Wednesday, December 17, 2014

ரேவதி சங்கரன் சொல்வதைக் கேட்க நீங்க தயாரா?


செரிமனத்திற்கு . . .
பர்கர், பீட்ஸா என்று மைதா வும் சீஸையும் குழப்பிய கல வையை நாகரிகம் என்ற பெயரால் நண்பர்கள் நண்பிகளோடு வாரி வளைத்துத் தின்றுவிட்டு இரை தின்ற மலைப்பாம்பாய் செரி க்க முடியாமல்
திணறும் வயிறுகளுக்கு…
தனியா எனப்படும் கொத்துமல்லி விதையைக் கொஞ்சம் எடுத்து [1 டேபிள்ஸ்பூன்] வெந்நீரில் ஊற வை த்து, அதனுடன் ஒரு துண்டு இஞ்சி யைத் தோல் நீக்கி இரண்டையும் மிக்ஸியில் அரைக்கவும். வடிகட்டி அதில் கொஞ்சம் தேன், ஒரு மூடி எலுமிச்சைச்சாறு சேர்த்துக்குடித்தால் செரிமானம் ஆகி விடும்.
கருவளையம் மறைந்து போக . . .
பரீட்சைக்குப் படிச்சுப் படிச்சு கண்ணைச் சுத்தி ஒரே கரு வளைய ம். அதற்கு வைத்தியம், விளக்கெண்ணெய் 10 சொட்டு, நல்லெ ண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் 10 சொட்டு, கொ ஞ்சம் பன்னீர் சேர்த்துக் குழைத்துக் கண்ணைச் சுற்றித் தடவலா ம். பன் னீர் என்றால், ரோசாப்பூ தண்ணீர்.
ஜ‌லதோஷம் தீர‌
தலையிலே நீர் கோத்துக் கொண் டால், தலைபாரம், கண்ணிலே மூ க்கிலே நீராகக் கொட்டிக்கொண் டு, தும்மல், தொண்டைவலி இதெ ல்லாம் தொடர்ந்து வரும். ஜலம் என்றால் தண்ணீர்; அதனாலே ஏற் படுகிற உபாதை, தோஷம்; அதுதா ன் ஜலதோஷம். இவை எல்லாவற் றுக்குமே சுலபமான வைத்தியம் இதுதான்.
ஒரு வெற்றிலையைக் கழுவித் துடைத்து, அதிலே கிராம்பு [லவ ங்கம்] 2, ஏலக்காய் 2, மிளகு 6, 7, கொஞ்சம் வெல்லம் வைத்துச் சுருட்டி, வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட வேண்டும். ஒரு நாளைக்கு 3 வேளை என இரண் டு நாள் சாப்பிட்டு வந்தால், மூன் றாம் நாள் சளி குறைந்து, ஜல தோஷம் பறந்துவிடும்.
வேர்க்குருவை விரட்ட‍ . . .
வேர்க்குரு இருந்தால், இரவு படுப்பதற் கு முன்னால், சந்த னக் கல்லிலே நன்கு சந்தன த்தை இழைத்து, அதில் பன்னீர் விட்டுக் குழைத்து, வேர்க் குரு இருக்கு ம் குழந்தைகளுக்கு உடம்பில் தடவினா ல் வேர்க்குரு போய்விடும். கிராமத்துப் பக்கம், பனை நுங்கு கொட்டிக்கிடக்கு ம். அந்த நுங்கை நன்கு தேய்த்துப் பிள் ளைகளுக்குக் குளிப்பாட்டுவார்கள்.
பெரியார் அடிக்கடி சொன்ன வெங்காய ம், வேர்க்குருவை விரட்ட உதவும். வெ ங்காயத்தை இடித்துச் சாறு எடுத்து, வே ர்க்குரு இருக்கிற இடத்திலே தடவலா ம்.
புற்றுநோய் கட்டி கரைய . . .
சிலருக்கு வேனல் கட்டி வரும். அதற்கு மருந்து, செம்பருத்தி இலை அல்லது அந்திமந்தாரை இலை களை எடுத்து, அதிலே விளக்கெண்ணெய் தடவி தணலில் வாட்டி, கட்டி மேல் போட்டால், கட்டி உடைந்துவிடும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...