Tuesday, December 23, 2014

சர்க்கரை, (SUGAR)-ம் அதன் நச்சுத் தன்மையும்

ர்க்கரை, ( வெள்ளைச் சீனி / SUGAR)-ஐ பற்றியும் அதன் நச்சுத் தன்மையை பற்றியும் தெரிந்துகொள்வோமா? 
இனிப்பை விரும்பிச் சாப்பிடாத வர்கள் யார்தான் இருக்க முடி யும்? காலையில் எழுந்த வுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன், குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடு பொருளாகவே நமக்குள் செல் கிறது. பதார்த்தத்தில் தான் என்றில்லை. சீனியை அப்படியேஅள்ளியும் சாப்பிடுகிறோம்.
இந்த வெள்ளைச் சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.
குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசாய ணப் பொருட்கள் பயன்படுத்தப்படு கின்றன என்று பாப்போம்.
1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமி க்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட் ரோலாக பயன்படுத்துகிறார்கள்.
2. பிழிந்த சாறு 60 செண்டி கிரேட் முதல் 70 செண்டி கிரெட் பாஸ் போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப் படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன் படுத்தப்படுகிறது.
3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.
4. 102 செண்ட் கிரேட் கொதி கலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமி ன்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.
5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாக பிரித்து எடுக்கப்பட்டு தெளி ந்த சாறு கிடைக்கிறது.
6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த் தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.
7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிக நிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு, சீனியில் கலந்து விடுகிறது.
8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.
தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக் சைடு என்னும் ரசாய‌னம் மஞ்சல் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ் சாக மாறிவிடுகிறது.
உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொ ண்டு தேய்த்தாலும் போகமறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ் சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொரு ளைத்தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொ ண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்?
குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல் சூத்தை, குடல்புண், சளித் தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இது தான் பிரதான காரணியாக அமைகின்றது.
ஆலைகளில் தயாரான வெள் ளைச் சீனி சாப்பிடுவதை நிறுத்தி விட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட லாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...