Thursday, March 23, 2017

ஜெயலலிதா மரணத்திற்கு, திட்டமிட்ட கொலையே காரணம் எனக்கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவை கொலை செய்து விட்டதாக, சிறையில் உள்ள சசிகலாவுக்கு பலர் கடிதங்கள் எழுதியுள்ளதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.அதில், ஜெயலலிதா மரணத்திற்கு, திட்டமிட்ட கொலையே காரணம் எனக்கூறப்பட்டுள்ளது. மிரட்டல் விடுத்து எந்த கடிதமும் இல்லை. சசிக்கு வரும் கடிதத்தை, இளவரசி முதலில் வாசித்து பார்க்கிறார். பின்னர் தான் அது சசியிடம் சென்றது. ஆரம்பத்தில் இந்த கடிதங்களை வாசித்த சசிகலா, கடுமையாக திட்டப்படுவதைத் தொடர்ந்து, கடிதத்தை வாசிப்பதையே நிறுத்திவிட்டார். கடிதங்கள், சென்னை, திருச்சி, தர்மபுரி, மதுரை, சேலம், திண்டுக்கல், கரூர், விழுப்புரத்தில் இருந்து வந்துள்ளன.நாங்கள் பெரிதும் நேசித்த எங்கள் தலைவியை நீங்கள் கொன்று விட்டீர்கள். நீங்கள் நம்பிக்கையில்லாத நபர், நன்றியில்லாதவர், முதுகில் குத்திவீட்டீர்கள். உங்களுக்கு வாழ்க்கை அளித்தவரை ஏமாற்றிவிட்டீர்கள். நீங்கள் செய்த கெட்ட காரியத்திற்கான பலனை நீங்கள் அனுபவித்தே ஆக வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் செய்த ஒவ்வொரு செயலுக்கான விளைவை சந்தித்தே ஆக வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. கடிதங்கள் அனைத்தும் 'Sasikala,Central Prison, Parappana Agrahara, Bangalore 560100' என்ற முகவரிக்கு வருகின்றன. இவ்வாறு அந்த சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...