Tuesday, December 9, 2014

அசைவ உணவை எப்படிச் சாப்பிட வேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும்?

அசைவத்தை எப்படிச் சாப்பிட வேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும் 

இன்றைக்கு அசைவம் சாப்பிடுவது பற்றி இருவேறு கருத்துகள் இருக்கின்றன. ஒன்று… அசைவம் சாப்பிட் டால்,
உடம்பு வளரும், மூளை வளராது; சைவமே சிறந்தது என்பது. இரண்டாவது… அசைவம் சாப்பிடுவோருக்கு க் காய், கனிகள் ஒரு பொருட்டே அல்ல என்பது.
இவை இரண்டில் எது சரி?
உண்மை இவை இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது என்பதே சரி! அசைவம் சாப்பிட்டால், மூளை வளராது என்பது உழைக்கும் வர்க்கத்தை இழிவுபடுத்தும் ஒரு கருத்து.
நோபல் பரிசு வாங்கியவர்களில் 99 சதவிகிதத்தினரு ம், உலகை உலுக்கி மாற்றிய ‘மைக்ரோசாஃப்ட்’, ‘ஆப்பி ள்’ முதலாளிகளும் அசைவப் பிரியர்கள்தான். புலாலி ல் உள்ள புரதமும் சில நுண் சத்துக்களும் பொதுவாகக்
காய், கனிகளில் குறைவு. உதாரணத்துக்கு, 100 கிராம் ஈரலில், 6,000 மைக்ரோ கிராம் இரும்புச்  சத்து உண்டு. 100 கிராம் கேரட்டில் 300 மைக்ரோ கிராம்தான் இரும்பு ச் சத்து இருக்கிறது. ஆகையால், அசைவத்தின் ஆற்ற லைக் கேள்விக்குறியாக்க வேண்டியது இல்லை.
ஆனால், அசைவம் மட்டுமே போதுமா? அசைவத்தை எப்படிச்சாப்பிடவேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண் டு ம் என்பதுதான், முக்கியமான ஒரு கேள்வி!
ஏனென்றால், போருக்குப் போகும் வீரன் சாப்பிட்டது, காரில் போகும் சுகவாசிக்கு அப்படியே சரிப்படாது. அன்று முதல் இன்றுவரை கட்டுமரத்தில் நெடுஞ்சா ணாக நின்று கடலை ஆளும் மீனவர் சாப்பிட்ட அளவு, நோஞ்சானாக கேண்டில் லைட் டின்னரில் ‘ஃபிஷ் ஃப்ரை’ ஆர்டர் செய்யும் சாஃப்ட்வேர் இன்ஜினீயருக்குச் சரி வராது. உழைக்கும் அளவுக்கும் வாழும் நிலத்துக் கும் உண்ணும் அளவைத் தீர்மானிப்பதில் எப்போதுமே முக்கியமான பங்கு உண்டு.
அசைவம் சாப்பிடலாம். ஆனால், அளவாகச் சாப்பிடுங் கள். ஐந்து பேர்கொண்ட ஒருகுடும்பம் வாரத்துக்கு ஒரு நாள்
அரை கிலோ ஆட்டு இறைச்சியோ, ஒரு கிலோ கோழி க் கறியோ, ஒரு கிலோ மீனோ சாப்பிட்டால் போதுமா னது.
அதையும்கூட இரண்டு நாட்களாகப் பிரித்து எடுத்துக் கொண்டால், இன்னும் சிறப்பானது. ஏனைய நாட்களி ல் காய், கனிகளுக்கு இடம் கொடுங்கள். வாரத்தில் ஒரு நாள் – குறைந்தது ஒரு வேளையேனும் வயிற்றுக் கு ஓய்வு கொடுத்து விரதம் இருங்கள். எல்லாமே விருந்துதான்.
எல்லாவற்றுக்குமே ஒரு புரிதல் தேவைப்படுகிறது! அட்டகாசமான கறி விருந்து சாப்பிட்டால், மறுநாளே கொள்ளு ரசம், சோறு, இஞ்சித் துவையலுடன் எளிமை யாக அன்றைய சாப்பாட்டை முடித்துக்கொள்ளும் வழ க்கம் நம் முன்னோர்களிடம் உண்டு. ஆட்டின் இறைச்சி உடலுக்குத் தேவையான வலுவைத்தரும் என்றால், கொள்ளும் இஞ்சியும் கொழுப்பைக் கரைக்கும் என்ப தை அறிந்துவைத்திருந்தார்கள் நம் முன்னோர்கள். நாம் எதை அறிந்துவைத்திருக்கிறோம்? மாமிசம் சாப் பிடும்போது, நிச்சயம் இஞ்சி, பூண்டு, சீரகம், மல்லி, பெருங்காயம் இருக்கவேண்டும் என்கிறது தமிழ் மருத்துவம்.
இது வரை எந்தத் தமிழர் வீட்டு அடுப்பங்கரையிலும் இந்தக் கறி மசாலா இல்லாமல் கிடாக் கறி சமைக்கப் பட்டது கிடையாது. ஆனால், புதிதாக வெளிநாட்டில் இருந்து இங்கு மூலைக்கு மூலை முளைத்து உள்ள  பன்னாட்டு கறிக் கடைகள் பொரித்தும் அவித்தும் தரும் கறி பக்கோடாக்களில் கறி மசாலாவை நீங்கள் பார்க்க முடியாது தெரியுமா? சரி, கண்ணாடிக் குளிர் அறைகளில், நண்பர்களுடன் உட்கார்ந்து சாப்பிடுகிறீர் களே…
அந்தக் கறியில் என்னென்னஎல்லாம் கலந்து இருக்கு ம் என்று உங்களுக்குத் தெரியுமா? தெரிந்துகொள்ளுங் கள்… நூற்றுக்கணக்கான ரசாயனக் காரணிகள் அவற் றில் உண்டு. ஏகப்பட்ட ரசாயன உப்புகள் உண்டு. குறிப் பாக, புற்றுநோய்க்கு வரவேற்பு வளைவுகள் வைக்கும் சோடியம் நைட்ரேட், மோனோ சோடியம் க்ளூட்டமேட் உப்புகள் உண்டு.
கோழி நல்ல உணவு. ஆனால், அது தானாக இரை தேடி வளர்ந்த கோழியாக இருக்க வேண்டும். ஊசி போ ட்டு வளர்ந்த கோழியாக இருக்கக் கூடாது. கோழிக் கறி பொதுவாக உடல் சூட்டைத் தந்து நோய் போக்கக் கூடியது.
சாதாரண சளி, இருமல், மந்தம் போக்கக் கூடியது; உட ல் தாதுவை வலுப்படுத்தி ஆண்மையைப் பெருக்கக் கூடியது என்கிறது சித்த மருத்துவம்.
உதாரணமாக
கோழியில் நார்ச் சத்து அதிகம்; வைட்டமின் பி 12 சத்து ம் அதிகம். உடல் எடை அதிகரிக்காது, வலுவுடன்  ஆ ரோக்கியத்துடன் இருக்க சிக்கனுக்கு இணை எதுவும் இல்லை என்கிறது நவீன உணவியல்.
நம் ஊரில் கருங்கோழி எனும் நாட்டு இனக்கோழி இன் றும் இருக்கிறது. காலில் அதிக மயிருடன் ஷூ போட் டது போல் மிடுக்காக இருக்கும்.  அந்தக் கோழியின் சதைப் பகுதியும்கூட கருஞ்சிவப்பு நிறமாக இருக்கும்.  தமிழ் மருத்துவம்.
தசை சூம்பி வலுவிழந்து இருக்கும் பக்கவாத நோயின ருக்கும், பிற தசை நோயினருக்கும் இந்தக் கோழியை த்தான் உணவாக, மருந்தாகப் பன்னெடுங்காலமாக உரக்கச் சொல்லிவருகிறது. நாம் இப்போது சாப்பிடும் கோழி இறைச்சியின், பின்னணி குறித்து, ‘கூவாத கோ ழியும், குடை சாயும் இறையாண்மையும்’ என்ற புத்தக த்தில் அதன் ஆசிரியர் சுந்தரராசன் கூறும் தகவல்கள் அதிரவைப்பவை.
‘பிராய்லர் கோழிகளின் செழுமையான தோற்றத்துக் காக அளிக்கப்படும்.  ‘ரோக்ஸார்சோன்’ (Roxarsone) என்ற மருந்து மனிதர்களுக்குப் புற்றுநோயை உருவா  க்க வல்லது என்கிறது அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் அமைந்துள்ள டியூக்கேன் பல்கலைக்கழக ஆய்வு முடி வுகள். குழந்தைப் பருவத்திலேயே சிறுமிகள் பூப்படை தல், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பல்வேறு நோய்க ளும், இந்த பிராய்லர் கோழிகளையும் லேயர் கோழி கள் இடும் முட்டைகளையும் தொடர்ந்து உட்கொள்ளு ம் மனிதர்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகப் பல் வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன! என்று புத்தகத்தில் தந்து இருக்கும் எச்சரிக்கைப் பட்டியல் அபாயகரமான து…

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...