Wednesday, March 22, 2017

அழகான, பொலிவான முகம் பெற . . . – சில குறிப்புகள்

அழகான, பொலிவான முகம் பெற . . . –  சில குறிப்புகள்

அழகான, பொலிவான முகம் பெற சில குறிப்புகள்
1. முல்தானிமெட்டி பவுடரை பன்னீர் விட்டுக் கலந்து முகத்தில்
தடவி, 1 மணி நேரம் ஊறிய பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

2. பன்னீர் ரோஜா இதழ்களை அரைத்து முகத்தில் தடவி, 1/2 மணி ஊறிய பின் தண்ணீர் விட்டு அலம்பி வந்தால் முகம் கலர் மாறும்.
3. தக்காளியை அரைத்துப் பூசி, ஊறியபின் அலம்பினால் முகம் பொலிவு பெறும்.
4. கரும்புள்ளி மறைய வேப்பங் கொழுந்தையும், மஞ்சளையும் அரைத்துப் பூசி, ஊறியபின் கழுவினால் மறைந்துவிடும்.
5. கண்ணிற்கு கீழ் உள்ள கரு வளை யம் மறைய, உருளைக்கிழங்கை ஸ்லைசாக வெட்டி கண்ணின் மீது வைத்து வந்தால் கண் குளிர்ச்சி யடையும். நாளடைவில் கருவளை யம் மறைந்துவிடும்.
6. முகத்தில் பூனை முடி வளர்ந்திரு ந்தால் அதற்கு கஸ்தூரி மஞ்சள் தூ ளைப் பூசி ஊறவைத்து அலம்பினா ல் பலன் கிடைக்கும்.
அழகுக் குறிப்புகள்
1. உதடுகள் அழகாக சிவப்பு நிறமாக வேண்டுமானால், கிளிசரின் மற்றும் எலுமிச்சம் பழச்சாறை சம அளவு சே ர்த்து தூங்கப்போகும்போது உதடுக ளில் தேயுங்கள். காலையில் எழுந்த தும் கழுவி விடுங்கள்.- கடுக்காய், செம்பருத்திப்பூ, நெல்லிக்காய்ஆகிய வைகளை சமஅளவு எடுத்து தேங்கா ய் எண்ணெயில் காய்ச்சி கூந்தலில் தடவினால்முடி நன்றாகவளரும்.
2. முகத்தில் ரத்த ஓட்டம் அதிக மாகி பளிச்சென்ற வசீகரம் கிடை க்க வேண்டுமானால், ஒரு தேக் கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி துளசிச்சாறு கலந்து தினமும் வெறும் வயிற்றில் குடியுங்கள். மூன்று மாதம் இதை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.
3. பல்லில் இருக்கும் மஞ்சள் நிற த்தைப் போக்க எலுமிச்சம் பழச் சாறும் உப்பும் கலந்து பற்களை தேயுங்கள்.
4. கஸ்தூரி மஞ்சளையும் சந்தனத் தையும் அரைத்து உடலில் பூசுங்க ள். அரை மணி நேரம் கழித்து ஒரு மேஜைக்கரண்டி எலுமிச்சம் பழச் சாறு கலந்த நீரில் குளியுங்கள். இவ்வாறு செய்தால் தோலுக்கு நல்ல நிறமும் தோற்றமும் கிடை க்கும்.
5. கற்கண்டு, தேன், கேரட் சாறு, வெள்ளரிக்காய்ச்சாறு ஆகியவைகளை சம அளவு சேர்த்து சாப் பிட்டால் முகஅழகு அதிகமாகும்.
6. தினமும் தூங்கச்செல்லும் முன்பு ஆமணக்கு எண்ணெயை இமையில் தேய்த்தால் இமை நன்றாக வளரும்.
7. முகத்தில் பால் ஆடை யைதேய்த்து அது காயும்போது லேசான சுடுநீரில் முகத்தை கழுவினால் முக அழகு பொலிவு பெறும்.
8.தினமும் கேரட் சாப்பிடவது தோல் அழகுக்கு நல்லது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...