Friday, December 5, 2014

ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான‌ நான்கு விஷயங்களும் அவற்றின் ரகசியங்களும்

ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான‌ நான்கு விஷயங்களும் அவற்றின் ரகசியங்களும்
இன்றைய மனிதர்கள், பணத்திற்காக ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். இதில் அவர்கள் மறந்தவைகள் எத்த‍ னை சாப்பாடு, தூக்க‍ம் போன்றவற்றை மறந்து ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். கடைசியில் மரணம் என்னும் படுக்கையில்
தான் அவர்களுக்கு ஓய்வு கிடைக்கிறது.
மனிதர்களாகிய நாம் நமது உட லின் மீதும், மனதின் மீது பற்று வைத்தை அவற்றை ஆரோக்கி யமாக பாதுகாக்க‍ வேண்டும். கீழே வருவனவற் றை நீங்கள் படித்தீர்களானால் உங்களுக் கே புரியும். 

”உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண் டுமானால், நான்கு விஷயங்களில் முக்கியமாககவனம் செலுத்தவேண்டும் .
ஒன்று… பசி வந்து சாப்பிட வேண்டும்,
இரண்டு.தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும்,
மூன்று... சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும்,
நான்கு… தூக்கம் வந்து தூங்க வேண்டும்.’
இந்நான்கு விஷயங்களும் ஆரோக்கியத்துக்கு அத்தி யாவசியமான விஷயங்கள். ஆனால், பட்டண வாழ்க்கை யில் வேலைப்பளு காரணமா க இந்த விஷயங்கள் எதுவு மே சாத்தியம் இல்லாமல் இருக்கிறது’
நோய் வந்த பிறகுதான் உடலைப் பற்றிய ஞாபகமே மக்களுக்கு வருகிறது; மருத்து வமனைகளைத் தேடிப் போய்ப் பணத்தைக் கொட்டுகிறார்கள். ஆனால், நோய்வருவதற்குமுன் தங்களது உடலைக் காப்பதற் காக நேரம் செலவழிப்பது இல்லை.
உணவு, நீர், காற்று… இந்த மூன்றில் இருந்துதான் நம் உடலுக்குச் சக்தி கிடைக்கிறது. இந்த மூன்றில் இருந்து தவறா ன விஷயங்கள் ஏதேனும் உட லுக்குள் சென்றுவிட்டால்தான் நோய் வருகிறது.
நம்மை ஆரோக்கியமாக வைத் திருக்கும் நாளமில்லாச் சுரப்பிகளை தியானம், யோ காசனம் போன்றவைதான் ஊக்குவிக் கின்றன. அதனால், ஒவ்வொருவரும் தங்கள் உடலைப் பராமரிப்ப தற்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். உடலுக்குள் தேங்கிவிடும் கழிவுகளை வெளியேற்று வதற்கும், உணவின் கலோரிகள் எரிக்கப்படுவத ற்கும் காரணம் இந்த மூச்சுக்காற்று தான்.
நாம் சுவாசிக்கும் இந்த பிராண வாயுதான் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. மூச்சை இழு க்கும்போது, காற்று நுரையீர லுக்குள் முழுமையாகச் சென் று சேரவேண்டும். ஆனால், நாம் பெரும்பாலும் மேலோட் டமாகவே சுவாசிக்கிறோம். இதனால், நுரையீரல் முழுமையாகச் சுருங்கி விரிவது இல்லை. நுரையீரல் நன்றாகச் சுருங்கி விரிய மூச்சுப் பயிற்சி அவசியம்.
எந்த ஒரு வலியும் இல்லா மல்நம்மைக் குணப்படுத்தும் வல்லமை மூச்சுப்பயிற்சி மற்றும் யோகாசனங்களுக் குண்டு’ என்றார் மறைந்த பசுமைநாயகன் நம்மாழ்வார்
இது நம்மாழ்வார் ரகசியங்கள்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...