Friday, December 5, 2014

இங்கிலாந்தில் தேர்வு முடிவுகளோடு பள்ளி மாணவர்களுக்கு இணைக்கப்பட்ட கடிதம் இது :

இந்த கடிதத்தோடு உங்களின் தேர்வு முடிவுகள் இணைக்கப்பட்டு உள்ளனஇந்தசிக்கலான தேர்வு வாரத்தில் நீ காட்டிய அளவில்லாத அர்ப்பணிப்பு மற்றும்முயற்சியைக்கண்ட நாங்கள் பெரிதும் பெருமைப்படுகிறோம்.

ஆனால்,இந்த தேர்வுகள் உன்னை தனித்தவராகவும்,சிறந்தவராகவும் ஆக்கும்பண்புகளை முழுமையாக எடை போடாது என்பதை நாங்கள் அறிந்தேஇருக்கிறோம்இந்த வினாத்தாள்களை தயாரிப்பவர்கள்,இவற்றை திருத்துபவர்கள்ஆகிய ஒவ்வொருவருக்கும உங்கள் ஒவ்வொருவரைப்பற்றியும் தனித்தனியாகதெரியாதுஉங்களை உங்கள் ஆசிரியரோ,பெற்றோரோ,நான் அறிய முயல்கிறமாதிரியோ அவர்கள் அறிந்திருக்கவில்லைநீ அற்புதமாக ஒரு இசைக்கருவியைமீட்டுவாய் என்றோ,பிரமிக்க வைக்கிற வகையில் ஓவியம் வரைவாய் என்றோஅல்லது அழகாக நடனம் ஆடுவாய் என்றோ அவர்களுக்கு தெரியாது.

உன் நண்பர்களுக்கு நீ எவ்வளவு முக்கியமானவர் என்றோ,உன்னுடைய ஒருபுன்னகை அவர்களின் ஒரு நாளை எவ்வளவு சிறப்பானதாக ஆக்கிவிடும் என்றோஅவர்கள் அறிந்திருக்கவில்லைநீ கவிதையோ,பாடலோ எழுதுவாய் என்றோஅல்லது விளையாட்டுகளில் பங்கு பெறுகிறாய் என்றோ அல்லது சிலசமயங்களில்பள்ளி முடிந்த பின்னர் உன்னுடைய குட்டித்தம்பி அல்லது தங்கையைகவனித்துக்கொள்கிறாய் என்றோ அவர்களுக்கு தெரியாதுநீ கச்சிதமான ஒருஇடத்துக்கு பயணம் போய் வந்திருக்கிறாய் என்றோ,ஒரு சிறந்த கதையை அசந்துபோகிற வகையில் உனக்கு சொல்லத்தெரியும் என்றோமுக்கியத்துவம் வாய்ந்தநண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களோடு நேரம் செலவிட்டாய் என்றோஅவர்களுக்கு தெரியாதுநீ நம்பிக்கைக்குரியவன்,கருணையானவன அல்லதுயோசிக்கக்கூடியவன் என்பதோ,நீ ஒவ்வொரு நாளும் உன்னுடைய பெஸ்ட்டை தரமுயல்கிறாய் என்பதோ அவர்களுக்கு தெரியாதுஇந்த முடிவுகள் எதோசிலவற்றை சொல்கின்றன,ஆனால,அவை உன்னைப்பற்றி எல்லாவற்றையும்சொல்லவில்லை.

இந்த முடிவுகளை கொண்டாடுங்கள்,வற்றை பற்றி பெருமிதப்படுங்கள்அதேசமயம் நீ சாமர்த்தியசாலியாக இருப்பதற்கு எண்ணற்ற வழிகள் இருக்கின்றனஎன்பதையும் நினைவில் கொள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...