Tuesday, December 16, 2014

பான் கார்டு வைத்திப்பவர்கள், வருமானவரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டுமா?

பான் கார்டு வைத்திப்பவர்கள் அவசியம் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டுமா?
பான் அட்டை வைத்திருந்தால் வரி தாக்கல் செய்ய வே ண்டுமா? ஆடிட்டர் மூலமாகத்தான் வரி கணக்கை
தாக்கல் செய்ய முடியுமா? வரி கணக்கை தாக்கல் செய் வது எவ்வாறு?அதை எங்கே தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு தாக்கல் செய்யத் தவறினால் எவ்வளவு அபரா தம் செலுத்த வேண்டும் என் பன போன்ற பல கேள்விகள் அனைவருக்கும் எழும். இதற்குத் தீர்வளிப்பதுதான் இக்கட்டுரையின் நோக்க மாகும்.
1.வரி விதிக்கப்படும் அளவுக்கு வருமானம் இல்லாதவ ர்களும் கணக்கு தாக்கல் செய்ய வேண் டுமா?
பான்கார்டு வைத்திருக்கும் தனி நபர் வருமானக்காரர்கள் வரு மான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்பது அவசியமில்லை. இருப்பினும் வரி கணக்கு தாக்கல் செய்வது நல்லது. ஒருவேளை கணக்கு தாக்கல் செய்வோர் முதலீடு செய்வது, கட்டிடம்வாங்குவது, தங்கத்தில் முதலீடு செய்வது போன்றவற்றில் கடந்தகாலங்களில் ஈடுபட்டிருந்தால், அதுகுறித்து எதிர்காலத்தில் மதிப்பீடுசெய்வதற்கு வருமா ன வரி அதிகாரிகளுக்கு வசதி யாக இருக்கும். முதலீட்டாள ரும் வருமானம்வந்த வழி யை ஆதாரமாகக் காட்ட முடி யும்.
2.ஆடிட்டர் மூலமாகத்தான் கணக்கு தாக்கல் செய்ய வேண்டுமா?

அப்படியொன்றும் அவசியமில் லை. கணக்கு தாக்கல் செய்வ தற்கு உதவி புரிபவராகத்தான் ஆடிட்டர்கள் உள்ளனர். வரி தொடர்பான விவரங்கள் தெளி வாகத்தெரிந்து அதன் நடைமு றைகள் புரிந்திருந்தால் அவரவரேகூட வரி கணக்குதாக்கல் செய்யலாம். ஆண்டு வரு மானம் ரூ.1 கோடிக்குமேல் இருந் தால் அவரது கணக்குகள் ஆடிட்ட ரால் தணிக்கைச் செய்யப்பட்டிரு க்க வேண்டும்.
இத்தகைய கணக்கு விவரம் வருமான வரித்துறை குறிப்பிடும் காலத்திற்கு முன்பாக தாக்கல் செய்யப்பட வேண்டும். அவ்விதம் செய்யத் தவறினா ல் வருமானவரி அலுவலகம் மொ த்த வருவாயில் அரை சதவீதத் தை அபராதமாக விதிக்கும். அல் லது ரூ.1.50 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இதில் எது குறை வான தொகையோ அத்தொகை அபராதமாக விதிக்கப்படும்.
3.சென்னை வருமான வரி அலுவலகத்தில் எத்தனை சிறப்பு கவுன்டர்கள் திறக்கப்படுகின் றன? பிற இடங்களில் எத்தனை திறக்கப்படும்?
குறிப்பிட்ட பகுதியில் எத்தனை பேர் கணக்கு தாக்கல் செய்வார்கள் என் ற அடிப்படையில் கவுன்டர்கள் திற க்கப்படும். இது தேவைக்கு ஏற்றாற் போல வருமான வரித்துறை அதி காரிகளால் தீர்மானிக்கப்படும்.
4.சிறிய நகரங்களில் உள்ளவர்கள் எவ்விதம் வரிக்கணக்கைத்தாக்கல்செய்வது? மாவட்டத் தலைநகரங்களில் தான் செலுத்த வேண்டுமா? அல்லது வேறிடங்கள் உள்ள னவா?
வரி செலுத்துவோருக்கு தாம் எந்தவார்டில் வருகிறோம் என்பது தெரியும். அதை www.incometax india.gov.inஇணையதளம்மூலம் தெரிந்துகொள்ளலாம். ஆடிட்டரா ல் தணிக்கை செய்யப்படாத வரு மான வரிக்கணக்குகளை அதற்குரிய விண்ணப்பத்தை ப் பூர்த்தி செய்து தாக்கல் செய் யலாம். மின்னணு(ஆன் லைன் ) மூலமாக தாக்கல் செய்வதற் கான வழியும் உள்ளது.
மின்னணு முறையில் நிர்வகிக் கப்படும் வரிக் கணக்கு களைக் கொண்டவர்கள் மின்னணுமுறையில்தான் கணக்கை த் தாக்கல் செய்யவேண்டும். மின்னணு முறையில் வரி கணக்கு தாக்கல் செய்வதே சிறந்தது. செலுத்திய வரிபோ க உங்களுக்கு திரும்ப வர வேண்டிய தொகை எவ்வித இடையூறும் இன்றி உங்கள் வங்கிக் கணக்குக்கு வந்து சேரும்.
5. இப்போது வரியைச் செலுத்திவிட்டு பிறகு வரிக்கண க்கைத் தாக்கல் செய்யலா மா?
2014-15ம் ஆண்டுக்கான கணக்கை வருமானவரித் துறை குறிப்பிடும்  தேதிக் குப் பிறகு தாக்கல் செய்தால் அதற்கு எவ்வளவு அபரா தம் செலுத்த வேண்டும். பொதுவாக மாதச் சம்பளம் பெறுவோர், வருமா ன வரிக் கணக்கை வருமானவரித் துறை குறிப்பிடும் தேதிக்குள் தாக்க ல் செய்யவில்லை யென்றால் அடுத் தநாளே வருமான வரித்துறை அதி காரிகள் தங்கள் வீட்டுக் கதவை தட்டுவர் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
காலதாமதமாக ஓராண்டு வரை கணக்கை தாக்கல்செய்யலாம். ஆனால் அதற்கு 234 ஏ பிரிவின்படி அபராதம் செலுத் தவேண்டும். குறைந்தபட்சம் ரூ.5ஆயிரம் தொகையை, உரிய நிதி ஆண்டில் செலுத்தத் தவறிய தற்காக கட்டநேரிடும். வருமான வரிக் கணக்கு செலுத்தத் தவறிய தற்கு ஏற்கத்தக்க விளக்கத்தை அளித்தால் அந்த அபராதமும் செலுத்தத் தேவையில் லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...