Monday, December 29, 2014

இந்திய அரசின் ‘அனைவருக்கும் ஓய்வூதியம்’ திட்டம்- ஓர் அலசல்

இந்திய அரசு நடைமுறைப்படுத்தி வரும், ‘அனைவரு க்கும் ஓய்வூதியம்’ திட்டம்- ஓர் அலசல்
 இந்திய அரசு நடைமுறைப்படுத்தி வரும், ‘அனைவரு க்கும் ஓய்வூதியம்’ (NPS – National Pension System)  எனும் திட்டம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அனை த்து குடிமக்களுக்கும் ஓய்வு காலத்தில்
வருமானம் கிடைக்கச் செய் வதுதான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். இது, முதுமையில் பொருளாதார ப் பாதுகாப்பின்றி இருப்ப தை தவிர்ப்பதுடன், மக்களு க்கு சேமிக்கும் பழக்கத்தை யும் ஏற்படுத்தும் என்பதுதான் அரசாங்கத்தின் எதிர் பார்ப்பு!

அஞ்சல் துறை, பொதுத்துறை வங்கி கள், தனியார் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட 58 நிறு வனங்களில், இந்த திட்டத்துக்கான கணக்கு ஆரம்பிக்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.இதற்காக ‘பிரான்’ (PRAN- Permanent Retirement Account Number) எண் தரப் படும். இது வாழ்நாளுக்கான எண்.
18 வயது முதல் 55 வயதுவரை உள்ளவர்கள் இத் தி ட்டத்தில்சேரலாம். மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழிய ர்கள், தனியார் நிறுவன ஊழியர் கள், தனி நபர்கள், ஏழை எளியோர் என்று அனைவரும் பயன்பெறலாம். வெளிநாடு வாழ் இந்தி யர்கள் (N.R.I.)மற்றும் பப்ளிக் பிராவிட ண்ட் ஃபண்ட் (P.P.F) சந்தாதாரர்களும் முதலீடு செய்யலாம். இது அனைத்து வங்கிகளிலும், குறிப்பாக தென் இந்திய வங்கிகள் அனைத்திலும் நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்தில் சேர முதலில் 600 ரூபாய் செலுத்த வேண்டும். பின்னர் மாதாமாதம் குறைந்தபட்சம் 100 ரூபாய் வீதம் செலுத்த வேண்டும். நீங்கள் 100 ரூபாய்செலுத்தினா ல், உங்கள் கணக்கில் ஆண்டு க்கு 100ரூபாயை மத்திய அரசு செலுத்தும் (முதல் 4 வருடங்க ளுக்குமட்டும்). அதிகபட்சமாக 12ஆயிரம் ரூபாய்வரை மாதம் தோறும் செலுத்துபவர்கள் வரை தான் மத்திய அரசின் 1000ரூபாய் கிடைக்கும். அதற்குமேல் செலுத்துவோரு க்கு இந்தச் சலுகை இல்லை. சந்தாதாரருக்கு 60 வயது ஆகும்போது, அவர் கணக்கில் உள்ள தொகையில் 60% எடுத்துக் கொள்ளலாம். மீதி தொகையிலி ருந்து மாதாமாதம் வாழ்நாள் முழுவதும் பென்ஷன் கிடைக்கும். அதுவும் 8%  முதல் 12% கூட்டுவட்டியுடன் .
மகளிர் சுய உதவிக் குழுக்கள், இல்லத்தரசிகள், மாணவர்கள், பகுதிநேரவேலை தேடுபவர்கள் என அனைவரும் இத்திட்டத்தி ல் முகவர் களாக சேர்ந்து வருமானமும் ஈட்டலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...