Thursday, December 25, 2014

மாரடைப்பு ஏற்படாமல் நம்மை காக்கும் கவசமே கல்லீரல் என்கிற உள்ளுருப்பு

கல்லீரல்தான் மனித உடலில் மிகப்பெரிய சுரப்பியாகும். சுமார் 1 கிலோ எடை கொண்டது. இது மிகவும் மென்மையான உறுப்பா கும். செம்பழுப்பு நிறத்து டன் காணப்படும். கல்லீ ரல் வயிற்றின் மேல் பகு தியில் வலது பக்கத்தில் அமைந்துள்ளது. நாம் உண்ணும் கொழுப்பு சத் துள்ள உணவுபொருட்க ள் செரிப்பதற்கு பித்தநீர் மிகவும் அவசியமாகும். இந்த பித்த நீரை
உற்பத்தி செய்வது கல்லீரல்தான்.
பொதுவாக கொழுப்புச் சத்துள்ள உணவுகளை செரிக்காமல்ஆங்காங்கே படிந்து ரத்தத்தி ன் மூலம் எல்லா உறுப்புகளு க்கும் சென்றடைந்து விடும். இதில் முக்கியமாக கொழுப்பு இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாய்களில் படிந்து அடைப் பை ஏற்படுத்தி விடுகிறது. இத னால் இதயத்திற்கு தேவையா ன ரத்தம் செல்வதில்லை.
இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த கொழுப்பை கல்லீ ரலில் சுரக்கும் பித்த நீரான து கரைத்து விடுகிறது. இத னால் மாரடைப்பு ஏற்படாம ல் இருக்க கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. கல்லீர லில் கொழுப்பு தேங்குவதா ல், இன்சுலின் எதிர்ப்பை ஏற் படுத்துவதாகவும், அதிகளவு கொழுப்பு காணப்படுவதால் சர்க்கரைநோய் மற்றும் இதயநோய்களை உருவாக்குகிறது.
ஈரலில் மிக அதிக அளவுக் கு கொழுப்பு சேர்வதால், ஆ ல்கஹால் அல்லாத கொழு ப்பு தொடர்பான நோய்கள் ஏற்படுகிறது. உடல் பருமன் என்பது பரவலாகிவிட்ட இ ந்தக் காலக் கட்டத்தில், குழ ந்தைகள் முதல் பெரியவர் கள் வரை கல்லீரல் கொழு ப்பு என்பதும் அதிகரித்து வருவதாகவும், அவை தொடர்பான நோய்களும் உயர்ந்து வருவதாகவும் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது  என் கிறார் பிரபல கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேசன். அவர் கூறியதாவது:-
பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் சிப்ஸ், பீஸா மற்றும் குளிர்பா னங்கள் போன்றவற்றில் உணவுப் பொருள் கெ டாமல் இருக்க சில ரசா யனங்கள் சேர்க்கப்படு கின்றன. அவை 100 சத வீதம் கல்லீரலை குறி வைத்து தாக்குகிறது. இந்த நொறுக்குத் தீனிகளை அதிகம் விரும்பி சாப்பிடுவது குழந்தைகள்தான். இவை ருசியாக இருப்பதால் குழந்தைகள் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு விடுகிறார்கள்.
நொறுக்குத் தீனிகளால் 10 வகையா ன கல்லீரல் நோய்கள் ஏற்படுகின்ற ன. 1. ஹெப்பாடிட்டீஸ் ஏ 2. ஹெப்பா டிட்டீஸ் பி 3. ஹெப்பாடிட்டீஸ் சி 4. ஹெப்பாடிட்டீஸ் டி 5. ஹெப்பாடி ட்டீஸ் இ 6. சைரோசிஸ் 7. கலோலி திசிஸ் 8. கலேசிஸ்டி டிஸ் 9. கார்சி னோமோ 10. ஹெபடோமெகலி. நொறுக்குத் தீனிகளில் உள்ள நச்சுப் பொருட்களை முதலில் கல்லீரல் சுத்திகரிக்கிறது. எஞ்சிய வற்றை சிறு நீரகம் சுத்திகரிக்கிறது.
நொறுக்குத் தீனிகளை ஒரு குழந்தை அடிக்கடி சாப்பிட்டா ல் கல்லீரல், சிறுநீரகம் ஆகிய வை கடுமையாகப் பாதிக்கப்படு ம். நொறுக்குத்தீனியை  அளவு க்கு அதிகமாக சாப்பிட்டால், அவை உடனுக்குடன் ஜீரனமா காமல் குடலில் தேங்குகிறது. இவைதான் விஷமாக மாறுகி றது. கல்லீரல் பாதிக்கப்பட்டால் அஜீரணக் கோளாறு, பசியி ன்மை, குமட்டல், வாந்தி, அடிக்கடி காய்ச்சல் போன்றவை ஏற்படும்.
ஜீரண மண்டல பாதிப்பு ………
கல்லீரலில் கொழுப்பு அதிகரித்தால் முதலில் பாதிப்படைவ து ஜீரணம் தான். வயிற்றில்ஜீரணம் சரிவர நடைபெற, கல்லீரல், பித்தநீரை தயாரிக்கிறது. பித்த நீர் தவிர, கல்லீரல் ரத்த புரதம் மற்றும் நூற்றுக் கணக்கான என்ஜைம்களை தயாரிக்கிறது. இவற்றால் ஜீரணமும், இதரஉடலின் வேலைப்பாடுகள் சரிவர நடக்கும். உணவிலிரு ந்துகிடைக்கும் சர்க்கரையை லிவர் `கிளைக்கோஜென்’ ஆ க மாற்றி அதை சேமித்து வைக்கிறது. தேவைப்படும் போது தருகிறது.
உடலிலிருந்து நச்சுப்பொருட் களை நீக்குவதையும் கல்லீ ரல் செய்கிறது. குளூகோஸ், விட்டமின்கள் ஏ, பி12, டி, இரு ம்பு, காப்பர் முதலியவற்றை கல்லீரல் சேமித்து வைக்கிறது. கார்போ ஹைடிரேட்களையும், புரதத்தையும் கொழுப்பாக மா ற்றி கல்லீரல், பிற்கால தேவை க்காக சேமித்து வைக்கிறது. கல் லீரலில் அதிக கொழுப்பு சேர்ந் தால் கல்லீரல் வீங்கிவிடும். நீரி ழிவு மற்றும் அதீத பருமன் உள் ளவர்களுக்கு இது ஏற்படும்.  
80% குழந்தைகள் பாதிப்பு…….
குழந்தைகள் அடிக்கடி நொறுக்குத் தீனிகளை விரும்பி சாப்பிடுகின்றன. நொறுக்கு தீனிகளில்உள்ள கொழுப் பு குழந்தைகளின் கல்லீர லின் மேல் பகுதியில் படி ந்து பருமனாக மாறி விடு கிறது. தற்போது நம் நாட் டில் உள்ள 80 சதவீதம் கு ழந்தைகள் இதுபோன்ற கொழுப்பு மிகுந்த ஈரலை உடையவர்களாக உள்ளனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகளிடம் இது போன்ற கோ ளாறுகள் வெறும் 20 சத வீதம் மட்டும்தான் இருந் தது.
இதற்கு காரணம் ரசாய ணம் கலக்காத உணவுக ள்தான். ஆனால் தற்போ து ரசாயணம் கலக்காத உணவைப் பார்ப்பதே அரிதாக உள்ளது. சில உணவுகளில் ருசிக்காக சில ரசாய ணங்கள் சேர்க்கப்படுகின்றன. இவற்றை நம்மூர் கடைகளி ல் சாஷே பாக்கெட்டுகளில் வைத்து விற்கிறார்கள். அதை தவிர்க்க வேண்டும்.
தடுக்க வழிகள்…….
உடல்பருமனைக்குறைக்கு ம்போது, கல்லீரலில் உள் ள கொழுப்பானது தானாக வே கரைந்துவிடும். கலோ ரி கட்டுப்பாடு காரணமாக கல்லீரலில் உள்ள கொழுப் புகுறையும். எனவே உடல் பருமனைத் தவிர்ப்போம். கொழு ப்புச் சத்தினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விடுபடுவோம். பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் நொறுக்குத் தீனி களை குழந்தைகளு க்கு கொ டுக்கக் கூடாது.
வீட்டில் தயாரித்த உண வுகளை கொடுப்பது நல் லது. உணவில் காய்கறிகள் அதிகம் சேர்க்க வேண்டும். தின மும் ஏதாவது சில பழங்களை உண்ணலாம். குழம்பு போன் றவற்றை சமைத்த அன்று மட் டும்தான் சாப்பிட வேண்டும், அதை பிரிட்ஜில் வைத்து மறுநா ள் சாப்பிடக்கூடாது. ரசாய ண குளிர்பானங்களை அருந்த கூ டாது. கல்லீரல் நோயாளி கள் அசைவ உணவுகளை சாப்பிடக் கூடாது.
சோடா உப்பு கலந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகாத உண வுகள் வேர்கடலை மற்றும் கிழங்கு வகைகளை தவிர்க்க வேண்டும். உணவில் அதிக அளவில் கீரைகள் சேர்த்துக் கொள்ளவேண்டும். இளநீர், கரும்புச்சாறு, தேங்காய் பால் அருந்தலாம். கல்லீரல் அழற்சி உள்ளவர்களுக்கு சைவ உணவே சிறந்தது. கல் லீரல் பாதிக்கப்பட்டவர்கள் திராட்சை ஜுஸ், கேரட் ஜு ஸ், போன்றவைகளை தினசரி சாப்பிடுவத ன் மூலம் சிறுநீர் சுலபமாக பிரியும்.
மலமிளகும். எலுமிச்சை சாறு சேர்த்த நீரை அதிகமாக எடு த்துக் கொண்டால் கல்லீர லின் செல்கள் பலமடையு ம். மஞ் சள் காமாலைக்கு நல்லது.சத்துள்ள ஆகாரத் தால் கல்லீரலை புதுப்பிக் க முடியும்.பூண்டை தின சரி சமையலில் சேர்ப் பது நல்லது. சீரகப்பொடி கலந் த மோர் ஜீரணத்தை மேம் படுத்தும்.  
கல்லீரல் கோளாறுகளை தவிர்க்க, சமையல் எண்ணெய் யை 20 லிருந்து 30 கிராம் வரை தினச ரி உபயோகிக்கவும். அதிக எண்ணெய் ஆபத்து என்கிறார் சென்னை பெரம்பூர் சென் மருத்துவமனை இயக்குனர் டாக் டர் வெங்கடேசன்.
***
மேலும் சில பாதுகாப்பு குறிப்புக்கள்
கல்லீரல் பிரச்னைகளை, குழந்தைகளுக்கு, பெரியவர்களு க்கு என இரண்டு வகைகளா கப் பிரிக்கலாம். குழந்தைக ளுக்கானப் பிரச்னைகள் பிற வியிலேயே வரக்கூடியவை. பெரியவர்களுக்கு ஆல்க ஹால் மற்றும் ஆல்கஹால் அல் லாத காரணங்களால் கல் லீரல் நோய்கள் ஏற்படுகின்றன” என்று எச்சரிக்கும் டாக்டர் நரேஷ் சண்முகம், கல்லீரல் பாதுகாப்புபற்றி அளிக்கும் குறி ப்புக்கள் இங்கே…
1. கொழுப்பை குறைப்போம்
உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருங்கள். அதிகப்படி யான கொழுப்புதான் கல்லீரல் பிரச்னைக்கு மிக முக்கியக் காரணம். கொழுப்பு கல்லீரல் திசுக்களில் சேகரித்து வைக்க ப்படும்போது, கல்லீரல் திசுக் கள் பாதிக்கப்படும். நாள் ஆக ஆக பாதிக்கப்பட்ட கல்லீரல் செல்களும் அழிந்துவிடும். பின்னர், அந்தக் கொழுப்பு ரத்தத் தில் பயணித்து உடலின் வேறு பகுதிகளுக்கும் சென்றுவிடு ம். இப்படி லட்சக் கணக்கில் கல்லீரல் செல்கள் அழியும்போ து கல்லீரல் சுருக்கம் (Liver Cirrhosis )ஏற்படும். இதைத் தவி ர்க்க உணவில் கொழுப்பு அளவைக் குறைக்க வேண் டும். நாம் சாப்பிடும் உணவி ல் உள்ள தேவைக்கு அதிகமான கலோரியைக் கொழுப்பாக மாற்றும் பணியைக் கல்லீரல் செய்கிறது. சராசரியாக பா சல் மெட்டபாலிக் ரேட் (basal meta bolic rate) என்பது ஆண்களுக்கு ஒரு நாளைக்கு 1,600 – 1,800 கலோரியாகவும் பெண்களுக்கு 1,300 முதல் 1,500 க லோரியாகவும் இருக்கவேண்டு ம். உங்கள் உடலுக்கு ஏற்ற பாச ல் மெட்டபாலிக் ரேட் எவ்வளவு என்பதைக் கண்டறிந்து, அதற் கு ஏற்ற வகையில் உங்கள் உ ணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள். பாடி மாஸ் இன்டெக்ஸ் குறியீடு 17 முதல் 24.99 என்ற அளவில் இருக்கும் படி பார்த்துக்கொள்வது அவசி யம்.
2. இயற்கை உணவு
ஆட்டிறைச்சியையும் மாட்டிறைச்சியையும் தவிர்க்க வேண் டும். மாற்றாக, மீன் சாப்பிட லாம். அதுவும் எண்ணெயில் பொரிக்காமல், குழம்பு மீன்க ளாகச் சாப்பிடலாம். காய் கறிகள், பழங்கள், பருப்பு வ கைகளை சாப்பாட்டில் அதிக ம் சேர்த் துக்கொள்ளலாம். உடல் பருமன் ஏற்படாமல் இருக்க, ஐஸ் கிரீம், நொறுக் குத் தீனிகள், சாஃப்ட் டிரிங்க்ஸ் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள். இது மாரடைப்பு, சர்க்கரை நோய், ரத்தக் கொதி ப்பு போன்றவற்றையும் தவிர்க்க உதவும்.
3. உடற்பயிற்சி
கொழுப்பைக் கரைக்கவும் உடல் எடை யைக் குறைக்கவும் உடற்பயிற்சி நல்ல வழி. நடைப்பயிற்சி, நீச்சல், சைக்கிளி ங் , யோகா… உங்களுக்குத் தோதான உடற்பயிற்சி எதுவோ, அதைச்செய்யுங் கள். உடலைக் கட்டுக்கோப்பாக வைத் துக் கொள்ளுங்கள்.
4. மதுவுக்கு நோ நோ
மது அருந்தும்போது அது கல்லீரலைத்தான் சென்று அடை கிறது. அங்கு அது செல்களுக் கு ஆற்றலை அளிக்கக்கூடிய மைய அமைப்பான மைட்டோ கான்டீரியாவைத் தாக்குகிற து. இதனால், செல்களுக்குப் போதுமான ஆற்றல் கிடைக் காமல் பாதிக்கப்படுகின்றன. செல்கள் பாதிக்கப்படும்போது, அந்த இடத்தைக் கொழுப்பு ஆக்கிரமித்துக் கொள்ளும். இதனாலும், கல்லீரல் பெரிதா கும். பின்னர் அந்த செல் முற்றிலும் இறக்கும்போது, சுருங் குதல் என்பது நடக்கும். பாதிப்பைத் தானாகவே சரிசெய்து கொள்ளும் தன்மை உள்ளதால், கல் லீரல் புதிய செல்களை உற்பத்தி செய்யும். ஆ னால், அந்த நேரத்தில் கல்லீரல் புற் று நோய்க்கான வாய்ப்பு அதிகரிக்கி றது. இப்பிரச்னைகளைத் தவிர்க்க மது அருந்துவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.
5. பாதுகாப்பான குடிநீர்
எலிக் காய்ச்சல், டைஃபாய்டு போன் ற வைரஸ் மூலம் பரவு ம் நோய்கள் கல்லீரலில்தான் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. கல்லீரலில்ஹெபடைடிஸ் ஏ, பி, சி என பல வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உண்டு. இந்தக் கிருமி கள் அசுத்த மான தண்ணீர், ஆரோக் கியமற்ற சூழ்நிலையில்தான் பரவு கின்றன. எனவே, சுத்தமான தண்ணீ ரும் உணவும் கல்லீரல் பாதுகாப்புக் கு முக்கியமான அம்சங்கள். இதில் கவனம் செலுத்துங்கள். ஹெபடைடி ஸ் ஏ, பி-யைத் தவிர்க்க தடுப்பு ஊசியும் போடலாம்.
6. பரிசோதனை
பிறந்த குழந்தைகளுக்குச் சிறுநீர் மற்றும் ரத்தப் பரிசோத னைகள் மேற்கொள்வதன் மூலம், 101 வகை வளர்சிதை மாற்றப் பிரச்னைகளைக் கண் டறியலாம். ஆரம்ப நிலையி லேயே நோயைக் கண்டறிந் தால், அதைக் குணப்படுத்து வதற் கான வாய்ப்புகள் அதிகம்.
7. மருந்து
அதீதமான மருந்துப்பயன்பாடும் கல்லீரலை ப் பாதிக்கும். எனவே, மருத்துவர்களின் பரிந் துரை இன்றி மருந்துகள் எடுத்துக் கொள் வதைத் தவிருங்கள்.
8. ஹெல்த் செக்கப்
பொதுவாக 35 முதல் 50 வயதுக்குள் இருப்பவர்கள்தான் கல் லீரல் பாதிப்பை அதிகம் எதிர்கொள்கிறார்கள். எனவே, இந் த வயதினர் கூடுதல் எச்சரிக்கையு டன் இருப்பது நல்லது. வருடத்துக்கு ஒரு முறை கட்டாயம் ‘மாஸ்டர் ஹெல்த் செக்கப்’ செய்து கொள்வது நல்லது. வாய்ப்பு இல்லாவிட்டால், கல்லீரல் செயல்பாடு பரிசோதனை யாவது செய்து கொள்ள வேண்டும்.
எல்லாவிதத்திலும் நம் உடலுக்குக் கா வல்காரனாக இருக்கும் கல்லீரலை நா ம் எந்த அளவுக்குப் பாதுகாப்பாகப் பரா மரிக்கிறோம் என்பதைஎல்லோரும் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டி யநேரம் இது. காவல்காரனையும் காக் க வேண்டியது நம் கடமை அல்லவா!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...