Monday, January 2, 2017

தீண்ட தகாதவங்களா?


நீதிபதி:
உங்கள் கடையில் இரட்டை டம்ளர் முறை உள்ளதா?
கடைக்காரர்:
நிறைய டம்ளர் இருக்குங்கய்யா.
நீதிபதி:
அதில்லை தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்கு என தனியாகவும் ஆதிக்கசக்தி மக்களுக்கும் என தனி தனி டம்ளர்ல கொடுப்பீங்களா?
கடைகாரர்:
ரெண்டு பேரும் ஒரே நேரத்தில் வந்தா தனித்தனியா டம்ளர்லாதான் கொடுப்பேங்க.
நீதிபதி:
அது தீண்டாமை சட்டப்படி குற்றம்னு தெரியாதா?
கடைக்காரர்:
அய்யா ஒரே டம்ளரில் ரண்டு பேருக்கும் கொடுத்தா எப்படிங்கையா குடிப்பாங்க?
நீதிபதி:
வேண்டுமென்றே குழப்புகிறீர்கள்.
தாழ்த்தப்பட்டவர்களுக்கு என தனி டம்ளர் வச்சிருக்கீரீர்களா?
கடைகாரர்:
அய்யா நான் சொந்தமா முதல் போட்டு கடைவச்சிருக்கேன்.என் கடையில் வியாபாரம் எப்படி பண்ணுவது என்பது என் விருப்பம்.நான் வித்தியாசமா ரண்டு டம்ளர்ல கொடுக்கரது அவங்களுக்கு அவமானம்னா வேறகடைக்கு போலாமே, என்னை இப்படித்தான் கொடுக்கனும்னு சொல்ல இவங்க யாரு?
நீதிபதி:
குற்றத்தை ஒப்புக்கொண்டதால் தண்டனை விதிக்கிறேன்.
கடைக்காரர்:
சரிங்கையா,எனக்கு அவசரமா பாத்ரூம் போகனும் உங்க பாத் ரூம்க்கு போகட்டுங்களா?
நீதிபதி:
அங்கெல்லாம் போகக்கூடாது.பப்ளிக்நு தனியா இருக்கு அங்கதான் போகனும்.
கடைக்காரர்:

இங்க மட்டும் எதுக்கு ரண்டு பாத் ரூம்.அப்ப நாங்க தீண்ட தகாதவங்களா?
போலீஸ்காரய்யா நீதிபதிமேல கேஸ் போடுங்க
.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...