Monday, December 8, 2014

தேங்காய் விலை கூடும்போதெல்லாம் தேங்காய் எண்ணையின் விலை கூடுவதில்லை! அது ஏன்?

தேங்காய் விலை கூடும் போதெல் லாம் தேங்காய் எண்ணையின் விலை கூடுவ தில்லை.  அது ஏன்?  எப்போது தான் கூடுகிறது ?
கச்சா எண்ணெய் விலைகூடும்போது தான் விலை கூடுகிறது..
கச்சா எண்ணெய்க்கும் தேங்காய் எண்ணெ ய்க்கும் -என்ன தொடர்பு ?
கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்ப து தேங்காய் எண்ணையே இல்லை என்பதுதான் அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது !!!
சரி. வேறு என்ன தேங்காய் எண்ணெ ய்க்கு பதில் வேறு என்ன இருக்க முடியும் ?
தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மினரல் ஆயில் என்ற பெட் ரோலிய கழிவுடன் தேங்காய் எண்ணெய் எசன்ஸ் கலந்து தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மார்க்கெட்டில் விற்பனைக்கு கிடை க்கிறது.
மினரல் ஆயில் என்றால் என்ன ?
பெட்ரோலியப் பொருகளின் ஆக கழிவு பொரு ளே மினரல் ஆயில் என்னும் அமெரிக்க மண் ணெண்ணெய் என்னும் லிக்யுட் பேரபின் ஆகும் ..
கச்சா எண்ணையிலிருந்து அதீத கடைசி பொ ருளே இந்த மினரல் ஆயில் ஆகும். கச்சா எண் ணெய்யை சுத்திகரித்து, பெட்ரோல், டீசல், கெரசின், நாப்தலீன், மெழுகு என மொத் தம் 24 வகையான பொருட்கள் எடுக்கப்பட்டு எஞ்சியிருப்பது “மினரல் ஆயில்’. இதற்கு நிறமோ, மணமோ இருக்காது.இதன் அடர்த்தி அதி கம். எந்த வகை எண்ணையுடனும் எளிதாக கலப்படம் செய்து விட லாம் ..
பாராசூட் முதல் ஹெர்பல் என்னும் ஹிமாலயா கம்பெனி வரை ..ஜான்சன் பேபி ஆயில் முதல் சோப்பு வரை, எல்லாவிதாமான முக லோஷ ன்களிலும் இந்த மினரல் ஆயில் என்னு ம் அரக்கன் இருக்கிறான் என்பது வேத னையான விஷயம் தான்
தேங்காய் எண்ணெய் என்று நாம் இது வரை நம்பி இருக்கிற – மினரல் ஆயில் கலந்த கம்பெனிகள் தயாரிக்கிற தேங்காய் எண்ணெய் இவைகள் ..

johnson baby oil, amla hair oil,
clinic plus, ervamartin hair oil, etc..
பட்டியல்கள் நீண்டு கொண்டே போகிறது ..பக்கங்கள் பத்தாது …

மினரல் ஆயில் சேர்த்தல் பக்க விளைவுகள் வருமா ?
1.தோல் வறண்டு போகும். முடி தனது ஜீவன் இழந்து வறண்டு போகும் 
2.முடி கொட்டும் ..முடி சீக்கிரம் வெள்ளை யாகும் 
3.அரிப்பு வரும் ..
4.ஆராய்ச்சிகள் குழந்தைகளுக்கு பயன்படுத்த தடை விதிக்கிறது .
தேங்காய் எண்ணெய் வாங்குவதாக இருந் தால் பக்கத்தில் எண்ணெய் ஆட்டும் மில்களி ல் இருந்து வாங்குங்கள். டப்பாக்களில் அடை த்து ,பாக்கெட்டுகளில் அடைத்து விற்கும் தேங்காய் எண் ணெய் யை வாங்காதீர்கள்
குறிப்பு -நல்ல தேங்காய் எண்ணெய் முடியை நன்கு வளர வைக்கும் ..கலப்படமில்லா தேங்காய் எண்ணெய் முடி வளர ,கருக்க உதவும் என்பது மறுக்க முடியாத உண்மை .

1 comment:

  1. அதிர்ச்சி தரக்கூடிய புதிய தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி! தேங்காய் எண்ணையோடு, எண்ணைப் பனை (OIL PALM) யின் பருப்புகளின் எண்ணையையும் சேர்க்கிறார்கள் என்பதை கேரளாவில் உள்ள கோட்டயத்தில் பணிபுரியும்போது அறிந்துகொண்டேன். எண்ணைப் பனையின் பழத்தின் மேலுள்ள சதையிலிருந்து எண்ணையை எடுத்து பாமாயிலாக தயாரித்தவுடன் உள்ளே இருக்கும் பருப்பை ஏலத்தில் விடுவார்கள் அதை வாங்க தமிழக வியாபாரிகள் வந்தபோது அவர்களிடம் விசாரித்தபோதுதான் இந்த செய்தியை அறிந்துகொண்டேன். கலப்படமில்லாத பொருளை சந்தையில் பார்ப்பது அரிது என நினைக்கிறேன்.கடவுள் நம்மை காப்பாற்றட்டும்!

    ReplyDelete

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...