Monday, March 27, 2017

முக்கியமான பேப்பர் (Money).....

நேற்று பழைய வாக்காளர் அடையாள அட்டையை புதிய வண்ண வாக்காளர் அடையாள அட்டையாக மாற்ற சென்று இருந்தேன். இ-சேவை மைய பணியாளரின் செயல்பாடுகள் மிகுந்த வருத்தம் அளித்தது. இருந்தது 4 பேர் தான். சந்தேகம் கேட்டால் எரிந்து விழுகிறார். இதற்கு காவல்துறை அதிகாரியும் விலக்கல்ல. எனக்கு முன் நின்று கொண்டு இருந்தவர் டிஎஸ்பி. அவருக்கும் இதே நிலை. கொஞ்சம் இன்முகத்தோடு பேசினால் என்ன? விவரம் தெரியாத நிலையில், கும்பல் இல்லாத நிலையில் ஏனிந்த செயல்பாடு?
பின்பு கார்ப்பரேஷன் ஆபிஸ் சென்றேன். அங்கு இருந்த ஊழியர் எனக்கு வேண்டிய தகவல்களை 10 நிமிடங்களில் தந்து விட்டார். மேலு‌ம் அவ‌ர் என்ன செய்ய வேண்டும் என்பதையும் விளக்கினார். என்ன தான் படித்து இருந்தாலும் அரசாங்கம் தொடர்பான பணிகளில் சந்தேகம் வருவது வழக்கம். சில அரசு ஊழியர்கள் திருந்த வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...