Friday, January 6, 2017

*திடீரென்று கண் இமைகள் துடிப்பது ஏன்?* -மருத்துவ அறிவியல் கூறும் வியத்தகு தகவல்கள்

கண்களின் மெல்லிய நரம்புகளையும், தசைகளையும் பாதிக்கும் வகையி ல் தொடர்ச்சியாக நடந்து கொண்டால், கண்கள் துடிக் கும். சில சமயங்களில் வெட்டி இழுப்பது போலவும் இருக்கும். கண்கள் துடிப்பதற்கு மயோகீமியா என்று மருத்துவ துறையில் அழைப்பார்கள்.
குடிப்பழக்கம், சோர்வு, கண்கள் வறண்டுபோவதால், மன அழுத்தம், அதிகமாய் காபி குடிப்பது, சரிவிகித சத்துக்களின் பற்றாக் குறை, அலர்ஜி, வெகுநேரம் கம்ப்யூட்டரை உற்றுபார்ப்பது, படித்துக்கொண்டேயிருப்பது இதுபோன்று, கண்களுக்கு அதிகம் சிரமம் கொடுத்தால், சரியாக தூங்காமல் இருந்தால், மருந்துகளின் பக்க விளைவுகள் ஆகியவற்றினால் ஏற்படும். குடிப்பழக்கமும் முக்கிய காரணமாகும்.
நீண்டநாள் கண் துடிப்போ, வெட்டி இழுப்பதுபோலவோ இருந்தால், அது மூளை சம்பந்தப்பட்ட கோளாறாகவும் இருக்கலாம்.
வெறும் கண்கள் துடிப்பதோடு அல்லாமல், கண்கள் சிவந்து போனாலோ, கண்களில் எரிச்சல், அல்லது நீர் வடிதல், மற்றும் மேல் இமை தொங்கிக் கொண்டு வந்தாலோ, நிலைமை மோசமாக உள்ளது என அர்த்தம். உடனடியாக கவனிக்க ப்பட வேண்டிய அவசியம்.
கண் துடித்தலுக்கு சிகிச்சை:
கண் துடிப்பிற்கு, நன்றாக தூங்கி, கண்களுக்கு போதிய ஓய்வு கொடுக்கும்போது அது தானாகவே போய்விடும் அல்லது கண்களுக்கு வெதுவெதுப்பான ஒத்தடம் தந்தாலும் நரம்புகளின் இறுக்கம் தளர்ந்து, துடிப்பது நிற்கும்.
ஆனால் இதுவே நீண்டநாட்களுக்கு தொடர்ச்சியாக இருக்கும்போது பொடாக்ஸ் ஊசி செலுத்துவதன் மூலம் சரி செய்யலாம், அல்லது அறுவைசிகிச்சையில், பிரச்சனைக்குரிய சில நரம்புகளையும், தசைகளையும் வெடி விடுவார்கள். இதனால் வெட்டி இழுக்கும் பிரச்சனைக்கும் மற்றும் கண் துடிப்பிற்கும் தீர்வு கிடைக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...