Wednesday, March 22, 2017

இன்றைய (கசக்கும்) உண்மைகள்…!!!

1. பக்கத்துக்கு வீட்டில் இருப்பவரிடம் முகம்கொடுத்து பேசுவ தில்லை. பக்கத்து கிரகத்தில்மனித ன் வாழ வாய்ப்பு இருக்கா என்ற ஆராய்ச்சி நடக்கிறது.
2. கையில் விலை உயர்ந்த பெரிய கடிகாரம். அதில் மணி பார்ப்பதற் கு கூட நேரம் இருப்பதில்லை.
3.ஊருக்கு வெளியில் பெரிய
பங்களா. வீட்டில் இருப்பது 2 பேர்.
4. மருத்துவ துறையில் மாபெரும் வளர்ச்சி. நோயாளிகள் எண்ணிக் கை நாளுக்குநாள் அதிகம்.
5. பட்டப் படிப்புகள் நிறைய. பொது அறிவும் உலகஅறிவும் மிகக் குறை வு.
6. கை நிறைய சம்பளம். வாய் நிறையச் சிரிப்பில் லை. மனசு நிறைய நிம் மதி இல்லை.
7. புத்திசாலித் தனமான அறி வாளித்தனமான விவாதங் ள் அதிகம். உணர்வுப் பூர்வமான உரையாடல்களும், சின்ன சி ன்ன பாராட்டுகளும் குறைவு.
8. சாராயம் நிறைந்து கிடக்கு. குடி தண் ணீர் குறைவாய் தான் இருக்கு.
9. முகம் தெரிந்த நண்பர்களை விட முக நூல் நண்பர்களே அதிகம்.
10. மனிதர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்து இருக்கின்றனர். மனிதம் ஆங்காங்கே சில இடங்களில் மட்டும் ஒட்டிக் கொண்டிருக்கிறது

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...