Monday, January 2, 2017

பச்சை வாழைப் பழங்கள் இரண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் . . .

பச்சை வாழைப் பழங்கள் இரண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் . . .

பச்சை வாழைப் பழங்கள் இரண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் . . .
எல்லா பருவ காலங்களிலும், எல்லா நேரங்களிலும் எல்லோருக்கும் எளிதாக கிடைக்க‍க்கூடிய பழம் எதுவென்றால், அது வாழைப்பழம் என்று குழந்தைகள் கூட சொல்லிடும். இந்த
வாழைப்பழத்தில் பலவகையுண்டு. அவற்றில் பச்சைவாழைப் பழம் 2 வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் என்னென்ன‍ பலன்க ள் கிட்டும்.
பச்சைப் பழங்கள் வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்க ளை ஆற்றும் தன்மையுடையது.
குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல்புண் என்கிற அல்சர் ஏற்படுகி றது.
பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந் தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.
குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத்தோல்க ளைச் விரைவில் வளரச்செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.

பச்சை வாழைப்பழத்தில் ஸ்டார்ச் அதிகளவில் உள் ளதால் நீரிழிவு நோயாளிகள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டு மெனில் இதனை சாப்பிடலாம்.
மேலும், இதய நோயாளிகளுக்கும் சிறந்தது, அதுமட்டுமின்றி சூடாக்கிய 1 கப் பச்சை வாழைப்பழத்தில் 3.6 கிராம் நார்ச்சத்து உள்ளது, எனவே உடல் எடையை குறைக்க விரும்பு வோர் இதனை எடுத்துக்கொள்ளலாம்.
மஞ்ச வாழைப்பழத்துடன் ஒப்பிடுகையில் பச்சை வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் சத்துள்ள து, ஒரு கப் பச்சை வாழைப்பழத்தில் 531 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது.
எனவே இதயநோயாளிகள் இதனை சாப்பிட வேண்டும், ஆனால் அதிகளவு பொட்டாசியம் சத்து சிலரின் உடலுக்கு பயனிளிக்காது என்ப தால் அதனை கருத்தில் கொள் ள வேண்டும்.
மேலும், இதில் விட்டமின் B6 நிறைந்துள்ளதால் உடலில் ஆக்ஸிஜனேற் றம் சிறப்பாக செயல்புரிய உதவுகிறது, மேலும் அது ஹீமோகுளோபின் உருவாவதற்கு விட்ட மின் B6 அவசியமான ஒன்றாகும்.

மேலும் விட்டமின் B6 இரத்ததில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
மேலும், சீரான பற்களின் வளர்ச்சிக்கு பச்சை வாழைப் பழம் சாப்பிட வேண்டிய ஒன்றாகும்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...