Sunday, January 8, 2017

25 வருடங்களுக்கு முன்…

1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்..
2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை “வாங்க, போங்க” என மனைவி அழைப்பாள்.
3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை டானிங்க் செய்தது உடுத்தி கொண்டோம்.
4. முதல் நாள் கூட்டு பொறியல் ரசம் சாம்பாரை சுருண்ட செய்து பழங்கஞ்சியுடன் பருகினோம்.
5. எல்லா கல்யாணத்திலும் மத்திய உணவு பிரதானமாக இருந்தது வடை பாயசத்துடன்.
6. ரயில் பயணத்திற்கு புளியன்சாதமும் எலுமிச்சை சாதமும் கட்டி சென்றோம்.
7. பெரும்பாலும் பேருந்தில் தான் போனோம்.
8. பள்ளி மாணவர்கள் குழந்தைகளாக இருந்தனர்.
9. இளையராஜா தான் எங்கும் ஒலித்தார்.
10. பாடல்களின் வரிகள் புரிந்தன.
11. காதலிப்பவர்களுக்கும் உறவுகளுக்கும் கடிதங்கள் எழுதினோம்.
12. ரஜினி கமல் பொங்கல் தீபாவளி க்ரீடிங்க்ஸ் கிடைத்தது.
13. உண்டு களித்து தீபாவளிக்கு சினிமா பார்த்தோம்.
14. காணும் பொங்கலுக்கு உறுவுகளை பார்த்தோம்.
15. திருடனை பிடிக்க ஊரே ஓடியது. இன்று வரிசையில் நின்று திருடர்களை தேர்ந்தெடுக்கின்றனர்.
16. பாம்படிக்க பக்கத்து வீட்டு மாமா வந்தார்.
17. பக்கத்து வீட்டு பெரியவர்களுக்கு பயந்தோம்.
18. கல்யாணத்திற்கு உறவுகள் இரண்டு நாள் முன்னரே வந்தனர்.
19. எல்லாவற்றையும் விட காலை பொழுதுகள் ரம்மியமாக இருந்தது, சுவாசிக்கவும் யோசிக்கவும்.
முன்னேற்றம் என்ற பெயரில் நல்லவற்றை தொலைத்தோம்....
இன்று என்ன தான் உலகம் நவீனமயம் ஆனாலும் தொலைந்த வசந்தகாலத்தை இன்று யாராலும் மீட்க முடியாது...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...