Wednesday, December 17, 2014

வீட்டு வாடகைச் சட்டம்! – (வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகைதாரர்களுக்காக)

வீட்டுச் சொந்தக்காரரும், குடித்தனக்காரரும் பகைமை பாரா ட்டாமல் இருக்க சில விஷயங் களை அறிந்துவைத்துக் 
கொள்வது அவசியம்! இதுகுறித் து சென்னையின் முன்னணி வழக்கறிஞரான பி.பி.சுரேஷ் பாபுவை சந்தித்துப்பேசினோம்
கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என முக்கிய மானவற்றை
பட்டியல் போட்டுச் சொன்னார்.
அவர். அக்ரிமென்ட் அவசியம்..! ‘‘வீட்டு உரிமையாளர், வாட கைக்கு வருபவர் இரு வரும் முதலில் ஒப்ப ந்தம் (அக்ரிமெ ன்ட்) போட்டுக் கொள்வது மிக அவசியம்.
பிற்காலத்தில் ஏதாவது பிரச்னை வரும் போது வாடகைக்கு இருப்பவர் என்னிடம் இவ்வளவு ரூபாய் அட்வான்ஸ்  வாங்கி விட்டார் என்பார். வீட்டு உரிமை யாளர் அட்வான்ஸே கொடுக்க வில்லை என்பார்.
யார்சொல்வது உண்மை என்பதி ல் குழப்பம் வந்துவிடும். அதனா ல், 20ரூபாய் முத்திரைத்தாளில் முன்பணம், மாத வாடகை எவ்வ ளவு என்பதை எல்லாம் அக்ரிமெ ன்ட் ஆக எழுதிக் கொள்வது அவ சியம். பொதுவாக, வீட்டு உரிமை யாளர்கள் 11 மாதத்திற்குதான் அக்ரிமென்ட் போடுவார்கள். அதென்ன 11 மாத கணக்கு என் கிறீர்களா? ஓராண்டுக்கு மேற்பட்ட ஒப்பந்தம் என்றால் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.
அதற்கு பணம் மற்றும் நே ரம் செலவாகும் என்பதால் தான் 11 மாதத்துக்கு ஒப்பந் தம் போடப்படுகிறது.
மற்றபடி சிலர் நினைப்பது போல ஒரு வருடத்துக்கு மேலாக ஒருவர் தொடர்ந்து வாடகைக்கு இருந்துவிட்டாஅது அவர் அந்த வீட்டை உரிமை கொண்டாட உதவுவதாக அ மைந்து விடும் என்பதால் அல்ல! அப்படி எல்லாம் ஒன்றும் உரிமை கொண் டாடி விட முடியாது. ஒரு வர் எத்தனை ஆண்டுகள் ஒரு வீட்டில் குடியிருந்தா லும்,அவருக்கு அந்த வீடு சொந்தமாக சட்டத்தில்வழியே இல்லை!
பதிவுக்கட்டணம் எவ்வளவு?
அக்ரிமென்டில் அட்வான் ஸ், வாடகை, பராமரிப்பு க் கட்ட ணம் தவிர வேறு ஏதாவது கட்டணங்கள் இருந்தால் அதையும் கட் டாயம் குறிப்பிடவேண்டு ம். உதாரணத்துக்கு, மூன்றாண்டுக்கான ஒப்ப ந்தம் என்றால் மூன்றா ண்டுகளுக்கான மொத்த வாடகை, அட்வான்ஸ், இதர கட்ட ணங்கள் எல்லாம் சேர்த்து மொத்த தொகையைக் கணக்கி ட்டு பதிவு செய்ய  வேண்டு ம். இதற்கு சுமாராக ஒரு சதவிகிதம் கட்டணம் செ லுத்த வேண்டி வரும். இந்த ஒப்பந்தத்தைப் பொதுவாக மூன்றாண்டுகள் முதல் பத் து, பதினைந்து ஆண்டுகள் வரை போட்டுக்கொள்ளலா ம். அக்ரிமென்டில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால், இரு தரப்பினரும் சேர்ந்துதான் மேற்கொள்ள மு டியும். அதனால், கூடுமான வரை ஆரம்பத்திலேயே தேவை யான அனைத்து விஷயங்க ளையும் அதில் சேர்த்து விடுவது நல்லது.
அட்வான்ஸ்
”வீட்டுக்கான அட்வான்ஸ் பெற வரம்பு எதுவும் நிர்ண யிக்கப் படவில்லை. சந்தை நில வரத்தைப் பொறுத்தே இது இருக்கிறது. சென்னை போன்ற நகரங்களில் மாத வாட கையைப் போல் பத்து மடங்கும் மற்ற நகரங்களில் சுமார்ஐந்து மடங்கும் அட்வான்ஸ் வா ங்குகிறார்கள். பேரம் பேசி குறை க்க முடிந்தால் அது அவரவர்கள் சாமர்த்தியம்!
வாடகை! ”
வீட்டுவாடகையை பொதுவாக இ ரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சந்த அதிகரித்துக் கொள் ளலாம்.  அதே நேரத்தில் வீட்டை புதுப்பித்தாலோ, கூடுதல் வசதிகள் செய்து கொடுத் தாலோ வாடகையை அதி கரிக்க எந்தத் தடையும் இல்லை.
புதிதாக கட்டிய வீட்டுக்கு ஐந்து ஆண்டு கள் வரை வாடகை நிர்ணயிப்பதில் எவ்விதக்கட்டுப்பாடும் இ ல்லை. வீட்டின் உரிமை யாளர் விரும்பும் தொகையை வாடகையாக வைத்துக் கொ ள்ளலாம். அதேசமயம், ஏற்கெனவே உள்ள வசதிகள் குறை யும்போது வாடகையைக் கு றைக்கச் சொல்லிவீட்டு உரி மையாளரை குடித்த கேட்க லாம்.
அதாவது தினசரி தண்ணீர் வ ந்த நிலையில் தந்த வாடகை யை ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் வரும்போது கு றைக்கச் சொல்லலாம். கவர் ட் கார் பார்க்கிங், திறந்த வெளி கார் பார்க்கிங் ஆக மாறினா ல் வாடகையை குறைக்கச் சொல்லி கேட்கலாம். அத ற்குக் குடித்தனக்காரருக்கு உரிமை உண்டு. ரசீது அவ சியம்! வாட கைக்குப் போ கிறவர் முன்பணம் தொட ங்கி அனைத்துக்கும் உரி மையாளரிடம் ரசீது பெற் றுக் கொள் வது அவசியம். இதற்காக அச்சடித்த ரசீது கள் எதுவும் தேவையில்லை.
சாதாரண வெள்ளைத் தாளில் எழுதி வாங்கி க் கொண்டாலே போ துமானது. தேவைப்பட் டால் ரெவின்யூ ஸ்டா ம்ப்  ஒட்டியும் வாங்கி க் கொள்ளலாம்.
வீட்டின் உரிமையாளர் வாங்கும் வாடகை நியாயமானது இல்லை என்கிறபோது செ ன்னைவாசிகள் என்றால், சென்னை உயர்நீதி மன்ற வளாகத் தில் இருக்கும் சிறு வழக்கு நீதிமன்றத்தில் வழக்குத் தொ டரலாம். மற்ற  மாவட்டத்தி லுள்ளவர்கள், முன்ஷிப் நீதி மன்றங்களை அணுகலாம்.
உரிமையாளர் வாடகையை வாங்க‌ மறுத்தால்..?
‘வீட்டு உரிமையாளருக்கும் குடித்தனக்காரருக்கும் இடையே ஏதாவது பிரச்னை வந்து பேச்சே இல்லாமல் போய் விடுவ தும் உண்டு. அது போன்ற நேரங்களில் வீட்டு உரிமை யாளரின் வங்கிக் கணக்கில் வாடகைப் பணத்தை போட்டு வரலாம். வங்கிக் கணக்கு பற்றிய விவரம் கிடைக்கவி ல்லை எனில் மணியார்டர் செய்யலாம். அதையும் வாங் க மறுத்து திருப்பி அனுப்பி னால் சிறு வழக்கு நீதி மன்றத்தில் டெபாசிட் செய்து வந்தால் குடித்தனக்காரர் மீது வீட்டின் உரிமையாளர் குற்றம் எதுவும் சொல்ல முடியாது.
குடியிருப்ப‍வர் வாடகை யை தர மறுத்தால் ?
வாடகைக்கு இருப்பவர் ச ரியாக வாடகை தரவில் லைஅல்லது வாடகையை வீட்டின் உரிமையாளர், நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலா ம். வாடகை சரியாக தர வில்லை என்பதற்காக மின்சாரம், த ண்ணீர் சப்ளையை நிறுத்துவது சட்டப்படி தவற நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தே இழப்பீடு பெற முடியும்
வீட்டை காலி செய்ய வைக்க..!
குடியிருப்பவர் வீட்டைக்காலி செ ய்யவேண்டும் என்றால், குறைந்த து ஒன்று முதல் இரண்டு மாதங் களுக்கு முன்னால் சொல்ல வே ண்டும். இந்த விஷயத்தை ஆரம்ப த்திலேயே அக்ரிமென்ட எழுதிக் கொள்வது நல்லது. வீட்டின் உரிமையாளர், தன் சொந்தக் காரணம், மகன், மகளுக்கு வீடுதேவை என்பது போன்ற காரண ங்களுக்கு வீட்டை காலி செய்ய ச் சொல்லலாம்.
அதே நேரத்தில், வீட்டின் உரி மையாளருக்கு அந்தப் பகுதியி ல் வேறு ஒரு வீடு இருந்து, அது காலியாக இருக்கும் பட்ச த்தில் வாடகைக்கு இருப்பவரை காலி செய்து வீட்டை இடித்துக்கட் டுவது என்றால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம்அனுமதிவாங்கியதற்கான ஆதாரத்துடன்தான் வீட்டை காலி செய்யச்சொல்ல முடி யும்.வீட்டைக் காலிசெய்த பிறகு இடிக்கவில்லை என் றால், ஏற்கெனவே வாடகை க்கு இருந்தவரை அதே குடி அமர்த்த வேண்டும். வீட்டை இடித்துக் கட்டிய பிறகும் பழைய வாடகைதாரர்கள் வீட்டை கேட்டால் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வே ண்டும். வீட்டின் உரிமையா ளர் ஒருவேளை தவறான தகவ ல் கொடுத்து காலி செய்ய வைத்தால், குடித்தனக்காரர் அத ற்கான நஷ்டஈடுகோ ர வாய்ப்பிருக்கிறது. வீட்டை வாடகைக் கு எடுத்திருப்பவர் கு றைந்தது நான்கு மாதங்கள் வீட்டைப் பயன்படுத்தாமல் பூட்டுபோட்டு வைத்தி ருந்தாலும் வீட்டை காலி செய்யச்சொல்லலாம். வீட் டை உள் வாடகைக்கு விடு வது பல நேரங்களில் அனு மதிக்கப்படுவ தில்லை.
இது குறித்தும் ஆரம்பத்தி லேயே அக்ரிமென்டில் தெ ளிவுப்ப டுத்திக் கொள்வது நல்லது. வாடகைக்கு இருப்பவர் வீட்டை சரியாக பராமரிக்காமல் கண்டபடி அழுக்காக்கினா ல் அல்லது சேதம் ஏற்படுத்தி னால் வீட்டின் உரிமையாளர், இழப்பீடு பெற்றுக்கொள்ள வ ழி இருக்கிறது. இப்படி வீட்டை வாடகை க்குவிடுகிறவர குடித் தனக்காரருக்கும் சட்டப்படி பலஉரிமை கள் இருக்கிறது. அவை என்னென்ன என்பது தெரியாததால் தான் பல சமய ங்களில் மோதல் வந்துவிடுகி றது.  இப்போது தெரிந்து விட் டது அல்லவா? இனி சுமூகம் தான்..!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...