Monday, December 8, 2014

பெட்ரோல் விலை நிர்ணயம் மறைக்கப்படும் மர்மங்கள்

பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை குபீர், குபீர் என உயர்ந்து கொண்டேஇருக்கிறது. அப்படியென் றால் உலக மார்க்கெட்டில் கச்சா எண் ணெய்யின் விலை எப்போதும் இல்லா த அளவிற்கு தற்போது உயர்ந்திருக்கி றதா என்று பார்த்தால், அதுவும் இல் லை.
2008ம் ஆண்டில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின்விலை 135 டாலர் வரை சென்றது. அப்போது ஒரு லிட் டர் பெட்ரோலின் விலை ரூ.54 ஆகத் தான் இருந்தது. தற்போது (5.11.11) ஒரு பீப்பாயின் விலை 108 டாலர்.அதாவது 158.99 லிட்டர் கச்சா எண்ணெய் விலை ரூ. 5 ஆயிரத்து 292 ஆகும். இன்னும் சுருக்கமாக சொல்வதென்றால், ஒரு லிட்டர் கச்சா எண் ணெய் ரூ.33.28 தான். ஆனால் நாம் வாங்கும் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 72.68 பைசா.
ஏன் இந்த மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்?
எப்படி விலை நிர்ணயிக்கப்படுகிறது?
பெட்ரோலை உற்பத்தி செய்ய 90 சதவி கிதம் கச்சா எண்ணெய்யும், 10 சதவி கிதம் உள்நாட்டில் தயாராகும் பொரு ட்களும் பயன்படுத்தப்படுகி ன்றன. ஒரு லிட்டர் பெட்ரோல் உற்பத்திக்கு, கச்சா எண்ணெய்க்கும் சேர்த்து ஆகும் செலவு 2008- 09ம் ஆண்டு புள்ளி விபரப்படி ரூ 26.11 ஆகும். 2009- 10ம் ஆண்டு ரூ. 21.75 என்று அரசின் புள்ளி விபர ங்களே உறுதிப்படுத்துகிறது. ஆனால் மத்திய அரசுஎப்படியெல்லாம் வரி யை கூட்ட முடியுமோ அப்படி கூட்டி, பெட்ரோலின் விலையை உயர்த்து கிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் அடங்கியுள்ள வரியினங்கள்
வருமாறு (24.8.2011)
ஆதார விலை – ரூ. 24.23
சுங்கத்தீர்வை – ரூ. 14.35
கல்விவரி – ரூ. 0.43
விற்பனையாளர் கமிஷன் – ரூ. 1.05
சுத்திகரிப்பு செலவு – ரூ 0.52
சுத்திகரிப்பு விலையின்
மூலதனச்செலவு – ரூ. 6.00
மதிப்புக்கூட்டு வரி – ரூ. 5. 50
கச்சா எண்ணெய் சுங்கவரி- ரூ. 1.10
பெட்ரோல் சுங்கவரி – ரூ. 1. 54
சரக்கு போக்குவரத்து செலவு- ரூ. 6.00
மொத்தம் – ரூ. 60.72
இப்படித்தான் தோட்டத்தில் பாதி கிணறு என்பது போல் பெட்ரோல் விலை யில் பாதிக் கும் மேல் வரி இனங்களாக வசூலிக்கப்படுகின்றன. இது தவிர எண்ணெய் நிறுவனங் களின் கொள்ளை லாப கணக்கே… தனி.
அரசுக்கு நஷ்டமா?
பெட்ரோலியத்துறைஅமைச்சகம் நாடா ளுமன்ற நிலைக்குழுவுக்கு கொடுத்துள் ள அறிக்கையின்படி 2004-05ம் ஆண்டில் பெட்ரோலிய பொரு ட்களின் விற்பனை மூலம் மத்திய அரசுக்கு கிடைத்த வரி வருமானம் 77 ஆயிரத்து 692 கோடி ரூபாய், சுங்கவரி மூலம் ரூ.15 ஆயிரம் 483 கோடி ஆகும். மாநில அரசுகளுக்கு கிடைத்த வரி வருமானம் 43,254 கோடி ரூபாய்.
இதே போல் 2006- 07 முதல் 2009 -10ம் நிதியாண்டு வரை பெட்ரோலியப் பொருட்களின் வரி முலம் மத்திய அரசுக்கு கிடைத் திருக்கும்வருவாய் ரூ.4 லட்சத்து 10 ஆயிரத்து 842 கோடி ஆகும். மாநில அரசுக ளுக்குகிடைத்திருக்கும் வரு வாய் ரூ.2லட்சத்து 63 ஆயி ரத்து 766 கோடி. ஆனால் இதேகாலத்தில் பெட்ரோலிய பொரு ட்களுக்கு அரசு வழங்கியிருக் கும் மானியம் ரூ.23 ஆயிரத்து 325 கோடி மட்டுமே. ஆக பெட் ரோலிய பொருட்களின் மூலம் மத்திய-மாநில அரசுகளுக்கு கிடைக்கும் லாபத்தில் இருந்து வெறும் 3.45 சதவிகிதம்தான் மானியமாக வழங்கப் படுகிறது. எப்படி பார்த்தாலும் அர சுக்கு வருவாயே தவிர எவ்வித நஷ்டமும் இல்லை என்பதுதான் உண்மை.
எண்ணெய் நிறுவனங்கள் நஷ்ட மடைகின்றனவா?
பிரதமர் மன்மோகன் சிங் மற் றும் மத்திய அமைச்சர்கள், எண்ணெய் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன என வாய் வலிக்காமல் கூறிவருகின்றனர். அப்படி என்னதான் நஷ்டம் அடைகின்றன. அதன் விபரத்தை கீழ்க்காணும் பட்டி யலில்பார்த்தாலே மன்மோகன், மாண்டே க்சிங் அலுவாலியா வகை யறாவின் வருத் தம் புரியும்.
2008ம் ஆண்டில் இந்தியன் ஆயில் கார்ப்ப ரேஷன் நிறுவனத்தின்நிகர லாபம் ரூ.6962.58 கோடி, 2009ல் ரூ.2,949.55 கோடி, 2010ல் ரூ.10,220.55 கோடி. இதில் இன்னும் கவனமாக பார்த்தால் பெட்ரோலிய பொரு ட்களின்விலை நிர்ணயிக்கும் உரிமை அரசின் கையில் இருந்த வரை அடைந்தி ருக்கும் லாபத்தை விட எண்ணெய் நிறுவ னங்களே விலையை நிர்ணயம் செய்யத் துவங்கிய பின்பு அடைந்திருக்கும் லாபம் அதிகம். 2010- 11 ன் இரண்டாம் காலாண்டில் மட்டும் (2010 ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் ) எண்ணெய்நிறுவனங்கள் ஈட்டிய லாபத்தை பார்ப்போம்.
நிகரலாபம் அரசுக்கு செலுத்திய வரி மொத்த லாபம் (கோடியில்) (கோடி யில்) (கோடியில்)

ஐஒசி 5294 .00 832.27 6126.27
எச்பிசிஎல் 2142.22 90.90 2233.12
பிபிசிஎல் 2142.22 198.00 2340.22
உண்மை நிலை இவ்வாறிருக்க, எந்த அடிப்படையில் காங்கிரஸ், திமுக தலைமையிலானஆட்சியாளர்கள் எண் ணெய் நிறுவனங்களுக்கு நஷ் டம் என கூறுகின்றனர் எனத்தெரியவில்லை. அதாவது லாபத்தின் இலக் கில் சிறி ய குறைவு ஏற்பட்டாலும் அதனை மத்திய அரசு அவர்களுக்கான நஷ்ட மாக பார்க்கிறது என்பது மட்டும் தெளிவாகபுரிகிறது.
ஏற்றுமதிக்கு ஏன் வரி விலக்கு ?
2010-11 ம் நிதியாண்டில் இந்தியாவில் இருந்து 2 லட்சத்து 90 ஆயிரத்து 781 கோடி ரூபாய்க்கு பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதி செய்யப் பட்டிருக்கிறது என்று ரிசர்வ் வங்கி வெளி யிட்டுள்ள புள்ளி விபரத்தில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.
இந்தியாவின் பெட்ரோலிய பொருட்கள் தே வையில் 79 சதவிகிதம் இறக்குமதியை சா ர்ந்தேஇருக்கிறது. அப்படி இருக்கையில் ஏன் இங்கிருந்து மற்ற நாடுகளுக்கு எரிபொருட் களை ஏற்றுமதி செய்ய வேண்டும்?. இந்தியா வின் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கும் பணியை அரசு நிறுவ னங்களே 74 சத விகிதம் செய்கிறது. மீதமுள்ள 26 சதவிகித சுத்திகரிப்பு பணியை ரிலையன்ஸ் நிறுவனம் செய்து வருகிறது.
அப்படி சுத்திகரிப்பு செய்யும் பெட்ரோலியப் பொருட்களை ரிலையன்ஸ் நிறுவனம் 59 சதவிகிதத்தை ஏற்று மதி செய்கிறது. இந்தியாவிலேயே பெட்ரோலிய பொருட்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் போது ஏன் ஏற் றுமதி செய்ய வேண்டும்? அதற்கும் காரணம் இருக்கிறது. பெட்ரோ லிய பொருட்களின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு பல்வேறுசுங்க வரி சலு கைகளை அளித்திருக்கிறது. அத னையும்  ஒட்டுமொத்தமாக ரிலையன்ஸ் நிறுவனமே அமுக்க வேண்டும் என்ற மத்திய அரசின் “நல்லெண்ணமே” இதற்கு காரணம்.
இதனை கண்டறிந்த நாடாளுமன்ற நிலைக்குழு, “சர்வதேசச் சந்தையில் பெட்ரோலியப்பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதால், விற்பனையின் மூலம் கிடைக்கும் இலாபமேபோதுமா னது; ஏற்றுமதியை ஊக்குவிக்கத் தனி யாக வரிச்சலுகைகளை அளிக்கவேண் டியதில்லை. இந்த வரிச் சலுகைகளை நீக்குவதால் கிடைக்கும் வருமானத்தை,உள் நாட்டு மக்கள் பலன் அடையும்படி, பெட்ரோலியப் பொருட்களின் விலை யைக்குறைக்கப் பயன்படுத்தலாம்” எனப் பரிந்துரை செய்தது. ஆனால் மன்மோகன் அரசு, அதெல்லாம் முடியவே முடியாது என்று கூறிவிட்டது.
அதே நேரம் இதே மன்மோகன்சிங்,ஏழைகள் பயன்படுத்தும் மண்ணெண் ணெய்க்கும், சமையல்எரிவாயுவிற்கும் வழங்கப்படும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து கூறி வருகிறார். இதுதான் மன்மோ கன் வகையறாவின் வர்க்கப்பாசம் என்பது.
இது யாருக்கான அரசு?
எப்போது பார்த்தாலும் விவசாயத்திற்கு அளிக்கும் மானியத்தை ரத்து செய்ய வே ண்டும். ரேசன் பொருட்களுக்கு அளிக் கும் மானியத்தை ரத்து செய்ய வேண் டும். பெட்ரோலியபொருட்களுக்கு அளிக்கும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும். மின்சாரதிற்கு அளிக்கும் மானியத்தை ரத்து செய்ய வேண் டும் என சாதராண மக்களுக்கு கிடைக்கும்.
ரு சில சலுகைகளையும் வெ ட்டுவதிலேயே மத்திய காங்கி ரஸ் அரசு குறியாகஇருந்து வரு கிறது.ஆனால் மறுபுறம், நாட் டின் பெரும்முதலாளிகளுக் கும், கார்ப்பரேட் நிறுவனங்களு க்கும் சலுகைகளை வாரி வழ ங்கி வருகிறது. 2008 முதல் 2010ம் ஆண்டுவரை பெரும் நிறுவனங்க ளிடம் இருந்து
அரசு வசூலிக்க வேண்டிய ரூ. 9 லட்சத்து 16 ஆயிரம் கோடியை அப்படி யே விட்டுவிட்டனர். உலகப் பொருளாதார மந்தத்திலிருந்து கார்ப்பரேட் நிறுவனங்களைஊக்குவிக்கிறோம் என்று கூறி, 2008-09ஆம் ஆண்டில் 66 ஆயிரத்து 901 கோடிரூபாயும், 2009-10ஆம் ஆண்டில் 79 ஆயிரத்து 554கோடி ரூபாயும் நேரடிவரிகளில் சலுகைகள் அளிக்கப்பட்டது. இதே போன்று மிக உயர்ந்த அளவில்வருமானவரி செலுத்துவோருக்கு, 37 ஆயிரத்து 570 கோடி ரூபாயும், 40 ஆயிரத்து 929 கோடி ரூபாயும் முறையே வரிச்சலுகைகள் அளிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு இரண்டு ஆண்டுகளில் பணக்காரர்களுக்கு சுமார் 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சலுகைகள் அளித்திருக்கிறது.

ஒட்டுமொத்தத்தில் தாராளமயம், தனியார் மயம், உலகமயம் என்ற பெயரில் ஏழை களை மேலும்ஏழைகளாக்குவது, பணக்கா ரர்களை மேலும் பணக்காரர்களாக்குவது என்று இந்திய சமூகத்தில் மிகப்பெரிய ஏற்றத் தாழ்வை மத்திய அரசே உருவாக்கி வருகிறது. ஆக,மத்திய ஆட்சியாளர்கள் பின்பற்றும் உலகமயக் கொள்கையையும் எதிர்த்து முறியடித்தால் மட்டுமே சாதாரண, நடுத்தர, உழைப்பாளி மக் கள் வாழ்ந் திட முடியும்.


தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...