Tuesday, December 16, 2014

ஐநா சபையில் இரண்டு முறை உரையாற்றிச் சாதனைப் படைத்த‌ பார்வையற்ற‍ பாவை (பெண்) – வீடியோ

ஐ.நா. சபையில் இரண்டு முறை உரையாற்றிச் சாதனைப் படைத்த‌ பார்வையற்ற‍ பாவை (பெண்)
ஐ.நா. சபையில் இரண்டு முறை உரையாற்றிச் சாதனைப் படைத்த‌ பார்வையற்ற‍ பாவை (பெண்)
ஐ.நா. சபையில் இரண்டு முறை க‌லந்துகொண்டு பேசிய‌, பார்வையற்ற‍ பாவையின் மாபெரும் சாதனை! ஆம் உலகைப் பார்க்காமல் உலகையே
தன்னைத் திரும்பிப் பார்க்க வைத்துச் சாதித்தப் பெண்ணை உள மார பாராட்டுவோம் !!!
அமெரிக்காவில் உள்ள ஐநா சபையில் ஒருவர் ஒரு முறை பேசினாலே வாழ்க்கையில் பாக்கியம் பெற்ற வர் ஆவார் ஆனால் பார்வையற்ற சென்னை மாணவி சுவர்ணலட்சுமி ஒருமுறைக்கு இருமுறை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஐநாவில் பேசியுள் ளார் அவர் யார் என்பதை அறிய ஆர்வமாக இருக்கிற தா…
சென்னை கனரா பாங்கின் நிறுவனர் நாள் விழாவி னை முன்னிட்டு சாதனை புரிந்த மாணவ, மாணவிய ருக்கான பாராட்டு விழா ப்ரீடம் ட்ரஸ்ட் டாக்டர் சுந்தர் தலைமையில் நடைபெற்றது.
மேடைக்கு அழைக்கப்பட்டவர்களில் சுவர்ணலட்சுமி பலரது கருத்தையும் கவர்ந்தார்.
சென்னை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த ரவி துரைக்கண்ணு- லட்சுமி தேவி தம்பதியின் ஒரே மகள் சுவர்ணலட்சுமி.

சுவர்ணலட்சுமிக்கு பிறவியிலேகண்பார்வை இல்லை. இவருக்கு பார்வைவேண்டி பலவித முயற்சிகள் எடுத் த பெற்றோர் அந்த முயற்சிகள் தந்த தோல்வியினால் துவண்டு போகவில்லை, காரணம் தாங்கள் துவண்டு போனால் அது தங்களது மகளை பாதிக்கும் என்பதால் மகளின் விருப்பம், அவரது முன்னேற்றத்திற்காக தங்க ளது வாழ்க்கை ஒதுக்கவும், சுவர்ணலட்சுமியின் வளர் ச்சியை செதுக்கவும் செய்தனர்.
சுவர்ணலட்சுமி சென்னையில் உள்ள பார்வையற்றோ ருக்கான லிட்டில் பிளவர் கான்வெண்ட் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்து பிரமாதமாக படித்து வருகிறார் தற்போது அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார்

பாட்டு பாடுவது, கீபோர்டு வாசிப்பது, நீந்துவது, செஸ் விளையாடுவது என்று எதையும் விட்டு விடாமல் எதி லும் சோடை போகாமல் வளர்ந்து வந்த சுவர்ணலட்சு மிக்கு பள்ளியில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பார் லிமெண்ட் அமைப்பின் தகவல் தொடர்புதுறை அமைச் சர் பதவி கிடைத்தது.
இந்த இடத்தில் குழந்தைகள் பாராளுமன்றம் பற்றி ஒரு சில வார்த்தை
இந்தியாவின் பல மாநிலங்களில் குழந்தைகளை மட் டுமேவைத்து அமைக்கப்பட்டதுதான் இந்த குழந்தைக ள் பாராளுமன்றம். தமிழகத்தில் எட்வின் என்பவரால் 1993ல் நாகர்கோவிலில் தொடங்கப்பட்டு, சிறப்பாக இ யங்கி வருகிறது. தமிழகத்தில் மட்டும் 15,000 குழந்தை கள் பாராளுமன்றங்கள் உள்ளன. சமூக ஆர்வலர்களி ன் மூலம் நடத்தப்படும் இந்தப் பாராளுமன்றங்களில் பிரதமர் மற்றும் பிற அமைச்சர் கள் வரை அனைவரும் பள்ளி மாணவர்களே, இதன் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சூரியசந்திரன்.

குழந்தை திருமணம், பள்ளியில் இருந்து வெளியேற் றப்பட்ட பிள்ளைகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது, தங்களது பிரச்னைகளைத் தாங்களே பேசித்தீர்வு கா ண்பது என இந்தப் பாராளுமன்றங்களின் பணிகள் மக த்தானவை. இதன் மூலம் மாணவர்கள், தங்களது பள் ளிப்பருவத்திலேயே தன்னம்பிக்கையையும்ஆளுமை ப் பண்பையும் வளர்த்துக் கொள்ள முடிகிறது.

இந்த பாராளுமன்றத்தில் வெட்டி பேச்சு கிடையாது, வேட்டி கிழியும் அபாயமும் கிடையாது, வெளிநடப்பும் கிடையாது எல்லா பேச்சும் அளவானவை, ஆரோக்கி யமானவை, குழந்தைகள் உரிமையை நிலைநாட்டுப வை, அவர்களது வளர்ச்சிக்கு வழிகாணுபவை.

ஒவ்வொரு பாராளுமன்றத்திலும் தேர்தல் மூலமாக அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு அந்தந்தப் பகுதிகளில் தேர்வு செய்யப்படும் அமைச்சர் கள் அடங்கிய பாராளுமன்றங்களின் கூட்டம் ஒவ் வொரு மாதமும் நடக்கும். அதில் சிறப்பாகப் பேசியவ ர்கள், செயல்பட்டவர்கள் மாநில அளவிலான பாராளு மன்றத்திற்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.

தகவல் தொடர்பு அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட சுவர்ணலட்சுமிக்கு இயல்பாகவே சமூக சேவை எண் ணம்உண்டு. இதன் காரணமாக கடலூரில்தானே புயல் தாக்குதல் சம்பவத்தை கேள்விப்பட்டு 30 ஆயிரம் ரூபா யை சேகரித்து நேரடியாக சம்பவ இடத்திற்கு போய் பாதி க்கப்பட்ட மக்களிடம் அந்த நிதியை வழங்கினார்.
அதன்பிறகு அனைவருக்கும் தொண்டு செய்யும் எண் ணம் வரவேண்டும் என்பதற்காக ஒருவருக்கு ஒரு ரூபாய் என்ற திட்டத்தை கொண்டு வந்து அந்த ஒரு ரூபாயும் பள்ளி குழந்தைகள்தான் தரவேண்டும் என்று சொல்லி ஏழாயிரம் ரூபாயை ஏழாயிரம் பேரிடம் இ ருந்து வசூல் செய்தார். இந்த பணத்தை கொண்டு இர ண்டு குழந்தைகளின் படிப்பு கட்டணத்தை கட்டியது டன் சிலருக்கு சீருடையும் வாங்கிக் கொடுத்தார்.
இந்த நிலையில் அடுத்து நடந்த பாராளுமன்ற கூட்டத் தில் சுவர்ணலட்சுமி நிதி அமைச்சராக தேர்வானார் இவரது பேச்சு செயல்பாடு காரணமாக அடுத்து நடந்த மாநில அளவிலான கூட்டத்தில் குழந்தைகள் பாராளு மன்ற பிரதமராக தேர்வானார்.
இந்நிலையில் ஐநாவின் சிறப்புஅழைப்பாளராக அழை க்கப்பட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் பற்றி பேச அனுமதிக்கப்பட்டார், இவரது சிறப்பான பேச்சு கா ரணமாக அமெரிக்கா போய் திரும்பி சில மாதங்களி லேயே திரும்பவும் ஐநா அழைக்கப்பட்டு மீண்டும்போ ய் பேசிவிட்டு வந்தார்.
இப்படி ஒரு முறைக்கு இருமுறை ஐநா போய்வந்த சுவர்ணலட்சுமிக்கு இங்குள்ள பல்வேறு அமைப்புகள் பாராட்டு விழா நடத்திவருகின்றன.
ஆரம்பத்தில் என்னிடம் பல விஷயங்களில் பயம், தயக்கம், பார்வை இல்லையே என்கிற வருத்தம் இருந்தது. சில்ரன்’ஸ் பார்லிமென்டில் சேர்ந்த பிறகு, தைரியமும் தன்னம்பிக்கையும் வளர்ந்தன. ‘எந்தச் செ யலையும் பளுவாக நினைக்காமல், புதிய கண்ணோட் டத்துடன் அணுகினால் ஜெயிக்கலாம்’ என்பதைக் கற் றுக் கொண்டேன். ஒவ்வொரு பாராளுமன்றக் கூட்டத் தின் போதும் எந்த மாதிரியான பிரச்னைகள் விவாதத் துக்கு வரும், அதற்கு எப்படிப் பட்ட தீர்வைச் சொன்னா ல் சரியாக இருக்கும்னு ஒரு முன்தயாரிப்போடு இருப் பேன்.
இந்த திட்டமிட்ட உழைப்பு என்னை தற்போது இந்த உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்த பாராட்டுக்க ள் என்னை இன்னும் சமூகத்திற்கு உழைக்க தூண்டுகி றது. எதிர்காலத்தில் மாவட்ட ஆட்சித் தலைவராகி இ ன்னும் நிறைய உழைக்க என்னை நான் தயார் செய்து கொண்டு வருகிறேன். நம்மை வாழவிடாமல் தடுப்பத ற்கு நாட்டில் ஆயிரம் காரணங்கள் இருக்கும் ஆனால் வாழவைக்க ஏதேனும் ஒரு காரணம் இருக்கும் அந்த காரணத்தை பிடித்துக்கொண்டு நாமும் வளர வேண்டு ம், நம்மைச் சார்ந்தவர்களையும் வளர்க்க வேண்டும். பயமும், தயக்கமும்தான் நமது லட்சியப் பயணத்திற் கான தடைக்கற்கள் முதலில் அந்த தடைக்கற்களை தகர்த்து எறியுங்கள் என்று முழங்கும் சுவர்ணலட்சுமி யை வாழ்த்த விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வே ண்டிய எண்:9025241999. (சுவர்ணலட்சுமி பள்ளிக்கு போயிருந்தால் அவரதுதாயார் லட்சுமிதேவிபேசுவார்)

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...