Friday, December 19, 2014

வெற்றிக்களை அள்ளித்தரும் 14 மந்திரங்கள்!!!

வெற்றிக்களை அள்ளித்தரும் 14 மந்திரங்கள்!!!
மந்திரங்கள் சில நேரங்களில் தந்திரங்களாக இருப்ப து அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால்
புத்தமதம் மற்றும் இந்துமதத்தினை சேர்ந்தவர்கள் தியானம் போன்ற செயல்களில் ஈடுபடும் போது மந்திரம் போன்ற சில வார்த்தைகளை உச்சரிப் பதை அநேக இடங்களில் பார்த்திருக் கிறோம். இது ஆன்மீக ரீதியாகவோ அல்லது விஞ்ஞானரீதியாகவோ அணுகுவோருக்கு வெவ்வேறு பார்வையில் தோன்று ம். தியானம் செய்யும்போது இவர்கள் உச்சரிக்கும் வார் த்தைகள் பார்ப்பவர்களின் மனதிற்கு மந்திரங்களாக த் தோன்றுகின்றன. உண் மையில் இவர்கள் ஏன் இ ப்படி செய்கிறார்கள் என்று பலமுறை நினைத்ததுண்டு. அதன்காரணம் என்னவெ ன்றால் அவர்கள்தங்களது தியானத்தில் கவனம் செலு த்த ஏதாவது ஒன்றை கூறிக் கொண்டே இருக்க வேண்டும் அவ்வளவு தான். இப்படி ஒவ் வொருவரும் ஒவ்வொரு மாதிரியான மந்திரங்களை பயன்படுத்துவ துண்டு. இதே போல்தான் நாமும், நாம் நினைத்த காரியத்தில் நமது கவனத்தினை வைக்க 14 மந்திரங்கள் உள்ளது. அவை கீழே தொகுக்கப்பட்டுள்ளன.
1. பொறுமையே வெற்றிக்கான வழி
இந்த மந்திரத்தினை புரியும்படி சொன்னால் “ஒரேநா ளில் ஒபாமா” ஆக முடியாது என்பதுதான். வெற்றி ஒரே நாளில் கிடைத்திடாது, அதற் கு முக்கியமாக பொறுமை, விடாமுயற்சி, கடினஉழைப்பு என்றமூன்றும் அவசியம். இ த்துடன் அனுபவமும் ஒன்றுசேர்ந்துவிட்டால் வெற்றி கிடைப்பதை எவராலும் தடுக்க முடியாது. நாம் திட்ட மிட்டபடி நமது திட்டம் நடைபெறா தபோது கோபம், எரிச்சல் போன்ற தேவையில்லாத எண்ணங்கள் வரும், ஆனால் அதையெல்லாம் தாண்டி பொறுமையுடன் இருந் தால் மட்டுமே வெற்றிக்கனியி னை ருசிக்க முடியும்.
2. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்
வாய்ப்புகள் எப்போதாவதுதான் கிடைக்கும், அப்போது நாம் அதை பயன்படுத்தா விட்டால் அந்த வாய்ப்பை நழுவவிட்டதை எண்ணி வாழ்நாள் முழுவதும் கஷ்ட ப்பட வேண்டியிருக்கும். வாய்ப்புசரியாக அமைந்தது என்றால் எவ்வளவு பெரிய ஆபத்தாக இருந்தாலும் முயற்சி செய்யுங்கள்.
3. முன்னோக்கி முன்னேறுங்கள்
ஏற்கனவே செய்ததவறுகளை எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் அடுத்த நிலைக்கு ஒரு நாளும் செல்ல முடியாது. வாழ்க் கையில் ஒருஉச்சநிலைக்கு வரும்வரை நடந்தது என்ன வென்று பின்னோக்கி பார்க்க க்கூடாது, எத்தனை தோல்வி கள் வந்தாலும் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இரு க்க வேண்டும். தோல்வியில் இருந்து பாடம் கற்காவிட்டால் அதுதான் உண் மையான தோல்வி, அதனால் தோல்வி யை வெற்றிக்கு படிக்கல்லாக்கி அடுத்த நிலைக்கு தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருங்கள்.
4. உங்களை விட்டுக்கொடுக்காதீர்கள்!
வாழ்க்கை எளிது என்றுஎவருமே, ஒருநாளும் கூறிய தில்லை. வெற்றியாளர்கள் ஒரு நாளும் தங்களை தங் கள் பாதையிலிருந்து விலக் கிக்கொண்டதில்லை. தோல் விகளிடம் ஒருபோதும் உங் களை விட்டுக்கொடுக்காதீர் கள்!
5. என்னால் முடியும்….
மற்றவர்கள் உங்களைப் பார்த்து “உங்களால் முடியும், நீங்கள் செய்தால் நன்றாக இருக் கும்” என்று கூறும் முன்னரே நீங்க ளாகவே முன்வந்து அச்செயலி னை செய்யத் தொட ங்கவேண்டும்.ஒவ்வொரு முறை உங்கள் திறமை யினைப்பற்றிய சந்தேகம்உங்களுக் கு வரும்போதும்“என்னால் முடியும் ”என்ற மந்திரம் கண்டிப்பாக உதவு ம்.
6. யானையின் பலம் தும்பிக்கை, மனிதனின் பலம் நம்பிக்கை
உலகில்பல புத்திசாலிகள் இருக் கின்றனர். ஆனால் அனைவராலு ம் தலைவராக முடிவதில்லை. ஏனெனில் அவர்களின்மீது அவர்க ளுக்கே நம்பிக்கை வருவதில்லை . “என்னால் இந்த செயலை முன்னி ன்று நடத்த முடியும்” என்ற நம்பிக் கை எப்போது வருகிறதோ அப்போ து நாம் இந்த மந்திரத்தில் கைதேர் ந்தவராகிறோம்.
7. உழைப்பில்லையேல் ஊதியமில்லை!
நமதனைத்து திறமைகளையு ம் நமது மனதுக்குள்ளே வை த்துக்கொண்டால் வெளியுல கிற்கு எப்படித்தெரியும். அதை வெளிக்கொணர நம்மிடம் இ ருக்கும் மந்திரம்தான் “உழை ப்பு”. உழைத்தால் மட்டுமே நமது கனவினை நனவாக்க முடியும்.
வெற்றிக்கான மந்திரங்கள்!!!
8. கவலை ஏதுமில்லை….
மது ஒவ்வொரு முயற்சிக் கும் தடையாக இருப்பது நமது பயம், கூச்சம் மற்றும் கவலை கள்தான். இவை மட்டும் நமக் கு இருந்தால் நமது எதிரிகள் தனியாக செய்வினை வைக்க வேண்டாம், ஏனென்றால் இவை இருக்கும்வரை நம் மால் முன்னேறவே முடியாது. அதற்கான மந்திரம்தான் இது “ கவலை ஏதுமில்லை, தொல் லைஇல்லை. நடக்கும் செயல் களை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ளும்போது நமது கவ லைகள் கடன் வாங்கியாவது அடுத்த நாட்டிற்குச் சென்றுவிடும்.
9. சக்திகள் அதிகரிக்கும்போது, பொறுப்புகளும் அதிக ரிக்கும்.
இது நீங்கள் அடிக்கடி பார் த்து வியந்த “ஸ்பைடர்மே ன்” படத்தில் இருந்து வந்தது. நமக்கு என்ன திற மை என்ப து நாம் மட்டும் அறிந்தஒன்று, அதைநாம் பயன்படுத்தினால்தான் சிறப்புற செ யலாற்ற முடியும். உங்கள் திறமை யின்மீது நம்பிக்கை வைத்து அதை செயல்படுத்துங்கள் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்.
10. இறுதியில் எல்லாம் சரியாகிவிடும்….
நமது வெற்றிக்கான பாதை எப்போதும் சமமாக இருக் கும் என சொல்ல முடியாது. மேடு பள்ளங்களுடன் தான் இருக்கும். அதை சகித்துக்கொள்ளும் மனப் பக்குவமும், சுயக்கட்டுப்பாடும் நம க்கு வேண்டும். இறுதியில் எல்லாம் சரியாகிவிடும் என்ற எண்ணம் இரு ந்தால் கடைசிவரை வெற்றி நம் கையில்.
11. முடியாதது ஒன்றுமில்லை
இன்று வெற்றியாளர்களாக நாம் பார்க்கும் பலர் ஒரு நாள் அவர்கள் இப்போதிருக்கும் உயர த்தினை கனவாகக்கண்டவர்களாகத் தான் இருப்பார்கள். உங்கள் கனவினை நீங்கள் நிறைவேற்றாவிட்டால் யார்நிறைவேற்றுவார் என்ற எண்ணம் மன திற்குள் இருக்கவேண்டும். அப்போதுதா ன் ‘நம்மால் முடியாது’ என்ற எண்ணமே வராது.
12.உங்களால் மற்றவர்களை மாற்ற முடி யாது. உங்களால் உங்களை மட்டுமே மாற்ற முடியும்.
இந்த உலகத்தில் உங்களால் மாற்றக் கூடிய ஒரே உயிர் நீங்கள் மட்டுமே அத னால் உங்களை நீங்களே கட்டுப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும். அதனால் இ ந்த மந்திரத்தினை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
13. விழி எழு பற ….
வாழ்க்கையில் ஏதாவது ஒரு இலக்கு நமக்கு கண் டிப் பாக வேண்டும். அந்த இலக்கினை அடைவதற்கு தொடர்ந்து மூச்சுக்காற்று போல முயற்சி செய்ய வே ண்டும். அப்போதுதான் அதை சாதிக்க முடியும்.
14. சிறந்ததையே செய்யுங்கள்
ஒருஆசிரியர் மாணவர்களிடம், தேர்ச்சிஅடைந்தால் மட்டும் போதும் என்று கூறுவதில் லை. அனைவரும் 100% மதிப்பெண் எடுக்கவேண்டும் என்றுதான் கூறுவார். அதைப் போல த்தான் இதுவேபோதும் என்ற எண்ணம் வந்துவிட்டால் நம்மா ல் எவ்வளவு முடியும் என்பது நமக்கேதெரியாமல் போய்விடும். அதனால் எப்போ தும் உங்களால் முடிந்த வரை சிறப்பாகச்செயல்படுங்கள்
இதில் ஒரு சில மந்திரங்களை கடைபிடிக்கத் தவறினாலும், இவற்றை கடைபிடிக்கும் முய ற்சியில் ஈடுபட்டாலே விரைவில் வெற்றி கிடைத்துவி டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...