Tuesday, January 3, 2017

மன அழுத்தத்திலிருந்து விடுபட நீங்கள் உண்ண‍ வேண்டிய உணவுகள்


உணவு என்பது நாம் உயிர் வாழ நமக்கான நாடி துடிப்பாக அமைகிற து. ஆனால் அதற்கு ஆரோ க்கியமான உணவை உண்ண வேண்டும். உண்ணு ம் உணவே மருந்தாக அமையும் என்று நம் முன் னோர்கள் சொல் லுவார்கள் அல்லவா? ஆம், அது நூற்றுக்கு நூறு உண்மையாகும். உணவை கொண் டே பல வியாதிகளை குணப்படுத்தலாம். அப்படி சில வகை உணவுகளால் உங்கள் மனதை அமைதி படுத்தமுடியும் என்பதை நீங்கள் அறிவீர்களா?
உண்ணும் உணவு எண்ணத்தையும் உணர்ச் சிகளையும் பாதிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? சரி, இப்போது மனதை அமைதிபடு த்தி உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கடுமையான மன அழுத்தத்தி லிரு ந்து உங்களை விடுவிக்க உதவும் சிறந்த‌ 15 உணவுகளை பற்றி கொஞ் சம் பார்க்கலாமா…
நட்ஸ்
நட்ஸில் செலினியம் என்ற கனிமம் உள்ள து. இந்த கனிம குறைபாட்டினால் சோர்வு மற்றும் படபடப்பு ஏற்படும். அதனால் ஒரு கை, நட்ஸ்களை உண்டால் மனம் அமைதி யாக இருக்கும்.
சாக்லெட்
சாக்லெட்டில் உள்ள அனான்டமைன், மூளையில் உள்ள டோபமைன் அளவை கட்டுப்பாட்டில் வைக் கும். அதனால் மனம் அமைதி பெற்று, மன அழுத்தம் நீங்கும்.
கீரைகள்
கீரைகளில் மெக்னீசியம் வளமையாக உள்ளது. இது மனதில் ஏற்படும் அழுத்தத் தைக் குறைக்கும்.
பாஸ்தா
முழு தானியத்தில் இருந்து தயாரிக்கப்படும் பாஸ்தாவில் மெக்னீசியம் வளமையாக உள்ளது. இதன் குறைபாட்டி னால்தான் மன அழுத்தம் அதிகரிக்கிறது.
முழு தானியத்தில் இருந்து தயாரிக்க ப்படும் ரொட்டிகள்
முழு தானியங்களின் மூலம் தயாரிக்கப்படும் ரொட்டிக ளுக்கும் பாஸ்தாவை போன்ற குண ங்கள் உண்டு. அதனால் உணவில் சாண்ட்விச், ரொட்டி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.
ப்ளூ பெர்ரி
பெர்ரிப் பழங்களில் ஒன்றான ப்ளூ பெர்ரியில் ஆன்டி – ஆக் ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்து ள்ளது. இது மன அழுத்த த்தை நீக்கி அமைதி யை ஏற்படுத்தும்.
பாதாம்
தினமும் பாதாம் சாப்பிட்டு வந்தால், மன அழுத்தத்தில் இரு ந்து விடு படலாம். ஏனெனில் இதில் ஜிங்க், வைட்டமின் பி12 அதிகம் உள்ளது. இது மனதை டென்சன் ஆகவிடாமல் பார்த் துக் கொள் ளும்.
க்ரீன் டீ
காலையில் க்ரீன் டீ குடித்து வந்தால், அதனால் கிடைக்கும் மன அமைதி வேறு எதிலும் கிடை க்காது.
மீன்
மீன்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் வளமையாக உள்ளதால், அது மூளைக் கு செலினியம் மற்றும் ட்ரிப்டோபை னை அதிகரிக்கும். அதனால் மனது அமைதியாக இருக்கும்.
ஓட்ஸ்
உடலில் உள்ள செரோடோனின் அளவை ஓட்ஸ் அதிகரிக்க வைப்பதால், அது உடலில் உள்ள கொழு ப்பின் அள வை குறைத்து, மனதை அமைதிப்படுத் தும்.
பால்
என்ன ஆச்சரியமா? ஆம், பாலில் ட்ரிப்டோபன் இருப்பதால் செரோ டோனின் உற்பத்தியை அதிகரிக்க செய்யும். அது மன அழுத்தத்தைக் குறைக்கும்.
ப்ராக்கோலி
ப்ராக்கோலியில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. அதன் அளவு குறைந்துவிட்டால்தான், சோர்வு ஏற்பட்டு மன அழுத்தம் அதிகரிக் கும்.
கிவி பழம்
ட்ரிப்டோபனை செரோடோனினாக மாற்றும் திறன் கிவி பழங்களு க்கு உள்ளது. அதனால் இந்த பழத்தை சாப்பிட்டு வர மன அழுத்தம் குறையும்.
வாழைப்பழங்கள்
வாழைப்பழங்கள் உடலில் வாயு தொல்லையை குறை த்து, நாள் முழுவதும் மனதை அழுத்தமின்றி வைத்துக் கொள்ள உதவும்.
அரிசி சாதம்
பொதுவாக கார்போஹைட்ரேட் சாந்தப்படுத்தும் குணத் தை உடை யவை. அதனால் சாதத்தை தினமும் தவறாமல் சாப்பிடுங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...