Tuesday, March 21, 2017

பொருளாதர அறிவு பெட்ரோலிய நிறுவனங்களுக்கு தெரியவில்லையா ?

நேற்று நான் ஒரு மளிகை கடையில் 100 ரூபாய் கொடுத்து ஒரு கிலோ 
பாசிபருப்பு வாங்கினேன், 
அதற்கான விலை 72 ரூபாய் போக 
மீதி 28 ரூபாய் கடைக்காரர் கொடுத்தார் 
வாங்கி வந்தேன்,
பிறகு காய்கறி கடையில் ஒருகிலோ வெங்காயம் வாங்கினேன், 50 ரூபாய் கொடுத்தேன், வெங்காயத்திற்கான விலை 30 ரூபாய் போக மீதி 20 ரூபாய் கடைக்காரர் கொடுக்க வாங்கி வந்தேன்,
பிறகு ஒரு டீக்கடையில் ஒரு டீ குடித்து விட்டு 10 ரூபாய் கொடுத்தேன் ,
டீ க்கான விலை 8 ரூபாய் போக மீதி 2 ரூபாயை கடைக்காரரிடம் வாங்கி வந்தேன்,
பிறகு பைக் கிற்கு பெட்ரோல் போட பெட்ரோல் நிலையம் சென்றேன்
ஒரு லிட்டர் பெட்ரோல் நிரப்ப சொன்னேன்,
பிறகு விலை என்ன என்ற பொழுது 75 ரூபாய் என்றார்கள்
நான் அங்கே Price list ஐ பார்த்தேன்
அதில் 74 ரூபாய் 60 பைசா என்று இருந்தது,
அதனால் நான் மீதி 40 பைசா கேட்டேன்
அதற்கு அவர்கள்
40 பைசா என்ற பணமதிப்புடைய
நாணயமோ, பணத் தாளோ இல்லை என்றார்கள் ,
இப்பொழுது என்னுடைய கேள்வி என்னவென்றால் நடைமுறையில்
இல்லாத பண மதிப்பில்
எந்த அடிப்படையில் இந்திய
பெட்ரோலிய நிறுவனங்கள் விலை
நிர்ணயம் செய்கின்றன?
இதை இந்திய அரசு கண்டுகொள்ளாமல்
இருப்பது ஏன் ?
ஒரு மளிகை கடைக் காரருக்கும்,
காய்கறி கடைக் காரருக்கும்
டீக்கடைக் காரருக்கும் தெரிந்த
பொருளாதர அறிவு
பெட்ரோலிய நிறுவனங்களுக்கு தெரியவில்லையா ?
இல்லை வேண்டுமென்றே நூதனமுறையில் கொள்ளையடிக்கும் தீய எண்ணத்தில் செயல்படுகின்றனவா ?
இது பெட்ரோலிய நிறுவனங்கள் மட்டுமல்ல
சில மருந்து பொருள்களிலும் இது போன்ற நிலைமை நீடிக்கிறது,
50ml டெட்டால் 22 ரூபாய் 22 பைசா,
Dexyl என்ற இருமல் டானிக் 60 ml விலை -- 49.ரூபாய் 90. பைசா,
Cipla நிறுவன paracip டானிக் 60 ml
விலை 21 ரூபாய் 42 பைசா
இது போன்ற மீதி பணம் கொடுக்க முடியாத அளவில் பணமதிப்பில்லாத 10 பைசா 20 பைசா 60பைசா நாணயங்கள்
அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யும் இது போன்ற நிறுவனங்களை
தண்டிக்க இந்திய நுகர்வோர் நல
சட்டத்தில் இடமில்லையா ?
இந்திய நுகர்வோர் நல அமைப்புகளே கொஞ்சம் கண்திறந்து பாருங்கள் ! .

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...