொடங்கி விட் டீர்களா??

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...