Tuesday, March 21, 2017

மாமனிதர் மொரார்ஜி தேசாய் !!

பிரிக்கப்படாத பழைய பம்பாய் மாநிலத்தின் முதல்வராக தேசாய் இருந்த போது, அவருடைய அன்பு மகள் இந்து, மருத்துவக் கல்லூரியில் இறுதித் தேர்வு எழுதி முடித்தாள். முதல் வகுப்பில் தேர்ச்சி பெறும் தகுதி மிக்க இந்து, தேர்வில் தவறிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதை மறுத்த சக மாணவிகள் இந்துவை தேர்வுத் தாளின் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும்படி வற்புறுத்தினர். ஆனால், தேசாய் அதை அனுமதிக்கவிலை.
‘மறுமதிப்பீடு செய்து, தாளைத் திருத்திய ஆசிரியரின் தவறு கண்டுபிடிக்கப்பட்டு, உரிய மதிப்பெண்களைப் பெற்று.. உன் தகுதி காரணமாகவே நீ தேர்ச்சி அடைந்தாலும், முதல்வராக உள்ள நான் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக சமூகம் அர்த்தப்படுத்திப் பழிதூற்றும். இந்த முயற்சியைக் கைவிட்டு அடுத்து வரும் தேர்வுக்கு உன்னை ஆயத்தம் செய்வது தான் சரியானது என்று தேசாய் சொன்னதும், மனமுடைந்த இந்து தற்கொலை செய்து கொண்டார். கீதையின் பாதையில் வாழ்க்கையை வகுத்துக் கொண்ட மொரார்ஜி மகளின் இழப்பை மெளனமாகத் தாங்கிக் கொண்டார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...