Sunday, January 1, 2017

ஆண்களின் உடல் நலம் கெடுவதற்கு முக்கியமான காரணங்கள்.

1. சக்தியை அதிகமாகச் செலவழிப்பது.
2 ஓய்வு இல்லாமல் உழைப்பது.
3. வேளைத் தவறிச் சாப்பிடுவது.
4. ஓட்டல்களுக்குப் போவது.
5. பணக் கவலை, மனக் கவலை .
6. தொத்து நோய்களை எதிர்க்கும் சக்தி உடம்பில் இல்லாதது.
ஆண்களுக்கு இடை இடையே சேஞ்ச் தேவை.
தொடர்ந்து மூளை வேலை செய்து கொண்டிருக்கவோ,
தொடர்ந்து உடம்பு வேலை செய்து கொண்டிருக்கவோ
அனுமதிக்கக் கூடாது.
தூங்குதல்,
நண்பர்களோடு அளவளாவுதல்,
பிரச்சனைகளை மறந்து சிறு விளையாட்டுக்களை விளையாடுவது,
மற்றவர்களிடம் மனம் விட்டு பேசிச் சிரித்தல்,
வெவ்வேறு இடங்களுக்கு அடிக்கடி போதல்,
நடனம், நாடகம், கச்சேரி,
சினிமா பார்த்தல்
ஆகியவைகள் ஆண்களுக்கு அவசியம்.
இல்லாவிட்டால் உடம்பு நன்றாக இருக்காது.
திராட்சைப் பழச்சாறு,
ஆப்பிள்,
பாதாம் பருப்பு,
வெண்டைக்காய்ச் சூப்பு ஆகியவைகளை
அடிக்கடி சாப்பிட்டு வந்தால்,
மூளையும், உடம்பும் எப்போதும் தெம்புடன் இருக்கும்.
வயிற்றில் பூச்சிகள் இருக்கும் .
பூச்சிகள் வயிற்றில் இருக்க விடக் கூடாது.
இதை அழிக்கும் மருந்துகளை மருத்துவர் ஆலோசனைப்படி அடிக்கடி சாப்பிட்டு,
வயிற்றிலுள்ள பூச்சிகளைக் கொல்ல வேண்டும்.
இல்லாவிட்டால்,
களைப்பும், ஞாபக மறதியும் அதிகமாக இருக்கும்.
காலையில் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.
மாலையிலும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.
காலையிலும் மாலையிலும் குளிர்ந்த நீரில் குளித்தால்
உடம்பு சுறுசுறுப்பாக இருக்கும்.
தெம்பாக இருக்கும்.
நலமாக இருக்கும்.
வெந்நீரில் குளித்தால் சோர்வு தரும்.
நோயாளிகள் மட்டுமே வெந்நீரில் குளிக்க வேண்டும்.
மலச்சிக்கல் இருக்க வேக்கூடாது.
மலச்சிக்கல் பலச்சிக்கல்.
முறையற்ற உணவும்,
உணவு கொள்ளும் தவறான காலமும்,
மலம் கழிக்க வலுவில் முயற்சி மேற்கொள்ளாததுமே மலச்சிக்கலுக்கும் காரணம்.
காபி, டீ, அடிக்கடி சாப்பிடக்கூடாது.
அதிக நேரம் கண் விழிக்கக் கூடாது.
நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும்.
குறிப்பிட்ட இரண்டு நேரத்தில்,
இரண்டு தடவை மலம் கழிக்க வேண்டும்.
அரைக்கீரை,
முளைக்கீரை,
மணத்தக்காளிக் கீரை,
அகத்திக்கீரை,
புளிச்சக்கீரை,
பொன்னாங்கன்னிக் கீரை,
சிறுகீரை,
ஆகிய கீரைகளில் தினசரி ஒன்றைச் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
சாப்பிட்டவுடன் பூவன் பழத்தைச் சாப்பிடலாம்.
இல்லாவிட்டால் பேரீச்சம் பழத்தைச் சாப்பிடலாம்.
ஆக, சாப்பிட்டவுடன் ஏதாவது ஒரு பழத்தைச் சாப்பிட வேண்டியது அவசியம்.
மிகச் சிறப்பாக நீண்ட காலம் வாழும் ரகசியம்
உண்ணுதல் பாதி
இரட்டிப்பு நடை
மும்மடங்கு சிரிப்பு
மற்றும்
அளவிலா அன்பு செலுத்துதல்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...